tag:blogger.com,1999:blog-36726894952907090372024-03-08T08:52:20.660-08:00ennapadhivugalUshahttp://www.blogger.com/profile/00179239922869639391noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-3672689495290709037.post-74263275328981117102012-10-22T09:20:00.006-07:002012-10-22T20:04:31.386-07:00நானும் கச்சேரிக்குப் போகிறேன் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
எங்கள் ஊர் பக்கப் பேச்சில் ஒரு வசனம் உபயோகப்படுத்துவார்கள்: 'எங்கள் அகத்துக்காரரும் கச்சேரிக்குப் போகிறார் " என்று சொல்வார்கள்.' கச்சேரி என்பது இந்தி கச்சேரி அதாவது கோர்ட்டு. பந்தாவாக வக்கீல் எல்லாம் கச்சேரிக்குப் போய் வேலை செய்து வருகையில் எடுபிடியாய் அவர்கள் கூடப் போய் வருவார்களே அது போல் பெயருக்கு ஒரு உத்தியோகம் செய்பவர்களைப் பற்றிக் கிண்டலான பிரயோகம் இது. தஞ்சாவூர் கிண்டல் பேச்சுதான் பிரசித்தம் ஆச்சே.<br />
<br />
இதைப்பற்றி இப்போ என்ன என்கிறிர்களா? அங்கேதான் விஷயமே இருக்கு. இன்றைக்கு நானும் கச்சேரிக்குப் போகிறேன் என்று ஒரு சமத்தான வேலை செய்தேன். இது வேறே விதமான் கச்சேரி - பாட்டுக்கச்சேரி. பயப்பட வேண்டாம், கேட்கத்தான்.<br />
இதற்கு முன்பு நான் கச்சேரிக்குப் போகும் அழகை உங்களுக்கு விவரமாய் சொல்லவேண்டும்<br />
<br />
இங்கே பெங்களூரில் காயன சமாஜத்தில் கடந்த வருடம் மெம்பர் ஆனேன். அதிலிருந்து முடிந்த வரையில் கச்சேரிகளைத் தவற விடுவதில்லை. அதுதவிர வேறு சபாக்களின் கச்சேரிகளும் இந்த ஆடிட்டோர்யத்தில் நடக்கும். பெரும்பாலும் இவற்றுக்கு டிக்கெட் எதுவும் கிடையாது. கொஞ்சம் சீக்கிரமே போனால் சீட் கிடைக்கும். இல்லை என்றாலும் நீள விராந்தாவில் சேர்கள் போட்டுக் கொடுப்பார்கள். பாடகரைப் பார்க்க முடியாது. ஆனால் சுகமாக கேட்டுவிட்டு வரலாம். அப்பப்போ பின்னணிக்கு பெங்களூர் பஸ் ஹாரனும் சேர்ந்து ஒரு ப்யூஷன் எபெக்ட் கிடைக்கும்.<br />
<br />
இதெல்லாம் எளிதாய் தோன்றுகிறதா? ஒரே ஒரு கஷ்டம் என்னவென்றால் சபா இருக்கும் இடம். இந்த சபா 1905ல் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது மொத்த பெங்களூரையும் நடையிலேயே 2 மணி நேரத்தில் சுற்றிவந்து விடலாம். நல்ல ஷஹரான இடத்தில் சபாவை ஆரம்பித்திருக்கின்றனர். இன்றைய பெங்களூரில்இந்த இடத்துக்கு காரில் போனால் ஒரு மைல் துரத்தில் நிறுத்திவிட்டு நடக்கவேண்டும். அத்தனை போக்குவரத்துள்ள இடம் இது. பிரதானமான மார்க்கெட்டுக்கு போகும் சாலை இது. சபா வாசலில் இருக்கும் பார்க்கிங்கில் சபா ப்ரெஸி டென்ட், செக்ரட்டரி, இதர கமிட்டி உறுப்பினர்களுடைய வாகனங்களை நிறுத்தத்தான் இடம் உண்டு, எங்கள் வீ டு இருக்கும்இடத்திலிருந்து சபா 8- 9` கி மீதான் என்பதால் முதல் கச்சேரிக்கு ஒரு ஆட்டோவில் போகத் தீர்மானித்தேன். அங்கங்கே மெட்ரோ ரெயிலுக்காக கட்டுமான வேலை நடந்துகொண்டிருப்பதில் அங்கும் இங்கும் சுற்றி ( எனக்கு தலை சுற்றி) அரை மணி நேரமாச்சு போவதற்கு . மீட்டர் 110 ரூபாய் காண்பித்தது. இந்த அநீதிக்குத் துணை போகக் கூடாது என்று அடுத்த கச்சேரியிலிருந்து பஸ் ரூட்களை கண்டு பிடித்து நேரத்தே கிளம்பி பஸ்சில் போக ஆரம்பித்தேன்.<br />
<br />
6 மணிக்கே கச்சேரிகள் ஆரம்பிக்கும். 4 மணிக்குள் இரவுக்கான சமையல் வேலைகளை எல்லாம் முடித்து விட்டு ( திரும்பி வந்த உடனேயே பசிக்குமே. நடுவில் வீ ட்டில் பிறர் சாப்பிட வேண்டுமே) நாய்களுக்கும் உணவு கொடுத்துவிட்டு, 4. 30 க்குள் தயாராகி வீட்டை விட்டு வெளியேறுவேன். கையில் ஒரு பை. அதில் பர்ஸ், அப்புறம் சில்லரை பர்ஸ் தனியே ( இந்த ஊ ரில் பஸ் கண்டக்டர்களிடம் சில்லறையே இருக்காது ), ஒரு தண்ணி பாட்டில், கர்சீ ப், ஒரு சின்ன விசிறி , அவசரப்பசிக்கு 4 பிஸ்கட், கண்ணாடி, ஒரு புத்தகம், ஒரு குடை, செல்போன் இத்தனையும். வீ ட்டிலிருந்து பஸ் நிறுத்தம் 10 நிமிட நடை, அந்த முனையிலும் சபாவுக்கு 6-8 நிமிடம் நடக்கணும். இதனால் செருப்பெல்லாம் சரிப்படாது என்று காலில் வாக்கிங் ஷூ. நல்ல பிரிண்டட் சில்க் புடவை ( என்ன இருந்தாலும் கச்சேரிக்குப் போவதற்கு ஒரு பத்ததி உண்டில்லையா?) , காலில் ஷூ, கையில் மேற்சொன்ன அத்தனையும் அடங்கிய ஒரு பெரிய பை இதுதான் நான் கச்சேரிக்குப் போகும் கோலம்.<br />
<br />
இதே கோலத்தில்தான் இன்றும் கிளம்பினேன். போன வாரம் சபாவுக்குப் போன போது கிடைத்த ஒரு கச்சேரி நோடீஸில் 22ம் தேதியிலிருந்து 25 ம் தேதி வரையிலான கச்சேரிகள் பற்றிய விபரமும், எல்லோருக்கும் அனுமதி உண்டு என்றும் பார்த்தேன். முதல் கச்சேரி 22ம் தேதி டி . எம் கிருஷ்ணா . இன்றைக்கு. நாளைக்கு சரஸ்வதி பூஜை. வீட்டிலும் நிறைய வேலைகள் இருந்தன. ஆனாலும் விட மனசு வரவில்லை. சரி ரெண்டு மணி நேரமாவது கேட்டுவிட்டு வந்துவிடலாம் என்று மேற்படி ஆயத்தங்கள் எல்லாம் செய்துகொண்டு சரியாய் 6 மணிக்கு சபா வாசலில் போய் நின்றேன். வாசலில் கார்கள் அவ்வளவு இல்லை. தசரா இல்லையா. அதான் கூட்டம் கம்மி என்று கொஞ்சம் சந்தோஷத்துடன் உள்ளே போனேன். விறாந்தாவில் சுவாமி சிலைகளுக்கு முன் விளக்கெல்லாம் ஏற்றி பூ போடு வைத்திருந்தார்கள். அப்புறம் நீளவாக்கில் மேஜைகள் போட்டு கமிட்டி உறுப்பினர்கள் எல்லாம் ஏதோ சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். ஆயுத பூஜை போட்டுவிட்டு நல்ல டிபன் போலிருந்தது. உள்ளே கால் வைத்தவள் 'ஒ சாரி' என்று வெளியே வந்தேன்.<br />
<br />
பின்னாலே சபா ஊழியர் ஒருத்தர் 'ஏனு மேடம்' என்று கேட்டுக்கொண்டு வந்தார். 'கிருஷ்ணா கச்சேரி...' என்று ஆரம்பித்தேன். 'அது அடுத்த மாசம்னா .. . 28 அக்டோபர் லேர்ந்து நம்ம சபா வருஷாந்திர இசை மாநாடு. அப்புறம் அடுத்த மாசம் அந்த ப்ரோக்ராம். ' என்றார்.<br />
<br />
அசடு வழிந்தேன். தலையிலும் அடித்துக்கொண்டேன். சரி வந்ததற்கு பாத்ரூம் போய் விட்டுப் போகலாம் என்று பின்பக்கம் போக கால் வைத்தேன். 'அந்தப்பக்கமும் பூட்டி இருக்கு' என்றார் ஒரு கமிட்டி மெம்பர். என்னைப் பார்த்தால் அவருக்குக் கொஞ்சம் சந்தேகமாய் இருந்தது போல. அவரைச் சொல்லிக் குற்றமில்லை.<br />
<br />
இப்படியாகத்தானே நானும் இன்றைக்குக் கச்சேரிக்குப் போய் வந்தது.<br />
<br />
ஆனால் அங்கே இருக்கும் அழகான 4 கோவில்களில் நுழைந்து நிம்மதியாய் தரிசனம் செய்துவிட்டு வந்தேன். இன்றைக்கு ஒவ்வொன்றிலும் பிரமாதமான் அலங்காரம். 33 வருடங்களாய் பெங்களூரில் இருந்தும் பார்க்காத கோவில்கள்.<br />
அசட்டுத்தனமும இப்படி நல்லபடியாய் முடிந்தது.</div>
Ushahttp://www.blogger.com/profile/00179239922869639391noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3672689495290709037.post-46113727939583073412011-04-25T08:09:00.000-07:002011-04-25T23:26:50.445-07:00பாம்புக்கதைகள்பாம்பு என்றால் எனக்கு ரொம்ப பயம். இதில் என்ன புதுமை - எல்லோருக்கும்தான் பயம் என்கிறீர்களா? பலருக்கும் பாம்பைப் பார்த்தால்தானே பயம்? எனக்கு பாம்பு என்று எழுதிக் காட்டினாலே பயம். ஐந்து வயது இருக்கும் - அமாவாசை அன்று அம்மா சுவாமிக்கு முன் பாம்புக்கோலம் போட்டு தேங்காய் உடைத்து வைத்திருந்தாள். அந்தத் தேங்காயை தின்னப் பார்த்தபோது ‘ம்ஹ்ம். தேங்காயை தின்னக்கூடாது. பாம்பு கடித்துவிடும்’ என்று சொன்ன நினைவு. நைவேத்யத்துக்கு முன் தின்னக் கூடாது என்றாளா , என்ன சொன்னாள் என்பது சரியாய் நினைவில்லை. மனதில் அந்த வயதில் பதிந்தது அமாவாசை அன்று தேங்காய் தின்றால் பாம்பு கடித்துவிடும் என்ற தகவல். பின்னொரு அமாவாசை அன்று அதை மறந்து போய் தேங்காயைத் தின்று பல நாட்களுக்கு பயந்து நடுங்கியதும் நினைவிருக்கிறது. அந்த சமயத்தில்தான் இந்த பயமும் ஆரம்பித்ததோ என்னவோ. சமீப காலம் வரை பாம்பு என்று சொல்லக் கூட மாட்டேன் - ‘அது’ என்று தான் சொல்வேன்.<br />என் பயத்துக்குத் தகுந்தாற்போல சரியாய் ஒரு இடத்தில் எங்களது க்வார்டெர்ஸ் அமைந்தது. முதலில் வனாந்திரமாய் இருந்த இடத்தில் அரசாங்கம் தாராளமாய் 100 ஏக்கர் நிலம் ஒதுக்க அங்கேயே அலுவலகம் க்வார்டெர்ஸ் எல்லாம் கட்டிவிட்டார்கள். அப்புறம் என்ன, அவ்வப்போது ஊர்வன ஜந்துக்கள் எல்லாம் சுதந்திரமாய் தோட்டத்தில் ஊர, நாங்கள் நடுங்கிக்கொண்டே நடமாடுவோம். இந்தச் செடி வளர்த்தால் வராது அந்தக் கொடி போட்டால் வராது என்றார்கள். எல்லாம் செய்தும் சில நாட்கள் நன்றாய் உடம்பை நீட்டி முன் வெராந்தாவில் மத்தியான வெய்யிலில் ஒன்று பெரிதாய் படுத்திருக்கும். எனக்குக் குலை நடுங்கும்.<br />சுப்பிரமணிய ஸ்வாமிக்கு (முருகனுங்க, அரசியல்வாதி இல்லை) ஒவ்வொரு கிருத்திகை அன்றும் தேங்காய் உடைத்தால் கண்ணிலேயே படாது என்று என் சித்தி சொல்ல அதை செய்தேன். செய்த வரைக்கும் கண்ணில் படவில்லை என்பது நிஜம்தான்.<br />அப்புறம் சொந்த வீட்டுக்கு மாறியபின் இதைச் செய்ய விட்டுப்போய் நின்றே போச்சு. ஒருநாள் பார்த்தால் கிட்டத்தட்ட பதினைந்து அடிக்கு ஒன்று தோட்டத்தில். ஒரு அரைமணி படுத்துவிட்டு அப்புறம் நிதானமாய் பலாமரத்தில் ஏறிக் காலியாய் இருக்கும் பக்கத்து மனையில் போய் சுவாதீனமாய் படுத்துக்கொண்டது. இன்னொரு நாள் கம்ப்யூடெரிலிருந்து தலையை தூக்கி ஏதொ யோசனையுடன் ஜன்னலைப்பார்த்தால் அந்தப்பக்கம் மண்தொட்டியில் வைத்திருந்த செடியின் மேலெ ஒன்று தலையைத் தூக்கி நாக்கை நீட்டுகிறது. அரண்டு போய் ஜன்னலை அவசரமாய் சாத்தி கர்ட்டனை இழுத்துவிட்டு உள்ளெ போய் விட்டேன்.<br /><br />இந்த அழகில் ஒரு நண்பர் ஒரு கதையை அனுப்பி அதைத் தமிழில் மொழி பெயர்க்கச்சொன்னார். ’ஓ செய்கிறேனே’ என்று ஆர்வத்துடன் கதையைப் படித்தால் கதை முழுக்கப் பாம்புகள். ஆனால் அருமையான கதை. ஒவ்வொரு வர்ணனையும், சம்பவமும் சித்திரம் போல வார்த்தைகளால் வரைந்து அருமையான நடை.<br />கதை <a href="http://www.vondanmcintyre.com/McIntyre-MistGrassSand.pdf">இங்கே</a> - படித்துப் பாருங்கள்:<br />http://www.vondanmcintyre.com/McIntyre-MistGrassSand.<br /><br />என் மொழிபெயர்ப்பு (முதல் பகுதி) <a href="http://solvanam.com/?p=14565"><span>இங்கே</span></a><br /><br />அதோடு எனக்குத் தெரிந்த ஒரு வீட்டில் நடந்த சம்பவத்தை வைத்து ஒரு சிறுகதையும் <a href="http://solvanam.com/?p=14470">இங்கே.</a> இந்தப் பிள்ளையின் தந்தையும் தாயும் நான் வேலை செய்த வங்கியில் கணக்கு வைத்திருந்தார்கள். இந்த வாண்டுப்பையன் - நாலு வயது இருக்கும் . வங்கிக்கும் வருவான். ஒருநாள் அவனுடைய தந்தை இந்த சம்பவத்தை சொல்ல அன்றிலிருந்து அந்தப் பையனைப் பார்த்தால் எனக்குக் கொஞ்சம் நடுக்கம்தான். அவன் பையில் என்னத்தைப் போட்டுக் கொண்டு வந்திருக்கிறானோ என்று. என்ன விஷயம் என்கிறீர்களா? படித்துவிட்டு சொல்லுங்கள்.Ushahttp://www.blogger.com/profile/00179239922869639391noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3672689495290709037.post-90639868672221444632011-04-10T20:08:00.000-07:002011-04-10T20:19:18.789-07:00ப்ரெசென்ட் சார்கொஞ்ச நாட்களாய் காணாமல் போன காரணம் வேறொன்றுமில்லை இந்த வருடம் பெங்களூரில் அசாத்திய வெய்யில். எனக்கும் வயதாகிறதா தாங்கவில்லை.<br />ஸ்விட்ஜெர்லாந்து, ந்யு யார்க்கு இங்கே இருந்தெல்லாம் ‘ஐயோ இங்கே இன்னும் பனி கொட்டுகிறது” என்று எழுதி என் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ள வேண்டாம் என பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறென்.<br /><br />அப்புறம் இந்த 52.11 வயதில் முதல்முறையாய் <a href="http://solvanam.com/?p=13564">ஒரு பத்திரிக்கையில் நான் எழுதிய கதையை பிரசுரித்திருக்கிறார்கள்</a>. படிச்சு அபிப்பிராயம் சொன்னீங்கன்னா ஊக்கமாய் இருக்கும். எப்படி திருத்திக்கலாம்னும் ஐடியா சொன்னா நன்னா இருக்கும்.<br />உங்கள் மறுவினையை எதிர்பார்க்கும்,<br />உஷாUshahttp://www.blogger.com/profile/00179239922869639391noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-3672689495290709037.post-25876684660990873662011-02-06T18:55:00.000-08:002011-02-06T21:54:27.620-08:00இந்திய ரயில் பயணிகளின் கவனத்துக்குஎன்னிடம் இந்திய ரெயில்வேசுக்கு ஏதோ பிணக்கு என நினைக்கிறேன். முன்னமேயே எனது சில கசப்பான அனுபவங்களைப் பற்றி இங்கு எழுதி இருக்கிறேன். ஒரொரு முறை பயணிக்க வேண்டிய நிர்ப்பந்த்தம் வருகையிலும் எனக்கும் கணவருக்கும் இதைப் பற்றி ஒரு வாக்குவாதம் நடக்கும்.<br /><u>வை:</u> விமானத்தில் தொந்தரவு இல்லாமல் போகலாம்.<br /><u>நான்:</u> ட்ரெயினில் ஏ.சி கோச்சில் போனாலும் தொந்தரவு இல்லாமல் போகலாம். விமானம் என்றால் பயண நேரத்துக்கு 4 மணி நேரம் முன்னால் புறப்பட வேண்டி இருக்கிறது ஒரு மணீநேர பிரயாணத்துக்கு . இங்கே இரவு ரயிலில் ஏறிப்படுத்துவிட்டால் ஊர். டிக்கெட் செலவும் பத்தில் ஒரு பங்குதான்.<br /><u>வை:</u> தூக்கம் சரியாய் இருக்காது. பாத்ரூம் நன்றாய் இருக்காது. யாரானும் தவறாய் நடப்பார்கள். பெட்டி திருடு போகும். விமானத்தில் அதெல்லாம் இருக்காதே.<br /><u>நான்</u>: ஏன் உங்கள் வாயில் நல்ல வார்த்தையே வராதா. ட்ரெயினில் போகும் எல்லோருக்கும் இதெல்லாம் ஆகிறதா என்ன? ஏதொ ஒன்றிரண்டு தரம் ஆவதயே நினைத்து பயந்து கொண்டிருந்தால் வெளியே கிளம்புவதே கஷ்டம். விமான சௌகர்யம் எல்லாம் எதற்கெடுத்தாலும் பழகிப்போனால் அப்புறம் கஷ்டம் ஆகிவிடும். கொஞ்சம் உடம்பை வருத்தப் பழக வேண்டும்.<br />வைத்தியநாதன் ஒப்புக்கொள்ள மாட்டார். நானும் விட்டுக் கொடுக்காமல் கண்களில் நம்பிக்கை நட்சத்திரத்தை வைத்துக் கொண்டு ”நம் ரெயில்வே ஒண்ணும் அத்தனை மோசம் இல்லை’ என சொல்லிக் கொண்டு ட்ரெயினில் போவேன்.<br /><br />என் நம்பிக்கையைத் தகர்ப்பதே குறிக்கோள் என்பதுபோல ஏதானும் எனக்குத்தான் நடக்கும். ஒரு முறை சென்னையிலிருந்து வரும் இரவு ரயிலில் செகண்ட் க்ளாஸ் கோச்சில் என் பெர்த்தில் யாரோ ஒருவன் படுத்துக்கொண்டு அரக்கோணம் வரையில் இறங்கமாட்டேன் எனப் படுத்தல். அதிலிருந்து ஏ சி கோச்தான். இன்னொருமுறை சைட் பெர்த்தில் இருந்த என் வயதுப் பெண்மணியை ஒரு இளைஞன் தடவிப் பார்க்க, அந்தப் பெண்மணி சொன்னாள் அவன் குறி வைத்தது சிறு வயதான என் மருமகளைத்தான் இருக்கும். தவறுதலாய் அடுத்த பெர்த்தில் இருந்த அவளைத் தொட்டு விட்டான் என்று. தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போச்சு. ஆனாலும் அதற்குப் பிறகு விழித்துக் கொண்டே பயணம் செய்தோம்.<br /><br />இந்தத்தரம்.<br /><br />என் சம்மந்தி வீட்டில் அவர்களது முதல் பேத்திக்கு ஆயுஷ்யஹோமம் கோயமுத்தூரில். குழந்தையைப் பார்க்கும் ஆர்வத்தில் சந்தோஷமாய் கிளம்பிப் போனேன். இரண்டு நாளைக்குத் துணிமணிகள். பரிசுப்பொருட்கள். இவ்வளவுதானே. விமானத்தில் அனுமதிக்கும் கைப்பெட்டி அளவில் ஒரு ட்ராலி பேட்டியே போதுமாய் இருந்தது. எனக்குப் பாதையோடு இருக்கும் சைட் பெர்த்தில் மேல் பெர்த். கிழே காலி. யாரும் வரவில்லை என்றால் அங்கே போய் படுத்துவிடலாம் என யோசித்துக் கொண்டிருக்கையில் வேக வேகமாய் ஒரு பெண்மணியும் இளைஞனும் ஏறி வந்தனர். ஆர் ஏ சி என நினைக்கிறென். சீட்டுக்கு கீழே பெட்டியை என் பெட்டிக்குப் பக்கத்தில் வைத்துவிட்டு பிள்ளை கிழே இறங்கும் முன் ட்ரெயினே நகர ஆரம்பித்துவிட்டது. மணி பத்தரை. தூங்கும் முன் அவள் யாரிடமொ போனில் பேசியது கேட்டது:’<i>காலையில் 4 மணிக்கே ஸ்டேஷன் வருமாம். 3 30கு அலாரம் வைத்து என்னை கொஞ்சம் கூப்பிடுகிராயா?’<br /></i>3 15மணி இருக்கும் . நான் ஒரு முறை<i> </i>கிழே இறங்கிப் போன போது அந்தப் பெண்மணி பெர்த்தில்இருந்தாள். நான் செருப்புத் தேடும்போது கொஞ்சமாய் தலையைத்திருப்பி பார்த்தாள் - ரொம்ப ஜாக்கிரதை, சமர்த்து <span>போலிருக்கிறது</span> <span>என</span> <span>எண்ணிக்</span> <span>கொண்டேன்</span>. <i><br /></i>மறுபடி எனக்கு விழிப்பு வந்த போது கிழே காலி - ஐந்து மணி.<br />ட்ரெயின் அப்புறம் ஆடி அசைந்துஅரை மணி தாமதமாய் கோயமுத்தூர் போயிற்று. அதற்குள் என் உறவினர் 3 முறை போன் போட்டு 'எங்கே இருக்கிறீர்கள்?' என்றெல்லாம் விசாரித்து 'டாக்சி வெளியே காத்திருக்கிறது' என்று சொல்லி இருந்தார். ஒரு வழியாய் ஸ்டேஷன் வந்ததும் இறங்கிப் பெட்டியை எடுத்த போது ‘<i>அட அகிலாவுடைய அமெரிகன் டூரிஸ்டெரையா எடுத்துவந்தேன்</i>’ என யோசித்துக் க்கொண்டெ வெளியே வந்து விட்டேன்.<br />(நான் எடுத்துப்போன பேட்டி நீல எகொலாக் ஆனால் எனக்கு இப்போதெல்லாம் காலையில் மூளை அவ்வளவு சுறுசுறுப்பாய் இருப்பதில்லை. ஆழ்வார்பேட்டை ஆண்டவர் சொன்ன மாதிரி <span style="font-style: italic;">இந்த</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">எளவு</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">எல்லாம்</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">ஹார்மோன்</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">செய்யும்</span> <span style="font-style: italic;">கலக்கம்</span><span style="font-style: italic;">தானடா</span>)<br />ட்ரெயின் தாமதமானதில் டேக்ஸி ட்ரைவெருக்குக் கொஞ்சம் கோபம் போலத்தெரிந்தது. கொஞ்சம் சிடு சிடு வென்றிருந்தார்.<br /><br />ஏற்கனவே தாமதம்.விசேஷ நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. வேகமாய் போய் குளித்து தயாராக வேண்டுமே. விடு விடு வென்று டேக்ஸியில் ஏறி வீடு வந்தேன். குழந்தையைக் கொஞ்ச ஆசையாய் இருந்தது ஆனால் அது புதிய முகத்தை பார்த்ததும் சிணுங்கியது. 'சரி வாங்கி வந்த பொம்மையை வைத்து நைஸ் செய்யலாம்' என்று பெட்டியைத்திறந்தால் 6 டி ஷர்ட்டு, நைலான் புடவைஒரு ஆலிவ் ஆயில் புட்டி.அட்ரெஸ் எதுவும் இல்லை.<br />(இங்கே ஒரு BGM - சிவமணியின் ட்ரம்ஸ் அல்லது எம்பாரின் வயலின்உங்கள் விருப்பத்துக்கேற்ப போடுக்கொள்ளுங்கள் )<br /><span style="font-style: italic;"><br /></span><span>உடனே</span> <span>எனது</span> <span>சம்மந்தி</span> <span>ஸ்டேஷன்</span> <span>மாஸ்டருக்கு</span> <span>போனில்</span> <span>பேசி</span> <span>விபரம்</span> <span>சொல்ல</span> அவர் ' யாரானும் உங்கள் பெட்டியுடன் வந்தால் கூப்பிடுகிறொம்’ என்று வைத்துவிட்டார். உடனே வா கம்ப்ளைன்ட் எழுதிக்கொடு என்று சொல்லவில்லை. எங்களுக்கும் என்ன செய்யவேண்டும் என்று தெரியவில்லை.<br /><br />சரி அடுத்தது நடபப்தைப் பார்ப்போம் என்று குளித்து, அகிலாவுடைய ரவிக்கை, புடவை எதோ அங்கு இருந்ததைசுற்றிக்கொண்டு மண்டபத்துக்குப் போயாச்சு. . அதற்குள் விஷயம் பரவி எல்லோரும் ஒருவர் ஒருவராய்<br />‘<span style="font-style: italic;">அடடா</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">எப்படி</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">ஆச்சு</span>.? do you think it was deliberate or was it a genuine mistake?'<br />‘’<span style="font-style: italic;">ஒங்க</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">பொட்டி</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">கெடச்சுதா</span>?’’<br /><span style="font-style: italic;">அதுலெ</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">வேல்யூயபில்ஸ்</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">ஜ்வெல்ஸ்</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">ஒன்னும்</span> <span style="font-style: italic;">வெக்கலியே</span><span style="font-style: italic;">?</span><br />’<span style="font-style: italic;">கெடைச்சுடும்</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">கவலைப்படாதிங்கோ</span><span style="font-style: italic;">’</span> என்றெல்லாம்.<br />அக்ஷதை போட்டு ஆசிர்வாதம் செய்தாயிற்று. ஹோமம் ஆரம்பித்தது. நைசாய் நழுவிப்போய் ஸ்டேஷனில் ஒரு கம்ப்ளெயிண்ட் கொடுத்து அப்படியே அந்த பாசெஞ்செரின் விபரம் எதானும் தெரிந்தால் வாங்கி வரலாம் என்று கிளம்பப் பார்த்தேனா, வழியில் சம்மந்தி பிடித்து விட்டார். ’<i>தனியாய் எங்கே போவேள். ஹோமம் முடிஞ்சுடட்டும். யாரையானும் ஒங்க கூட அனுப்பறென். இன்னம் 1 மணி நேரத்திலே ஆயிடும்.</i>’<br />அவர் சொல்வதும் நியாயமாய்ப் பட்டது. எனக்கும் ஊர் தெரியாது. சரி என்று உள்ளே வந்து உட்கார்ந்தேன். ஒரு மணி நேரம் ஆச்சு. வாத்யார்கள் நிதானமாய் ஹோமம் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.<br />சம்மந்தி மாமி என்னை பலருக்கும் அறிமுகம் செய்தி வைத்துக் கொண்டிருந்தாள்: ;<br />”அகிலா மாமியார். பாவம் காத்தாலெ ட்ரெயின்லெ இவா பொட்டி காணமெ போச்சு.’ உடனே அவர்கள் அவர்களுக்கு நடந்த ஒரு அனுபவத்தை சொல்லுவார்கள். மொத்தத்தில் நாலில் மூன்று பேருக்கு ரெயிலில் பெட்டி தொலைத்த அனுபவம் இருக்கிறது போலிருக்கிறது.<br />எனக்கோ நேரம் ஆக ஆக மனதுக்குள் குடைச்சல். மெதுவாய் சென்னைக்குப் போன் போட்டுத் தங்கையை போனில் கூப்பிட்டு IRCTC tkt booking சைட்டில் போய் எதானும் ஹெல்ப்லைன் இருக்கிறதா பார் எப்படியானும் அந்த பெர்த்தில் இருந்த ஆளின் விபரம் கிடைக்குமா பார் என்றேன்.<br />அரை மணியில் அவ்ள் கூப்பிட்டாள். தேடுவதற்கு அவர்களுக்கு pNR number அல்லது passenger name வேண்டுமாம். ஸ்டேஷனில் போய் வாங்கி வா என்றாள்.<br />சரி எப்படியும் ஹோமம் முடியும் முன் கிளம்ப முடியாது. நேரம் ஆனது ஆச்சு. ஒரு வழியாய் எல்லாம் முடிந்தபின்னரே போவதுதான் மரியாதை என்று பொறுமையாய் காத்திருந்தேன்.<br />காத்திருக்கும் நேரத்தில் மாமாவை பிடிப்போம் அவருக்கு ரெயில்வேஸில் யாரானும் தெரிந்தால் போனிலேயே இந்த விபரம் வாங்கித்தருவாரா பார்க்கலாம் என்று என் அம்மாவின் சகோதரரை போனில் கூப்பிட்டேன்.. அவர் கோயமுத்தூரில் ஒரு ரிடயர்மெண்ட் காலனியில் 15 வருடங்களாய் வசிக்கிறார். அவரது காலனியில் பலரும் அரசாங்கத்தில் உயர்பதவியில் இருந்து ரிடயர் ஆகி, பெண் பிள்ளை எல்லாம் வெளிநாட்டில் இருப்பதால் இது போன்ற காலனியில் வசிக்கிறர்கள். சமைக்க வேண்டாம். தினப்படி லாஜிஸ்டிக்ஸ் பற்றி கவலைப்பட வேண்டாம்.<br />மாமாவிடம் விபரம் சொன்னேன். அவர் ’இரு ஒரு ரெடயர்ட் ரெயில்வே சீஃப் எஞ்சினியர் எதிர் வீட்டில் இருக்கிறார் அவரிடம் பேசி திரும்பக் கூப்பிடுகிறென்’ என்று சொல்லி விபரம் எல்லா வாங்கிக் கொண்டார்.<br />மறுபடியும் ஒரு மணி நேரம் ‘கிடைத்ததா? கிடைத்ததா?’ என்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லிக்கொண்டு உட்கார்ந்திருந்தேன்.<br />இதற்கு நடுவே பலவிதமான அட்வைஸ்:<br />‘<span style="font-style: italic;">நீங்க</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">ஒரு</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">செயின்</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">போட்டு</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">பெட்டியை</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">கட்டிடணும்</span><span style="font-style: italic;">”</span> ( இது சரிதான். இனிமேல் ரயிலில் போவதென்றால் முதலில் எடுத்து வைக்க வேண்டியது ஒரு செயின்தான்.)<br /><span style="font-style: italic;">‘</span><span style="font-style: italic;">ஒரு</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">எஃப்</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">ஐ</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">ஆர்</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">லாட்ஜ்</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">பண்ணிடுங்கோ</span><span style="font-style: italic;">”</span> ( இதுவும் சரிதான். முதலிலேயே நான் இதை செய்திருக்க வேண்டும்)<br /><span style="font-style: italic;">"</span><span style="font-style: italic;">பெட்டியை</span><span style="font-style: italic;"> ஸ்டேஷன் மாஸ்டரிடம் குடுத்துடாதீங்கோ </span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">அப்புறம்</span><span style="font-style: italic;"> </span>அவர்கள் மேல் <span style="font-style: italic;">உங்களுக்கு</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">இருக்கும்</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">ஹோல்ட்</span> <span style="font-style: italic;">போயிடும்</span><span style="font-style: italic;">.</span>" ( இது தவறு என்று பிறகு புரிந்தது. நான் இந்த ஸ்டேஷன் கம்ப்ளெயின்ட் கொடுத்து பெட்டியை கொடுத்திருந்தால் எனக்குநன்மையாய் இருந்திருக்கும்.)<br />இதெல்லாம் பட்டால்தானே தெரிகிறது!<br />நல்ல் வேளை ஒரு மணி நேரத்தில் மாமாவிடமிருந்து போன் - அந்த அசட்டின் முழு ஜாதகமும் கையில். பெயர், வஃப் ஆஃப், அட்ரெஸ், மொபைல் நம்பர், வீட்டு போன் நம்பர்எல்லாம்.<br />அவர்களுக்கு போன் பேசி அவர்கள் திருப்பூர் ரெயில்வே போலீஸ்காரனுடன் உட்கார்ந்திருப்பது வரை கண்டுபிடித்துவிட்டார் ரிடயர்ட் சீஃப் எஞ்சினியர்.<br />ஆஹா பெட்டி கிடைத்தே விட்டது என்ற சந்தோஷத்தில் அவர் கொடுத்த நம்பருக்கு போன் செய்தேன்.<br />'என்ன இப்படி இன்னொருவர் பெட்டியை எடுத்துப் போய் விட்டீர்களே ?' என நிதானமாய்தான் ஆரம்பித்தேன்.<br />உடனே அந்த மனிதர் என் மேல் பாய்ந்தார் ' என்ன சொல்றீங்க மேடம், தாராபுரத்துலே வீட்டுக்கு போனதும் தவறு தெரிந்து இங்கே திருப்பூர் ரயில்வே போலிஸ் ஸ்டேஷனுக்குவந்துட்டோம். எங்க மேலே தப்பு சொல்றீங்க?'<br />இது என் பெட்டியை எடுத்துப்போன பெண்மணியின் கணவர்.<br />பின்பு போனை அந்த ரயில்வே போலிஸ்காரரிடம் கொடுத்தார்: அவர் என்னிடம் " சரி மேடம், உங்க பேட்டியில் என்ன சாமான் எல்லாம் இருந்தது சொல்லுங்க?' என்றார். நான் சேப்டி பின் வரையில் விபரம் சொன்னதும், 'ஆமாம் உங்க பெட்டிதான். நீங்க என்ன பண்றீங்க...இங்க திருப்பூர் ஸ்டேஷனுக்கு வந்து அவங்க பெட்டிய கொடுத்துட்டு உங்க பெட்டிய வாங்கிட்டு போய்டுங்க" என்றார்.<br />அப்போது மணி மதியம் 2. மறுநாள் காலை 8 மணிக்கு நான் ஏர்போர்டுக்கு கிளம்ப வேண்டும். திருப்பூருக்கு டேக்ஸியில் போக வேண்டும் என்றால் மொத்தம் 5 மணி நேர பயணம் 2000 ருபாய் டேக்ஸி செலவு.<br />இது வரைக்கும் மனிதர்கள் ஒரு 'ஸாரி' கூட சொல்லவில்லை. என்ன மாதிரி மனிதர்கள் பார்த்தீர்களா.<br />'என்ன இது தவறு உங்களிடம். என்னைப் போய் அங்கு வர சொல்கிறீர்களே. இது நியாயமா? என்றதற்கு 'என்ன சும்மா தவறு தவறு அப்ப்டிண்றீங்க. நிங்களும்தான் தவறு பண்ணிருக்கீங்க?' என்றார் அந்த பெண்ணின் கணவர்.<br />!!!<br />(ஒரு வேளை அவர் மனைவி இருந்த கோச்சில் பிரயாணம் செய்ததே தவறோ? பின்னர் புரிந்தது நான் அவர்கள் பெட்டியை எடுத்து வந்தது தவறு என்று. )<br /><br />கொஞ்சம் வாக்குவாதத்திற்குப் பிறகு முதலில் 'சரி கோயமுத்தூர் ஸ்டேஷனில் கொண்டு வந்து கொடுக்கிறோம் ' என்றவர்கள் பத்து நிமிடத்துக்குப் பின் போன் செய்து 'அதெல்லாம் வர முடியாது. நங்கள் இங்கு ஸ்டேஷனில் ஒப்படைத்து விட்டோம். நீங்களும் அங்கே ஸ்டேஷனில் கொடுத்து விடுங்கள். எங்களால் அங்கெல்லாம் வர முடியாது' என்று விட்டார்கள்.<br />'சரி நானே வருகிறேன். டேக்ஸி செலவை ஷேர் செய்து கொள்ளுங்கள்' என்றதற்கு ' நீங்கள் ப்ளேனில் வருவீர்கள் அதற்கெல்லாம் நாங்கள் கொடுக்க முடியாது' என்று போனை வைத்து விட்டு பிறகு எனது காலை எல்லாம் கட் செய்து விட்டனர்.<br />கடைசியில் யாரையோ அனுப்பி பல கஷ்டங்களுடன் பெட்டிக் கையில் வந்த போது மணி நள்ளிரவு 12. பெட்டியை எடுத்துப் போன பெண்மணிக்கு வீட்டிலிருந்தபடியே சௌகர்யமாய் அவர்கள் பெட்டி கிடைத்தது. எல்லாத் திண்டாட்டமும் எனக்குத்தான்.<br />தெரியாத ஊரில் மாற்றுத் துணி கூட சரியாய் இல்லாமல், நாள் முழுவதும் பெட்டியைத் தேடி அலைந்து, பின்னால பணமும் செலவழித்து, மனதால் கஷ்டப்பட்டு திரும்ப வந்தால் போதும் என வந்து சேர்ந்தேன்.<br /><br />இந்த அனுபவத்தில் கற்றதும் பெற்றதும்:<br />1. இறங்கும் முன் பெட்டியை சரி பார்த்து நம்முடையது இல்லை என்றால் உடனே கம்ப்ளயின்ட் செய்ய வேண்டும்.<br />2. நம் பெட்டிகளை செயின் போட்டுக் கட்டி விடுவது நல்லது.திருடிப்போனால்தான் என்றில்லை இப்படி மாற்றி எடுத்துபோனாலும் நமக்குத்தான் திண்டாட்டம். மனிதர்களில் நியாயமானவர்கள் மிகக் குறைந்து போய் விட்டார்கள்.<br />3.நியாயம் நம் பக்கம் இருந்து ஒரு பயனும் இல்லை. போலீசுக்கும் ரெயில்வேசுக்கும் நியாயத்தைப் பற்றிய கவலை இல்லை. ப்ரோசீஜர்தான் முக்கியம்.<br />4. இதில் சரியான ப்ரோசீஜர் என்ன என்பதை யாரும் நமக்குச் சொல்ல மாட்டார்கள். நாமே தெரிந்து வைத்துக் கொள்ளுவது நல்லது. ( அதற்குத்தான் இவ்வளவு விபரமும் உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.)<br /><br />எல்லாவற்றுக்கும் மேல் கற்றுக்கொண்ட வாழ்க்கைப்பாடம்:<br />இன்னொருவருடைய இக்கட்டான நிலைமையை நமக்கு சாதகமாய் பயன்படுத்திக் கொள்ளுவது புத்திசாலித்தனம்.<br />In today's time it is not enough to be right and good, it is necessary to be smart.Ushahttp://www.blogger.com/profile/00179239922869639391noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-3672689495290709037.post-86376028654218918692011-01-02T04:09:00.001-08:002011-01-02T05:01:15.267-08:00சொல்வனம்பில்லி காலின்ஸ் என்று ஒரு அமெரிக்க கவிஞர். எனக்கு மிகவும் பிடித்த கவிஞர். இவர் கவிதைகள் மிகவும் எளிமையானவை. மிகச் சாதாரணமான ஒரு விஷயத்தை மிக அழ்காக சொல்வதுதானே கவிதையின் சிறப்பு? உதாரணமாய் மறதியைப் பற்றி ஒரு கவிதை. அதில் எப்படி மெது மெதுவாய் ஒவ்வொரு விஷயமாய் மறந்து போகிறது என்று நகைச்சுவையுடன் சொல்லிகொண்டே வருகிறவர் சடாரென்று ஒரு வரியில் மிக அழகான ஒரு சிந்தனையை வைக்கிறார் பாருங்கள்:<br /><br /><span style="color: rgb(51, 51, 51);font-family:Arial;font-size:14px;" >No wonder the moon in the window seems to have drifted<br />out of a love poem that you used to know by heart. </span><br /><br />ஜன்னல் வழியே ஆகாயத்தில் கண்ணால் காணும் நிலவு, நாம் பாடம் செய்த ஒரு காதல் கவிதையிலிருந்து விலகி வெளிவந்தது போலத் தோன்றுகிறதாம்.<br />மறதியில் நமக்கு நிஜத்துக்கும் நினைவுக்கும் இருக்கும் இடைவெளி கூட மங்கிப் போகிறது என்பதை அழகாய் சொல்லும் வரி. காதல் கவிதை மறந்து போய் அந்தக் கவிதையுடன் சேர்ந்து உணர்ந்த நிலவு மட்டும் கண்ணெதிரே. அந்தக் கவிதையில் இருக்கவேண்டிய இது இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறது என்ற குழப்பம்.<br />என்னைப் போல இந்த நிலையை அடைந்தவர்களுக்கு இது இன்னும் நன்றாகப் புரியும்.<br /><a href="http://www.solvanam.com/"><span>சொல்வனம்</span> <span>என்றொரு</span> <span>இணையப்</span> <span>பத்திரிகை</span></a>. நண்பர் ஒருவரும் அவரது நண்பர்களும் சில வருடங்களாய் நடத்தி வருகிறார்கள். நல்ல கட்டுரைகள், கதைகள் மற்றும் பல தரமான பகுதிகள். முடிந்தால் சென்று படித்து வரவும். விருப்பம் இருந்தால் நீஙகளும் எழுதலாம். அப்புறம் இந்த இதழில் பில்லி காலின்ஸின் மூன்று கவிதைகளை தமிழில் <a href="http://solvanam.com/?p=12077"><span>மொழியாக்கம்</span> <span>செய்திருக்கிறேன்</span></a>.<br />படித்து உங்கள் எதிர்வினைகளைப் பதிவு செய்யலாமே?<br /><br /><br />பி. கு: மறந்தே போனேன் பாருங்கள். என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.Ushahttp://www.blogger.com/profile/00179239922869639391noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3672689495290709037.post-69584356711480604232010-12-17T02:22:00.000-08:002010-12-17T04:50:56.544-08:00எங்க வீட்டு கல்யாணம்சில வருடங்களுக்கு முன் டுபுக்கு என்ற வலைப்பதிவாளர் ஒரு கல்யாணத்தில் தான் கேட்ட சில சுவையான சம்பாஷணைகளைப் பதிவு செய்திருந்தார். அதை நான் மிகவும் ரசித்துப் படித்தேன். ஏன் என்றால் இது போன்ற நிகழ்வுகள் நம் கல்யாணங்கள் எல்லாவற்றிலும் பொதுவான ஒன்று - நம் எல்லோர் வீட்டிலும் இது போல ஒரு மாமா , சித்தி, அல்லது அத்திம்பேர் இருப்பார். அவரை யாரானும் சிறிசுகள் கலாய்த்துக் கொண்டிருப்பார்கள். இல்லை விவரமான பெரிசுகள் என்றால் அவர்கள் சிறிசுகளை கலாய்த்துக் கொண்டிருப்பார்கள். கல்யாணத்துக்குக் களை கூட்டுவதே இது போன்ற விஷயங்கள்தான். மற்றபடி காசி யாத்திரை, ஊஞ்சல், பச்சைப்படி என்று அதெல்லாம் புரோஹிதர் இயக்கத்தில் அது ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும். இவை எல்லாம் வீடியோவில் பிடிக்கப்பட்டு பத்திரப்பட்டுவிடும்; ஆனால் இந்த உபகதைகள் சிலருக்கு மட்டுமே தெரிந்து நாளடைவில் தொலைந்து போய் விடும்.<br /><br />இந்தக் கல்யாணத்தில் அப்படி நான் கவனித்த சில சுவையான விஷயங்கள்:<br /><span style="font-weight: bold;">Scene1</span><br />பிள்ளையின் மாமா மனைவியிடம்: ஏண்டி பாத்ரூம் உள்ளே போயிருக்கேன். கதவை போட்டுண்டு வந்துட்டே? இத்தனை நாழி கதவை தட்டிண்டிருந்தேன்.<br />மாமி: ஐயையோ சாரின்னா நான் கவனிக்கலை.<br />மாமா: ஆமாம் நான் இல்லைன்னு நீ என்னிக்காவது கவனிச்சாதானே?<br />( <span style="font-style: italic;">வடக்கே</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">கல்யாணத்திலே</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">மாப்பிள்ளையோட</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">செருப்பைதான்</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">ஒளிச்சு</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">வெப்பா</span><span style="font-style: italic;">. </span><span style="font-style: italic;">இங்கே</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">மாப்பிள்ளைக்கு</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">மாமாவையே</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">ஒளிச்சு</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">வைக்கறா</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">போலிருக்கு</span><span style="font-style: italic;">!!</span>)<br /><br /><span style="font-weight: bold;">Scene2</span><br />ஒரு அத்தை பெண் (ஒ அ பெ): பொண்ணுக்கு என்ன பண்றா? புள்ளை ஆத்துலே ஏதானும் demand உண்டா?<br />இன்னொருத்தி: ஒண்ணுமே வேண்டாமாம். சேவை நாழி மாத்ரம் கேட்டாளாம். பிள்ளைக்கு சேவை ரொம்ப பிடிக்குமாம்.<br />ஒ அ பெ : போச்சுடா. சேவை யார் பிழியறது. ஒரு 5 பவுன் கூட வேணா போட்டுடலாம்.<br /><br /><span style="font-weight: bold;">Scene3</span><br />தங்கை என்னிடம்: கார் சாவியை எங்கே வெச்சு தொலைச்சே?<br />நான்: உன் பைலேதான் போட்டிருப்பேன் சரியா பாரு.<br />தங்கை: காணுமே.<br />ஒரு சித்தப்பா பெண்: என்ன காணும்?<br />தங்கை: என் கார் சாவி. இவ எங்கயோ வெச்சுத் தொலைச்சுட்டா.<br />அடுத்த 10 நிமிடத்தில் நான் போன இடமெல்லாம்:<br />'சாவி கெடைச்சுதா?'<br />"எங்கே தொலைச்சே?'<br />"வேறே என்ன காணும்?'<br />'நீ கொஞ்சம் நிதானமா இருக்கணும். ஆனாலும் பரபரப்பு.'<br /><span style="font-style: italic;">நேரம்தான்</span><span style="font-style: italic;">. </span><br />போதாக்குறைக்கு செருப்பைத் தேடிக் கொண்டிருக்கிறேன். ஒரு 8-10 வயது நண்டு சொல்கிறது:<br />"பெரியம்மாவுக்கு இதே வேலையா போச்சு. எதையானும் தொலைக்கிறது. அப்புறம் அதை தேடறது."<br /><span style="font-style: italic;">தேவையா</span><span style="font-style: italic;">?</span><br /><br /><span style="font-weight: bold;">Scene4</span><span style="font-weight: bold;">:</span><br />பெண்ணின் அம்மா: பச்சப்படி எல்லாம் சுத்தி ஆச்சு. வாத்யார் எங்கே? அவர்தான் எப்படி உள்ளே கூப்டுண்டு போகணும்னு வந்து சொல்லணும்.<br />தங்கை: அவர் என்கிட்டே சொல்லிட்டு போனார்: "நீங்க ஊஞ்சல் பச்சப்படி முடிச்சு மேடைக்கு பொண்ணு மாப்பிள்ளையை கூட்டிண்டு வந்துடுங்கோ. நான் கொஞ்சம் சாப்டுட்டு வரேன். எனக்கு low sugar ஆயிடும்" அப்படீன்னு சொல்லிட்டு போனார்.<br />(<span style="font-style: italic;">இது</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">எப்படி</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">இருக்கு</span><span style="font-style: italic;">!</span><span style="font-style: italic;">இந்த</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">நாள்லே</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">யாரையும்</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">நம்ப</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">முடியலை</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">சார்</span><span style="font-style: italic;">!!</span>)<br /><br /><span style="font-weight: bold;">Scene5</span><span style="font-weight: bold;">:</span><br />வீட்டு பெரிசு ஒண்ணு: ஏண்டி உஷா, தாலி கட்டினதும் ஜூஸ் ஒண்ணு கொடுப்பாளே. ஒண்ணும் காணுமே.<br />நான்: அதோ பாருங்கோ அந்த மூலைலே நின்னுண்டு ஒருத்தன் குடுத்திண்டிருக்கான். வாங்கோ<br />அங்கே போனால் ஜூஸ் ஓவர்.<br />பெரிசு: நாக்கெல்லாம் வறண்டு போச்சு கொஞ்சம் தாராளமா கலக்கப்படாதோ. arrangements போறாது.<br />நான்: ஷூ வாய மூடுங்கோ, நாம்தான் பொண் ஆத்துக்காரா. யாரை போய் குத்தம் சொல்றது?<br /><span style="font-style: italic;">இந்த</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">பெருசுங்க</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">தொல்லை</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">ஆனாலும்</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">தாங்கலைபா</span>.<br /><br /><span style="font-weight: bold;">Scene6</span><span style="font-weight: bold;">:</span><br />காலையிலிருந்து பாண்டில் அலைந்து கொண்டிருந்த சித்தி பையனிடம் நான்: ஏன் வேஷ்டி எடுத்துண்டு வரலியா?<br />சித்தி பிள்ளை: எனக்கு இவா வேஷ்டி வெச்சு குடுப்பானு நான் எடுத்துண்டு வரலை. இவா எனக்கு வேஷ்டியே குடுக்கலை.<br /><span style="font-style: italic;">போச்சுடா</span><span style="font-style: italic;">. </span><span style="font-style: italic;">வாயை</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">மூடிண்டு</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">இருந்திருக்கணும்</span><span style="font-style: italic;">.</span><br /><br /><br />நாங்கள் நான்கு பேர் உறவினர்களுக்கு பக்ஷணம் கொடுக்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டிருந்தோம். ஒரு தூரத்து மாமி என்னிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினாள். நானும் பக்ஷணம் கொடுத்து அனுப்பினேன். கொஞ்ச நேரம் கழித்துப் பார்த்தால் என் மன்னியிடம் பக்ஷணம் வாங்கிக் கொண்டிருக்கிறாள். பின்னால் கேட்டால் எங்கள் நாலு பேரிடமும் ஒரொரு பாக்கெட் வங்கிக் கொண்டு போயிருக்கிறாள். சம்பந்திகளை விட அதிகமாய் சீர் பக்ஷணம் அவள் வீட்டிற்குதான் போயிருக்கும் போலிருக்கு. அதான் நல்ல பெரிய பையாக கொண்டு வந்திருந்தாள். இனிமேல் வாசலில் இதற்கெல்லாம் செக்யூரிட்டி செக் போடவேண்டும் போல் இருக்கிறது.<br /><br />நான் கலந்துகொண்ட கல்யாணத்தில் சில விஷயங்கள் ஆச்சரியம் அளித்தன. பெண்ணுக்கு ஒரு கிலோ அளவு வெள்ளி சாமான் வாங்கி இருந்தாலும் கல்யாண கலாட்டாவில் தொலைந்து போய்விடும் என்ற பயத்தில் எதையும் லாக்கெரில் இருந்து எடுக்கவே இல்லையாம். விரதம் எல்லாம் சத்திரத்தில் கொடுத்த பித்தளை பாத்திரங்களிலேயே செய்தார்கள். சில நேரங்களில் பேப்பர் கப்பில் கூட எண்ணை, குங்குமம் சந்தனம் எல்லாம் வைத்திருந்தார்கள். எனக்குக் கல்யாணத்தில் கொடுக்கப்பட்ட வெள்ளிபாதிரங்கள் உபயோகப்பட்ட ஒரே நாள் என் கல்யாணம் அன்றுதான். இப்போதெல்லாம் அதற்கும் உபயோகப்படவில்லை.<br /><br />விரதத்திலிருந்து கட்டுசாதம் வரை நான் சாப்பிட்ட விருந்துகளின் எண்ணிக்கை 7. நடுவே நலங்கின்போது வேறே ஏதோ சமோசா, ஸ்வீட் என்று கொடுத்தார்கள். நல்லவேளை அது ஒன்று மட்டும் நான் தொடவில்லை. இப்போது 4 நாட்களாய் 'எத்தை தின்றால் பித்தம் தீரும்' என்ற நிலைமையில் இருக்கிறேன்.<br /><br />சாப்பாட்டு ஹாலில் ஒரு uncle ரொம்ப கஷ்டப்படுத்தி விட்டார் - "<span style="font-weight: bold;">எனக்காக</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">ஒரே</span> <span style="font-weight: bold;">ஒரு</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">இட்லி</span><span style="font-weight: bold;">. </span><span style="font-weight: bold;">இன்னும்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">ஒரு</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">தோசை</span><span style="font-weight: bold;">. </span><span style="font-weight: bold;">முறுகலாய்</span>' எனறு. அவரை வேறே நாலைந்து பேர் புகழ்ந்து தள்ளி விட்டார்கள் - '<span style="font-weight: bold;">இப்போதெல்லாம்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">பாருங்கோ</span><span style="font-weight: bold;">. </span><span style="font-weight: bold;">கல்யாண</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">வீட்டில்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">பந்தி</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">விசாரிப்பே</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">இருக்கறதில்லை</span><span style="font-weight: bold;">. </span><span style="font-weight: bold;">வந்தியா</span><span style="font-weight: bold;">, </span><span style="font-weight: bold;">சாப்டியா</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">எனறு</span> <span style="font-weight: bold;">ஆகி</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">விட்டது</span><span style="font-weight: bold;">. </span><span style="font-weight: bold;">உங்களை</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">மாதிரி</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">யார்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">இப்படி</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">கேட்கிறார்கள்</span>' எனறு. அவ்ளவுதான் மனுஷர் அடுத்த பந்தியில் இன்னும் ஒரு படி மேலே போய் விசாரிக்க ஆரம்பித்து விட்டார். அவரைக் கொண்டு சமையலறை மூலையில் cacophonix மாதிரி கட்டிப் போட்டு விடலாமா என்ற ஒரு யோசனை கூட எனக்கு வந்தது. மனுஷன் சோறு போட்டே கொன்று விடுவார். அடுத்த கல்யாணத்தில் அவரை பார்த்தால் பட்டினி கிடப்பது உத்தமம்.<br /><br />பெண் வீட்டில் பூஜை அறையில் ஒரு அடுக்கில் இரண்டு தேங்காய்களை ஊற வைத்திருந்தார்கள். என்ன விஷயம் எனறு விசாரித்தால் அப்படி போட்டு வைத்தால் மழை வராது என்றார்கள். கல்யாணத்துக்கு 5 நாள் முன் வரையில் புயலும் பெருமழையும் அடித்ததில் அரண்டு போய் இது போல் செய்திருக்கிறார்கள்.<br />இப்போது தெரிகிறது சென்னையில் பாதி சமயம் ஏன் மழை வருவதில்லை எனறு.<br /><br />மற்றபடி எல்லாம் சௌக்கியம். உங்கள் சௌக்யத்துக்கு கமெண்ட் போடவும்.Ushahttp://www.blogger.com/profile/00179239922869639391noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-3672689495290709037.post-56236927690666978712010-11-21T19:34:00.000-08:002012-10-22T20:06:16.546-07:00தாங்க முடியலைங்க..<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
உங்கள் வீட்டுப் பெண்ணுக்கோ பிள்ளைக்கோ திருமணம் என்று வைத்துக்கொள்ளுங்கள். யாரையாவது அழைப்பதற்கு நேரில் போக வேண்டும் என்றால் எந்த நேரத்தில் போவீர்கள்? உங்களுக்கு சௌகர்யமான நேரத்திலா அல்லது அவர்களுக்கு சௌகர்யமான நேரத்திலா?<br />
ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்பது - பத்து மணி இதற்கு உகந்த வேளையா?<br />
எங்கள் வீட்டில் எல்லாம் ஞாயிறு காலையில் நான்கு தினசரிகள் வரும். ஒவ்வொன்றாய் கொஞ்சம் மேய்ந்து விட்டு , அடிகாஸ் ஹோடேலோ அல்லது s.l.v. யிலிருந்தோ இட்லி அ தோசை வரவழைத்து மெதுவாக சாப்பிட்டு விட்டு, இன்டர்நெட்டில் மெயில் எல்லாம் பார்த்து, உறவினர்/ நண்பர்கள் யாரானும் சாட்டில் இருந்தால் கொஞ்சம் வம்பளந்து விட்டு பத்து மணி வாக்கில்தான் குளியலைப் பற்றிய யோசனையே வரும். சரி என்று தலை முழுக்க எண்ணை தடவி பாக்கி இருப்பதை முகத்தில் தடவி குளிக்க போகலாம் என்று எழுந்தால் வாசலில் பெல். எங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்மணியும் ஞாயிறு அன்று பனிரெண்டு மணிக்கு மேல்தான் வருவாள். சரி வேறே வழி இல்லை என்று எண்ணையில் தோய்த்தெடுத்த பஜ்ஜி போல ஹவுஸ் கோட்டுடன் வாசலுக்குப் போய் எட்டிப் பார்த்தால் இரண்டு மூன்று பேர். யாரென்று கூட தெரியவில்லை. ஏதானும் தேர்தல் வருகிறதோ , ஓட்டு கேட்க வந்திருக்கிறார்களோ அல்லது சென்செஸ் பேர்வழிகளா என்று பார்த்தால் '<span style="font-weight: bold;">பிள்ளை</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">கல்யாணம்</span>' என்று ஆரம்பித்தார்கள். அந்த காலத்து நண்பர்கள், பார்த்து பதினைந்து வருடம் ஆகி இருக்கும். அடையாளம் கண்டு பிடிக்கவே முழுதாய் ஒரு நிமிடம் ஆயிற்று. இத்தனை நாள் கழித்து பார்க்கிறோம், நானோ இந்த கோலத்தில். மானமே போச்சு. சரி உட்கார வைத்து விட்டு கொஞ்சம் டீசென்ட் ஆக உடை உடுத்தி வரலாம் என்று பார்த்தால் '<span style="font-weight: bold;">இல்லை</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">உட்கார</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">நேரமில்லை</span><span style="font-weight: bold;">. </span><span style="font-weight: bold;">நிறைய</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">வீடு</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">போக</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">வேண்டும்</span>' என்கிறார்கள். அங்கெல்லாம் போய் விட்டு இங்கே வரக்கூடாதோ! குளிக்கப் போன கணவரோ நிதானமாய் நிம்மதியாய் ஷவரில் வெந்நீரை அனுபவித்துக்கொண்டிருக்கிறார். Ignoring the elephant in the room என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே, அது போல ஒரு conversation. எண்ணை சட்டி போல நான் இருந்த கோலம் அவர்களுக்கும் கஷ்டமாகத்தான் இருந்திருக்கும். எனக்கோ 'பூமி பிளக்காதா உள்ளே போய் விட மாட்டோமா' என்ற நிலை. ஆனால் மேலே என்னமோ சாதாரணமாய் ' பெண் என்ன செய்கிறாள்? பிள்ளை எங்கே இருக்கிறான்? ' என்பது போல ஒரு சம்பாஷணை.<br />
ஒரு வழியாய் அரை மணி நேரத்தில் போய் சேர்ந்தார்கள்.<br />
<br />
முன்பெல்லாம் குறிப்பிட்ட நாட்களில் அல்லது நேரங்களில் சில காரியங்களை செய்யலாம் என்ற நியதிகள் , கட்டுப்பாடுகள் உண்டு. சில சமயம் அவை புரியாமல் இருக்கும். செவ்வாய்கிழமை செய்தால் என்ன, அமாவாசை அன்று போனால் என்ன என்று தோன்றும். நானே பல சமயம் இவற்றை எல்லாம் அபத்தம் என்று ஒதுக்கி இருக்கிறேன். நேற்றுதான் புரிந்தது எதற்காக இவை எல்லாம் ஆரம்பித்திருக்கலாம் என்று. இது போல் சில நியதிகள் இருந்தால் நமக்கும் நிச்சயமாய்த் தெரியும் இன்னின்ன நாட்களில் அ நேரங்களில் யாரும் வர மாட்டார்கள் என்று. அப்போது நாம் பாட்டுக்கு நிதானமாய் நம் அலுவல்களை முடித்துக் கொள்ளலாம். இன்றைய தேதியில் எல்லோரிடமும் தொலைபேசி இருக்கிறது. வரும் முன்பாக ஒரு கால் அடிக்க முடியாதா? குறைந்த பக்ஷமாய் நமக்கு முன் சென்ற வீட்டிலிருந்து கிளம்பும் போதாவது கூப்பிட்டு சொல்லலாமே. நாலைந்து பேர் இருக்கும் வீடு என்றால் பிரச்சினை இல்லை. யாரானும் ஒருவர் இருப்பார்கள். அவர்களை பேசிக்கொண்டிருக்கச் சொல்லி விட்டு நாம் தயாராகி வரலாம். எங்கள் வீடு போன்ற இடங்களில்தான் பிரச்சினை.<br />
நான் ஒன்றும் இந்த social etiquette பற்றி மிகவும் கவலைப் படுபவள் இல்லை என்றாலும் விருந்தினர் முன்பு இருக்கவேண்டிய கோலத்துக்கு ஒரு எல்லை உண்டல்லவா. நமக்கே கூச்சமாய் இருக்கும் நிலையில் எப்படி ? சொல்வார்களே திரௌபதி சபைக்கு வந்த நிலையை பற்றி - கிட்டத்தட்ட அப்படிதான் எனக்கும். கிருஷ்ணன் வந்து ஒரு கண்ணியமான ஆடையை போர்த்த மாட்டாரா என்பது போல.<br />
<br />
ஏற்கனவே இத்தனை எரிச்சலில் இருந்தேனா. இது போதாதென்று அவர்கள் பத்திரிக்கையைக் கொடுத்து கூடவே ஒரு சின்ன டப்பாவையும் கொடுத்தார்கள். என்னவென்று பிரித்துப் பார்த்தால் ஒரு சின்ன குங்கும கிண்ணம். உள்ளே ஒரு பொடி குங்குமம் கூட இல்லை. இது என்ன கூத்து? கல்யாணத்தில் மணமக்களுக்கு நாம்தான் ஆசீர்வாதமாய் பணமோ பொருளோ கொடுப்போம். அழைக்கப்பட்டவர்களுக்கு என்ன பரிசுப்பொருள்? வருவதற்கு ஊக்கப் பரிசா? இதையே முஹூர்த்தம் ஆன பின் தாம்பூலப் பையில் கொடுத்திருந்தால் கூட இத்தனை விசித்திரமாக இருந்திருக்காது. அதென்ன அழைப்புடன் ஒரு gift? முன்பெல்லாம் கல்யாணத்துக்கு அழைத்து வண்டி சத்தம் என்று ரயில் டிக்கெட்டுக்கான பணத்தையும் கொடுப்பார்களாம். அது போலவா இது?<br />
<br />
என்னமோ போங்கள் மொத்தத்தில் ஒண்ணும் புரியவில்லை. இனிமேல் வாசலில் விசிடிங் hours ஒரு போர்டு போட்டு விட்டு மற்ற நேரத்தில் வருபவர்களுக்கு போஸ்ட் பாக்ஸ் தவிர ஒரு பெட்டியும் வைக்கலாம் என்று இருக்கிறேன் - இது போல பரிசுப் பொருட்களைப் போட்டு விட்டு செல்வதற்கு. அப்புறம் இது போல் பத்திரிக்கையோட gift கொடுத்த கல்யாணத்துக்கு போக முடியாவிட்டால் அப்படியே அவர்கள் கிளம்பும்போது அவர்கள் கையிலேயே கொஞ்சம் அட்சதையோடு gift கொடுத்தால் கோபித்துக் கொள்வார்களா என்ன? ச்சே ச்சே அதெல்லாம் கோவிக்க மாட்டாங்க. அவங்க ஆரம்பிச்சு வெச்சதைதானே நாமளும் பண்ணபோறோம், என்ன சொல்றீங்க... அவங்களுக்கு சௌகர்யமாய் வழக்கங்களை மாற்றிக் கொண்டிருப்பதைப்போல நாமும் கொஞ்சம் மாற்றினால் புரிந்து கொள்ள மாட்டார்களா என்ன?<br />
<br />
ரொம்ப மண்டை காஞ்சு இருந்தேன். நேத்து தலைக்குப் போட்ட எண்ணை கூட பிரயோஜனப் படலை. அதான் உங்களிடம் சொல்லி கொஞ்சம் ஆறுதல் தேடலாமேன்னு. மனசுக்கு ஆறுதலாய் ஏதானும் சொல்லிட்டுப் போங்க.</div>
Ushahttp://www.blogger.com/profile/00179239922869639391noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-3672689495290709037.post-19492091052009301482010-11-02T04:18:00.000-07:002010-11-02T04:58:24.712-07:00தீப ஒளித் திருநாள்என்ன உங்கள் வீட்டில் தீபாவளிக் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் எல்லாம் தடபுடலா ? தமிழக முதலமைச்சரின் ஆசியோடு நடக்கும் ஒரு தொலைக்காட்சியில் இதை தீப ஒளித் திருநாள் என்று சொல்கிறார்கள். கேட்க அழகாக இருக்கிறது ஏனென்றால் பலரும் தீபாவலி என்று வலிக்கும்படி சொல்வதை தவிர்க்கலாமே. இப்போதெல்லாம் பண்டிகைக் கொண்டாட்டம் என்றாலே புத்தாடை , விசேஷமான தின்பண்டங்கள் அப்புறம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று ஆகிவிட்டது போல் தோன்றுகிறது. ஒவ்வொரு தொலைக்காட்சி நிலையத்திலும் காலை 6 மணிக்கு ஆரம்பித்து இரவு 11 மணி வரையில் சிறப்பு நிகழ்ச்சிகள் அதிலும் முக்கால்வாசி சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்சிகள்தான். இதில் எனக்கு ஒரு பெரிய சந்தேகம் , இல்லை இரண்டு பெரிய சந்தேகங்கள். இப்படி நாள் முழுதும் சிறப்பு நிகழ்ச்சிகள் போட்டால் வீட்டில் எப்போது சமையல் எல்லாம் நடக்கும்? இல்லை சமையல் அறையிலேயே தொலைக்காட்சி வைத்திருப்பார்களோ? அப்புறம் இப்படி சிறப்பு நிகழ்ச்சிகள் பார்த்துக்கொண்டே இருந்தால் கோவிலுக்குப் போவது, அக்கம்பக்க நண்பர்கள் வீட்டுக்குச் சென்று வாழ்த்தி வருவது அல்லது குடும்பமாய் உட்கார்ந்து விருந்து சாப்பிடுவது இதெல்லாம் எப்படி நடக்கும்? இவற்றுக்க்காகத்தான் மிக நீண்ட விளம்பர இடைவேளைகள் கொடுக்கிறார்கள் போல இருக்கிறது.<br />இந்த விசேஷ தினங்களில் எனக்குப் பிடித்த நிகழ்ச்சி பட்டிமன்றம். இதை நிதானமாய் மத்தியானமாய் காண்பிக்கக் கூடாதா? காலையில் 10 30 மணிக்குள் அவசரமாய் முடித்து விடுவார்கள். நான் சமையல் வேலை எல்லாம் முடிந்து டிவி முன் வரு முன் இதெல்லாம் முடிந்து போய் ஏதோ ஒரு அஜித் படமோ அல்லது விஜய் படமோ உலகத்திலேயே முதல்முறையாக காண்பிப்பார்கள். அப்புறம் மதியம் முழுவதும் முன் பின் தெரியாத நடிகைகள் அவர்கள் வீட்டு தீவாளி பற்றி புரியாத தமிழில் பேசுவார்கள். தொலைக்காட்சிக்காரகள் இந்நிகழ்சிகளைக் கண்டு ரசியுங்கள் என்று வேறே அடிக்கடி சொல்வார்கள். என்னத்தை ரசிக்கிறது?<br />இந்த பெங்களூரில் வேறே தீபாவலி கார்த்திகை என்றால் போதும் மழையும் காற்றும் தவறாமல் வந்து விடும். அப்புறம் என்ன தீபம் ஏற்றுவது? குடத்துக்குள்ளேதான் ஏற்றணும்.<br />அதென்னமோ இந்தப் புடவைக் கடைக்காரர்கள் விளம்பரங்களில்தான் தீபாவளி பார்த்தாலே ஆசைப்படும்படி இருக்கிறது. பெரிய பெரிய கோலங்கள், பட்டுப்பாவடையில் குட்டிக் குழந்தைகள் பட்டாசு கொளுத்துகிறார்கள், இளம்பெண்கள் அழகான போத்தீஸ் புடைவைகளில் வலம் வருகிறார்கள், எல்லோரும் குடும்பமாய் உட்கார்ந்து சிரிக்கிறார்கள். யாரும் தொலைகாட்சி முன் உட்கார்ந்து த்ரிஷா வீட்டு தீபாவளி பார்ப்பதே இல்லை.<br /><br />உங்கள் வீட்டு தீபாவளி பற்றி சொல்லுங்கள்.<br />அனைவருக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.<br /><br />பி கு: ஒரு கேள்வி, எனக்குத் தெரிந்த சிலர் இந்த பதிவுகளை ஆங்கில ஸ்க்ரிப்டில் எழுத சொல்கிறார்கள். அவர்களுக்குத் தமிழ் தெரியும் ஆனால் படிக்க வராதாம். இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?Ushahttp://www.blogger.com/profile/00179239922869639391noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-3672689495290709037.post-83076614863604603482010-10-20T04:33:00.000-07:002010-10-20T07:22:13.099-07:00எந்திரன்எந்திரன் படம் பார்த்தேன். பல வருடங்களுக்கு முன்பாக ரஜினியை புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும் போன்ற படங்களில் ரசித்திருக்கிறேன். இவை தவிர அவர் நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்தவை அவர்கள், நினைத்தாலே இனிக்கும், குரு சிஷ்யன், தில்லுமுல்லு , தளபதி. நல்ல நடிகர். ஆனால் அவரை சூப்பர் ஸ்டார் ஆக்கி அவருக்குள்ளே இருக்கும் ஒரு சிறந்த நடிகரை அழித்து விட்டார்களே என்ற வேதனை எனக்கு எப்பவும் உண்டு.<br />படத்தை ரஜனிகாந்தால் மட்டும்தான் இப்படி ஒரு வெற்றிப்படம் ஆக்கி இருக்க முடியும். வேறு யார் நடித்திருந்தாலும் 'காதுலே பூ' என்று ஒதுக்கி இருப்பார்கள். அனால் அவருள்ளே இருக்கும் அபாரமான நடிப்புத் திறமைக்கு சவாலான ஒரு திரைக்கதை யாரிடமும் இன்று இல்லையா என்ற ஆதங்கம் மேலிடுகிறது.<br /><br />நூறு மனிதர்களின் ஆற்றல் சக்தி படைத்த இந்த ரோபோட் டால் எத்தனையோ செய்ய முடியும் ஆனால் அதுவும் ஐஸ்வர்யாவின் அழகில் மயங்கி அவளை அடைய வேண்டும் என்று அலைகிறது. வேறு எந்தப்பெண்ணையும் இந்த நெருக்கத்தில் பார்க்காததினால் இருக்கலாம். அவள்தான் வேண்டும் என்று பிடிவாதம் பிடிகிறது. இன்னும் இரண்டு அழகான இளம் பெண்களை அதற்கு முத்தம் கொடுக்கச் சொல்லி இத்தனை கஷ்டங்களைத் தவிர்த்திருக்கலாம். எந்தப் பெண்ணாலும் தன்னுடைய ஹார்மோன் ப்ரவாஹத்தை தணிக்க முடியும் என்று அதனுடைய அறிவுக்குத் தெரிந்து போயிருக்கும்.<br />(அபிஷேக் பச்சன் கவனிக்கவும்: எங்கேயாவது ரோபோட் சல்லிசா கிடைத்தால் கூட வாங்கிண்டு வந்துடாதீங்க. இந்த மாதிரி ஒரு மனைவியை வீட்டிலே வெச்சுகிட்டு ரொம்ப ஆபத்தான விஷயம்!)<br />அது சரி அந்த ரோபோட் சிட்டி காட்டுகிற அளவு உணர்சிகளைக் கூட இந்த ஐஸ்வர்யா முகத்தில் காணுமே. ஒருக்கால் அவர்தான் ரோபோட்டோ என்ற சந்தேஹம் வரும் அளவிற்கு உணர்ச்சி காட்டாமல் வந்து போகிறார். அருமையாக நடனம் ஆடுகிறார். ஆனால் கொஞ்சம் அசடான கேரக்டர் - படிக்காமல் பரிட்சையில் பிட் அடிக்கிறது, ஊர் பேர் தெரியாதவனைப் போய் ஒரு நாள் பாய் பிரெண்ட் ஆக இருக்கிறாயா என்று கேட்டு பிரச்சினையை விலை கொடுத்து வாங்குகிறது என்று அசட்டுத்தனமான பெண் . இத்தனை புத்திசாலியான வசீ இந்த அசடை பேசாமல் சிட்டிக்கு விட்டுக் கொடுத்து விட்டு கொஞ்சம் புத்தியுள்ள பெண்ணை கல்யாணம் பண்ணிக் கொண்டிருந்திருக்கலாம். படம் இண்டர்வல்லில் முடிந்து போயிருக்கும்.<br />பிரம்மாண்டம் காட்டி இருக்க முடியாது. 150 கோடி செலவழித்து ரெகார்ட் பண்ணி இருக்க முடியாது. ஷங்கருக்கு வேலை இல்லாமல் போய் இருக்கும்.<br />என்னவோ கொடுத்த நூறு ரூபாய்க்கு என்னென்னமோ வித்தை காண்பித்தார்கள்- பெரியவர்களுக்கான கார்டூன் படம் மாதிரி. மாச்சு பிச்சு என்று அழகான இடங்கள் எல்லாம் காண்பித்தார்கள். ஐஸ்வர்யாவுக்குக் கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்ததை வசூல் பண்ணவேன்டியோ என்னவோ தேவை இல்லாத இடங்களில் எல்லாம் பாட்டுக்கள் வேறே. சத்தம் கொஞ்சம் அதிகம். காதில் ஏதோ ரீங்காரம் இருந்துகொண்டே இருந்தது.<br /><br />ரஜினி படங்களில் காமெடி என்று தனி track தேவையே இல்லை. அவரே அருமையாக காமெடி பண்ணுவார். இங்கே சந்தானம், கருணாஸ் என்று தேவையே இல்லாமல் மொக்கையான காமெடி track. சத்தே இல்லாமல் இருந்தது. இன்னும் சொல்லப்போனால் கதையை பல நேரங்களில் கெடுக்கும் வகையில் இருந்தது அவர்கள் காமெடி.<br /><br />அதெல்லாம் சரி... இந்த grade 2 , 3 என்பதெல்லாம் அரசாங்க லேப் லே தானே இருக்கும்? வசீகரன் அரசாங்க லேப் லையா சிட்டியை உருவாக்கி இருக்கார்? அப்படின்னா எப்படி சிட்டியை அவ்ளோ சுலபமா சானாவோட அனுப்பினார்? 4 மேல் அதிகாரிகள் கிட்டே triplicate லே authorisation வாங்கினால்தானே முடியும்?<br /><br />அவ்ளோ ரகசியமா அந்த போரா அத்தனை ரோபோக்களை பண்ணி வெச்சிருக்கார்?அதுவும் ரெடி யா பவர் சார்ஜ் பண்ணி. எனக்கு எங்கே வீட்டுலே இருக்கற 4 மெஷின்களுக்கு ரெகுலரா பவர் கட் இல்லாமே <span></span> பவர் வாங்கவே உயிர் போகிறதே?<br />இல்லே அரசாங்க லேப் தானே என்ன வேணா நடக்கும் அப்டீங்கறீங்களா? அதுவும் சரிதான்.<br /><br />எல்லாத்தையும் விட அந்த சனா வைக் கடத்தின உடனே FIR கூட file செய்யறதுக்குள்ளே அத்தனை போலிஸ்காரங்க அது பின்னாடி வந்தாங்க பாருங்க. எந்த சயன்டிஸ்ட் கல்யாணத்துக்கு இந்த போலிஸ் பாதுகாப்பு கெடைக்கும்? வேணா முதல் அமைச்சர் வீட்டுக் கல்யாணத்துக்கு கெடைக்கும்.<br />அப்புறம் முதல்நாள் சேகரிச்ச குப்பையை அப்டியே உடனே பெருங்குடியில் கொண்டு கொட்டிடுவாங்களாம். அதுவும் government லேப் வேஸ்ட் டை . ஏன்யா வயிற்றெரிச்சலைக் கெளப்பறீங்க....<br />இதெல்லாம்தான் கொஞ்சம் சயன்ஸ் பிக்ஷேன் மாதிரி இருந்தது.<br /><br />ரஜினி சார், தளபதி மாதிரி இன்னொரு படம் எப்போ பண்ணுவீங்க?Ushahttp://www.blogger.com/profile/00179239922869639391noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-3672689495290709037.post-39083171594252518542010-09-27T22:14:00.000-07:002010-09-28T07:16:49.443-07:00நினைவில் நின்றதும் , நெஞ்சைத் தொட்டதும்<span>ஜெயா</span> டிவி யில் <span>ஹரியுடன்</span> <span>நான்</span> <span>என்று</span> <span>ஒரு</span> <span>நிகழ்ச்சி</span>. <span>நல்ல</span> <span>பாடகர்</span> <span>ஒருவரைத </span><span>தேர்வு</span> <span>செய்வதற்காக</span> <span>நடத்தப்படும்</span> <span>இந்த</span> <span>நிகழ்ச்சியில்</span> <span>போட்டியாளர்கள்</span> <span>பாடுவதை</span> விட ஹரிஹரன் <span>ஜேம்ஸ்</span> <span>வசந்தன்</span> <span>மற்றும்</span> <span>சரத்</span> <span>வாசுதேவன்</span> <span>அவர்கள்</span> <span>பாடியதை</span> <span>விமர்சிப்பது</span> <span>மிக</span> <span>சுவாரஸ்யமாக</span> <span>இருக்கிறது</span>. <span>அதுவும்</span> <span>சரத்</span> <span>மிகவும்</span> <span>நகைச்சுவையோடு</span> <span>விமர்சிப்பார்</span>. <span>கடந்த</span> <span>வாரம்</span> <span>பாலச்சந்தர்</span>, <span>M</span>.<span>S</span>.<br /><span>விஸ்வநாதன்</span> <span>மற்று</span> <span>இயக்குனர்</span> <span>வசந்த்</span> <span>வந்திருந்தார்கள்</span>. <span>K</span>.<span>B</span>, <span>M</span>.<span>S</span>.<span>V</span>. <span>கூட்டணிப்</span> <span>பாடல்கள்</span> <span>என்னுடைய</span> <span>இளமை</span> <span>காலத்துப்</span> <span>பாடல்கள்</span>. <span>பல</span> <span>சமயங்களில்</span> <span>காலையில்</span> <span>என்ன</span> <span>சாப்பிட்டேன்</span> <span>என்பதே</span> <span>மறந்து</span> <span>போகும்</span> <span>எனக்கு</span> <span>அந்த</span> <span>வரிகள்</span> <span>இன்னும்</span> <span>நினைவு</span> <span>இருப்பது எனக்கே ஆச்சரியம்.</span> <span>அத்துணை</span> <span>அருமையான</span> <span>பாடல்</span> <span>வரிகள்</span>, <span>இனிமையான</span> <span>இசை</span> - <span>இன்றும்</span> <span>என்னுடைய</span> <span>sub</span> <span>conscious</span> <span>memory</span> <span>யில்</span> <span>அழியாமல்</span> <span>இருக்கின்றன</span>. <span>சில</span> <span>பாடல்களைப்</span> <span>பற்றி</span> <span>அவர்கள்</span> <span>சொன்ன</span> <span>பின்னணிச்</span> <span>செய்திகள்</span> <span>இன்னும்</span> <span>சுவாரசியமாக</span> <span>இருந்தன</span>.<br /><span>'சொல்லத்தான்</span> <span>நினைக்கிறேன்'</span> <span>படத்தில்தான்</span> <span>முதல்முறையாக</span> <span>slow</span> <span>motion</span> <span>shots</span> <span>உபயோகப்படுத்தப்படனவாம்</span>. <span>வசந்த்</span> <span>சொன்னார்</span>. <span>அதே</span> <span>படத்தில்</span> <span>தான்</span> <span>முதன்முறையாக</span> <span>reverse</span> <span>technique</span> <span>க்கை</span> <span>கையாண்டிருப்பதாக</span> <span>K</span>.<span>B</span>. <span>சொன்னார்</span>. <span>இது</span> <span>எனக்கு</span> <span>நன்றாக</span> <span>நினைவிருக்கிறது</span>. <span>சுபா</span> <span>சிவகுமாரை</span> <span>நம்பிக்கையோடு</span> <span>காதலிக்கும்</span> <span>பொது</span> <span>பால்</span> <span>பொங்கி</span> <span>வரும்</span> ('<span>ஆசை</span> <span>பொங்குது</span> <span>பால்</span> <span>போலே</span> ') <span>பிறகு</span> <span>அந்த</span> <span>காதல்</span> <span>கை</span> <span>கூடாது</span> <span>போகும்போது</span> <span>பொங்கிய</span> <span>பால்</span> <span>அப்படியே</span> <span>பாத்திரத்தினுள்</span> <span>அடங்கிப்</span> <span>போகும்</span>. <span>இதே</span> <span>போல</span> <span>ஸ்ரீவித்யாவின்</span> <span>காதலுக்கு</span> <span>அடையாளமாய்</span> <span>புகையையும்</span> <span>இப்படியே</span> <span>பயன்</span> <span>படுத்தி</span> <span>இருப்பார்</span>. (<span>காற்றில்</span> <span>மிதக்கும்</span> <span>புகை</span> <span>போலே</span> <span>அவன்</span> <span>கனவில்</span> <span>மிதக்கும்</span> <span>நினைவுகளே</span>)<br /><br /><span>இன்னொரு</span> <span>போட்டியாளர்</span> "<span>அவர்கள்</span>' <span>படத்திலிருந்து</span> '<span>இங்கும்</span> <span>அங்கும்</span> <span>பாதை</span> <span>உண்டு</span>' <span>பாடலைப்</span> <span>பாடினார்</span>. <span>இந்தப்</span> <span>பாடலை</span> <span>கவிஞரின்</span> <span>பிறந்தநாள்</span> <span>விழாவில் </span><span>வந்திருந்தவர்கள்</span> <span>முன்னிலையிலேயே</span> <span>on</span>-<span>the</span>-<span>spot</span> <span>எழுதி</span> compose <span>செய்தார்களாம்</span>. <span>எப்படிப்பட்ட</span> <span>பாடல்</span> - <span>என்ன</span> <span>ஒரு</span> <span>genius</span>? <span>மெட்டுக்குப்</span> <span>பாட்டு</span> <span>எழுதுவதென்பது</span> <span>அந்த</span> <span>காலத்தில</span> <span>மிகவும்</span> <span>அபூர்வம்</span>. <span>அதுவும்</span> <span>K</span>.<span>B</span>. <span>படங்களில்</span> <span>பாடல்கள்</span> <span>கதையை</span> <span>ஒட்டி</span> <span>அமைந்திருக்கும்</span>. <span>பல</span> <span>சமயங்களில்</span> <span>முக்கியமான</span> <span>முடிவுகளுக்கான</span> <span>அடிப்படை</span> <span>காரணம்</span> <span>பாடல்களிலேயே</span> <span>சொல்லப்பட்டுவிடும்</span>, <span>இது</span> <span>போல்</span> <span>plot</span> <span>progression</span> <span>னுக்கு</span> <span>உறுதுணையாக</span> <span>இருக்கும்</span> <span>வரிகள்</span> <span>மிகவும்</span> <span>முக்கியமானதால்</span> <span>அநேகமாக</span> <span>வரிகளும்</span> <span>இசையும்</span> <span>இணைந்து</span> <span>compose</span> <span>செய்ய</span> <span>வேண்டும்</span>. <span>ஆனால்</span> '<span>வான்</span> <span>நிலா</span> <span>நிலா</span> <span>அல்ல</span>' <span>என்ற</span> <span>பட்டினப்</span> <span>பிரவேசம்</span>' <span>படப்</span> <span>பாடல்</span> <span>மெட்டுக்கு</span> <span>எழுதப்பட்டதாம்</span>. <span>M</span>.<span>S</span>.<span>V</span>. <span>யின்</span> <span>இந்த</span> <span>மெட்டு</span> <span>K</span>.<span>B</span>. <span>க்கு</span> <span>ரொம்ப</span> <span>பிடித்துப்</span> <span>போனதால்</span> <span>எப்படியாவது</span> <span>இந்த</span> <span>மெட்டுக்கு</span> <span>கவிஞரிடம்</span> <span>ஒரு</span> <span>பாடல்</span> <span>வாங்கி</span> <span>விடுங்கள்</span> <span>என்று</span> <span>K</span>.<span>B</span>. <span>கேட்டுக்</span> <span>கொண்டாராம்</span>. ' <span>ந</span> <span>ந</span> <span>நா</span> <span>ந</span> <span>ந</span> <span>நா</span>' <span>என்று</span> <span>M</span>.<span>S</span>.<span>V</span> மெட்டைப் <span>பாடிக்</span> <span>காட்டியபோது</span> <span>கவிஞர்</span> '<span>நா</span> <span>நா</span> <span>என்று</span> <span>என்னத்தை</span> <span>எழுதுவது</span>' <span>என்று</span> <span>அலுத்துக்</span> <span>கொண்டாராம்</span>. <span>பிறகு</span> <span>M</span>.<span>S</span>.<span>V</span> '<span>ல</span> <span>ல</span> <span>லா</span>" <span>என்று</span> <span>அதே</span> <span>மெட்டை</span> <span>போட்டதும்</span> '<span>சரி</span> <span>இ</span> <span>ந</span> <span>இந்தா</span> "லா <span>லா</span> <span>என்றே</span> <span>பாட்டு</span> <span>எழுதி</span> <span>தருகிறேன்</span> <span>என்று</span> <span>சொல்லி</span> <span>இந்தப்</span> <span>பாட்டை</span> <span>எழுதித்</span> <span>தந்தாராம்</span>. இந்தப்பாடலில் <span>அநேகமான</span> <span>வார்த்தைகளும்</span> <span>ஒவ்வொரு</span> <span>வரியும்</span> <span>லா</span> <span>என்றே</span> <span>முடியும்</span><br /><span>வான்</span> <span>நிலா</span> <span>நிலா</span> <span>அல்ல</span> <span>உன்</span> <span>வாலிபம்</span> <span>நிலா</span><br /><span>தேன்</span> <span>நிலா</span> <span>எனும</span> <span>நிலா</span> <span>என்</span> <span>தேவியின்</span> <span>நிலா</span><br /><span></span><span></span>நீ இல்லாத நாளெல்லாம் <span>நான்</span> <span>தேய்ந்த</span> <span>வெண்ணிலா</span><br /><span>இப்படி</span>.<br /><br />மூன்று முடிச்சு படத்தில் வந்த 'ஆடி வெள்ளி தேடி வந்து" என்ற பாடலில் அந்தாதி பாணியைக் கையாண்டிருப்பது பற்றியும் சொன்னார் K.B. அவர் பல புதுமைகளை செய்து முன்னோடியாக இருந்திருக்கிறார். அதில் எனக்கு மிகவும் பிடித்தது 'வறுமையின் நிறம் சிகப்பு' படத்தில் "சிப்பி இருக்குது முது இருக்குது" பாடலில் ஸ்ரீதேவி மெட்டு சொல்ல கமல் பாடல் வார்த்தைகள் சொல்லுவது. இப்படித்தான் கவிஞரும் , M.S.V யும் வேலை செய்திருப்பார்கள் என நினைக்கிறேன்.<br />(ஒரு முறை கவிஞர் அரை மணிக்குள் பாடல் எழுதியதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். இது "ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது' என்ற படத்தில் வரும்<br />"ஆண்டவன் இல்லா உலகம் இது" என்ற பாட்டு.)<br /><br /><span>நிகழ்ச்சியில் ஏழு</span> <span>ஸ்வரங்களுக்குள்</span> <span>எத்தனை</span> <span>பாடல்</span>, <span>கனாக்</span> <span>காணும்</span> <span>கண்கள்</span> <span>மெல்ல</span> உறங்காதோ <span>பாடல்</span> <span>சொல்ல</span>, <span>தெய்வம்</span> தந்த வீடு , <span>முத்துக் </span><span>குளிக்க</span> <span>வாரீஹலா</span> <span>என்று</span> <span>போட்டியாளர்கள்</span> <span>ஒவ்வொருவரும்</span> <span>பாடப்</span> <span>பாட</span> <span>K</span>.<span>B</span>.<span>யும்</span>, <span>M</span>.<span>S</span>.<span>V</span> <span>யும்</span> <span>கட்டிக்கொள்ளாத</span> <span>குறைதான்</span>. <span>நானும் </span><span>அப்படியே</span> <span>மலரும்</span> <span>நினைவுகளில்</span> <span>மூழ்கி</span> <span>விட்டேன்</span>. <span>இன்றைய</span> <span>பாடல்களில்</span> <span>எத்தனை</span> <span>பாடல்கள்</span> <span>இது</span> <span>போல்</span> <span>காலம்</span> <span>கடந்து</span> <span>நிற்கும் </span><span>என்பது</span> <span><span><span><span>கேள்விக்குறிதான்</span></span></span></span>. <span>ஒருவேளை</span> <span>இந்த</span> பாடல்களெல்லாம் <span>என்னுடைய</span> <span>தலைமுறைக்குதான்</span> <span>நெஞ்சில்</span> <span>நிறைந்தவையா</span> <span>என்றும்</span> <span>எனக்கு</span><span>தெரியாது</span>. <span>மொத்தத்தில்</span> <span>மிக</span> <span>அருமையான</span> <span>ஒரு</span> <span>நிகழ்ச்சி</span>.<br /><br /><span>நிகழ்ச்சியை</span> <span>அளிக்கும்</span> <span>விளம்பரதாரர்கள்</span> Bru <span>காபி</span>:<br /><span>விளம்பரமும்</span> <span>அருமையோ</span> <span>அருமை</span>.<span><br />அந்த</span> <span>பெண்</span> <span>கவலையே</span> <span>இல்லாமல்</span> <span>இரண்டாவது</span> <span>decoction</span> <span>இறக்குவதற்கு</span> <span>வெந்நீர்</span> <span>போடுவதாகட்டும்</span>, <span>விருந்தினர்கள் </span><span>இரண்டாவது</span> <span>decoction</span> <span>என்று</span> <span>கண்டு</span> <span>பிடித்து</span> <span>விடுவார்களோ</span> <span>என்ற</span> <span>மாமியாரின்</span> <span>கவலைக்கு</span> <span>கூல்</span> <span>ஆக</span> "<span>உங்களுக்கு</span> <span>எப்போவாவது</span> <span>தெரிஞ்சுதா</span>?" <span>என்று</span> <span>கேட்பதாகட்டும்</span>, <span>அப்புறம்</span> <span>வந்தவர்கள்</span> <span>காபியை</span> '<span>பிரமாதம்</span>'<span>என்று</span> <span>பாராட்டும்</span> <span>போது</span> <span>இருவரும்</span> <span>பார்வை</span> <span>பரிமாறுவதாகட்டும்</span>. <span>இரண்டு</span> <span>நிமிடத்துக்குள்</span> <span>ஒரு</span> <span>சின்ன</span> <span>கதையே</span> <span>சொல்லி</span> <span>விடுகிறார்கள்</span> <span>அதுவும்</span> <span>முற்றிலும்</span> <span>யதார்த்தமாக</span>. <span>இந்த</span> <span>பெண்</span> <span>யாரோ</span>. <span>பாலச்சந்தர்</span> <span>பார்த்தால்</span> <span>அப்படியே</span> <span>அடுத்த</span> <span>படத்தில்</span> <span>போட்டு</span> <span>விடுவார்</span>. <span>அவ்வளவு</span> <span>இயல்பான</span> <span>நடிப்பு</span>. கால் சென்டிமீட்டர் மாத்திரம் கண்ணையும் உதட்டையும் அகட்டி குறும்பு, விஷமம், கிண்டல் எல்லாவற்றையும் வெளிபடுத்தும் திறமை அந்த பெண்ணிடம். முகமும் அவ்வளவு அழகாய் ஒத்துழைக்கிறது.<span><br />சில</span> <span>சமயம்</span> <span>தோன்றுகிறது</span> <span>இன்றைக்கு</span> <span>வரும்</span> <span>விளம்பரப்</span> <span>படங்களில்</span> <span>இருக்கும்</span> <span>creativity</span> <span>மற்றும்</span> <span>technical</span> <span>excellence</span> <span>முழு</span> <span>நீளப்</span> <span>படங்களில்</span> <span>கூட</span> <span>இல்லையோ</span> <span>என்று</span>.<br /><span>இங்கே</span> <span>சில</span> <span>நாட்களாக</span> <span>பதிவு</span> <span>செய்யப்</span> <span>பல</span> <span>தடைகள்</span>. <span>சில</span> <span>நாட்கள்</span> <span>இணையத்</span> <span>தொடர்பில்</span> <span>குளறுபடி</span>. <span>சில</span> <span>நாட்கள்</span> <span>தமிழில்</span> <span>transliteration</span> <span>செய்வதில்</span> <span>தடங்கல்கள்</span>. <span>எல்லாவற்றையும்</span> <span>மீறி</span> இன்றைக்குப் <span>பதிவு</span> <span>செய்தே</span> <span>தீருவது</span> <span>என்று</span> <span>கங்கணம்</span> <span>கட்டிக்</span> <span>கொண்டு</span> <span>செய்தும்</span> <span>விட்டேன்</span>.<br /><span>அப்புறம்</span> <span>என்ன</span> <span>செய்தி</span>, <span>நீங்கள்</span> <span>சொல்லுங்கள்</span>...Ushahttp://www.blogger.com/profile/00179239922869639391noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-3672689495290709037.post-57120716564395192392010-09-13T07:14:00.000-07:002010-09-13T08:48:04.909-07:00பாலக்காட்டுப் பக்கத்திலே ஒரு பண்டம்சமீபத்தில் பாலக்காட்டில் ஒரு குடும்ப வைபவத்திற்கு போயிருந்தோம். காலை உணவுக்கு எங்களை அழைத்திருந்த வீட்டில் ராமசெரி இட்லி என்ற பெயர் பலமுறை சொல்லப்பட்டது. "வாருங்கள் ராமசெரி இட்லி வந்தாச்சு' என்றார் ஒருவர். சற்று நேரத்தில் இன்னொருவர் 'ராமசெரி இட்லி ஆறிப் போய் விடப்போகிறது. சாப்பிட வாருங்கள்' என்றார். பரமாறியவர் 'ம்ம், ராமசெரி இட்லி எப்படி, நன்றாக இருக்கிறதா?' என்றார். அப்படி அதில் என்னதான் விசேஷம் என்று பார்த்தால் ஆவியில் வைத்த தோசை போன்ற ஒரு பதார்த்தம். மிருதுவாக இருந்தது. ருசி நம் இட்லி போலத்தான். இலையில் வைத்த இரண்டை சாப்பிட்டு முடித்ததும் இன்னொருவர் வந்து "இன்னும் ரெண்டு போட்டுக் கொள்ளுங்கள். இது இங்கே விட்டால் வேறு எங்கும் கிடைக்காது.' என்றார். கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை என்பார்களே அந்த கதை போல எனக்கு இந்த பதார்த்தத்தில் அப்படி என்ன விசேஷம் என்றே புரியவில்லை. ராமசெரி இட்லி இல்லை என்றால் என்ன எங்கள் ஊரில் எங்கும் இட்லி கிடைக்குமே. ஒரே பதார்த்தம்தானே, வடிவம்தான் வேறு மாதிரி இருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.<br /><br />ஏறக்குறைய ஒரே மாதிரி ருசி உள்ள பதார்தங்களுக்காக மிகவும் மெனக்கிடுவது எனக்குப் புரியாத விஷயம். இப்படித்தான் சேவை என்னும் சிற்றுணவை செய்வதற்கு எங்கள் வீட்டுப் பெரியவர்கள் மிகவும் சிரமம் எடுத்துக் கொள்வார்கள். இதை இடியாப்பம் என்றும் சொல்வார்கள். இப்போதெல்லாம் அது instant வடிவத்தில் கிடைக்கிறது. பாக்கெட்டை பிரித்து வெந்நீரில் கொதிக்க வைத்தால் தயார். ஒரு முப்பது நாற்பது வருடங்களுக்கு முன் இது ஒரு industrial process போல அவ்வளவு சிரமமான சமாசாரம். அரிசியை ஊறவைத்து, இடித்து மாவு கிளறி அப்புறம் இதற்காகவே உபயோகப்படும் ஒரு இயந்திரத்தில் இந்த மாவை அடைத்து அதை மிகவும் சிரமப்பட்டுப் பிழிந்து பின்னர் இதற்கு வித விதமான தாளிதம் செய்து தயாரிப்பார்கள். இதில் ஏதாவது ஒரு கட்டத்தில் இசகு பிசகானாலும் பண்டத்தின் ருசி குறைந்து போகும். <span>இறுதியில்</span> பார்த்தால்<br />ருசி என்னமோ ஏறக்குறைய எலுமிச்சம்பழ சாதம், தேங்காய் சாதம் போலத்தான்<br /> இருக்கும்.(சேவைப் பிரியர்கள் அடிக்க வராதீர்கள். 'ஏறக்குறைய' என்றுதான் முதலிலேயே <span>சொன்னேனே .</span>)<br /> இப்படித்தான் ஒரு மாமி வீட்டில் ஒருமுறை மிகவும் கஷ்டப்பட்டு சேவை தயாரித்துக் கொடுத்தாள். நானோ நன்றாக சாப்பிட்டு விட்டு 'ஏன் மாமி இந்தக்<br /> கஷ்டம் , வெறும் தேங்காய் சாதம் , எலுமிச்சம்பழ சாதமே கொடுத்திருந்தாலும் போதுமே ' என்று சொல்லிவிட்டேன் . மாமிக்கு வந்ததே கோபம். உனக்காக பட்டு நூல் போல சேவை பண்ணி இருக்கிறேன் இப்படி சொல்லி விட்டாயே என்று நொந்து போனாள்.<br /><br /> பிடி கொழுக்கட்டை என்றொரு சிற்றுண்டி. அரிசி உப்புமாவை அருமையாகத் தயாரித்துபின் அதை உருட்டி இட்லி போல வேக வைத்துக் கொடுப்பார்கள். ஏன் அதை உப்புமாவாகவே சாப்பிடலாமே. எதற்கு இன்னொரு கூடுதல் கட்டம்?<br />உடம்பு சுகம் இல்லாதவர்கள், வயதானவர் அல்லது குழந்தைகள் போன்ற ஜீரண சக்தி குறைதவர்களுக்கு இந்த இரட்டை வேக்காடுதேவைப்படும். மற்றபடி நாக்கு ருசிக்காகவே சாபிடுவோருக்கு இந்த கூடுதல் வேக்காட்டின் மூலம் ஒரு வித்யாசமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. உருவம் மட்டும்தான் வேறுபடும். இல்லை ஒருவேளை ருசியும் நுணுக்கமாக வேறுபடுமோ எனக்குத்தான் அவ்வளவு தெரியவில்லையோ. அதுவும் தெரியாது. ஆனால் இத்தனை நுணுக்கமான சுவை வித்யாசத்துக்காக நான் மெனக்கிட மாட்டேன்.<br /><br />ஆனாலும் இந்த ராமசெரி இட்லியில் அப்படி என்னதான் இருக்கிறது என்று வலை வீசிப் பார்த்ததில் கிடைத்தது இங்கே:<br />From <a href="http://en.wikipedia.org/wiki/Idli" target="_blank">http://en.wikipedia.org/wiki/Idli</a><br /><h3><span>Ramasseri idli</span></h3> <p>Ramasseri, an offbeat village in Palakkad is known all over Kerala for the idlis it makes—the delicious Ramasseri Idli. Spongy and soft Ramasseri Idli is slightly different in shape from the conventional idlis. It is a little flat and round. Ramasseri Idli is eaten with Podi mixed in <a href="http://en.wikipedia.org/wiki/Coconut_oil" title="Coconut oil" target="_blank">coconut oil</a>. The beginning was from a <a href="http://en.wikipedia.org/wiki/Mudaliar" title="Mudaliar" target="_blank">Mudaliar</a> family living near Mannath Bhagavathi Temple in Ramasseri near <a href="http://en.wikipedia.org/w/index.php?title=Elappully&action=edit&redlink=1" title="Elappully (page does not exist)" target="_blank">Elappully</a>.<sup title="This claim needs references to reliable sources from June 2009" style="white-space: nowrap;">[<i><a href="http://en.wikipedia.org/wiki/Wikipedia:Citation_needed" title="Wikipedia:Citation needed" target="_blank">citation needed</a></i>]</sup></p> <p>The recipe of Ramasseri idli dates back to about one century, which again is a trade secret. The Muthaliyar family had migrated to Palakkad from <a href="http://en.wikipedia.org/wiki/Kanchipuram" title="Kanchipuram" target="_blank">Kanchipuram</a> in <a href="http://en.wikipedia.org/wiki/Tamil_Nadu" title="Tamil Nadu" target="_blank">Tamil Nadu</a>. The new generation in the profession says that the secret of the recipe and taste were handed down to them from the older women of the community. Now the idli business is confined to four families in Ramasseri. Selection of rice is very important in making Ramasseri idli. Usually the varieties used are <i>Kazhama</i>, <i>Thavalakannan</i>, <a href="http://en.wikipedia.org/wiki/Ponni_Rice" title="Ponni Rice" target="_blank"><i>Ponni</i></a> etc.</p> <p>The taste depends on the boiling of paddy itself. Drying and dehusking are also important and need to be done in a particular way. The combination of rice and black gram is also equally important. For 10 kg of rice, one kg of black gram is used. Idli is made only after four hours of fermentation. Steaming of the idli is done on a cloth covered on the mud pot using firewood. This allegedly provides a special taste to the preparation. Leftover Idli can be torn into crumbs and used for preparing dishes such as <a href="http://en.wikipedia.org/w/index.php?title=Idli_fry&action=edit&redlink=1" title="Idli fry (page does not exist)" target="_blank">Idli fry</a> and Idli Upma.</p>இதை சமைக்கும் முறையை விளக்கும் எழுத்தும் புகைப்படமும் <a href="http://niyasworld.blogspot.com/2009/08/ramasseri-idli.html"><span>இங்கே</span></a>:<br />இப்போது புரிகிறது ஏன் அதனை முறை அந்தப பண்டத்தின் பெயரைத் திரும்ப திரும்ப சொன்னார்கள் என்று. அந்த சின்ன வட்டத்துக்குள் அவ்வளவு விஷயம் இருக்குது. இதை முதலிலேயே படித்து விட்டுப் போயிருந்தால் நானும் இதைப் பற்றி கொஞ்சம் சிலாஹித்துப் பேசி <span></span> இருக்கலாம். அவர்களும் இவ்வளவு சிரமப்பட்டது வீண் போகவில்லை என்று சந்தோஷப் பட்டிருப்பார்கள். நீங்கள் அடுத்த முறை பாலக்காட்டுபக்கம் போனால் இதை கட்டாயம் ருசித்துப் பாருங்கள்.<br /><span style="font-size:78%;"><span>ஸ்ஸ்ஸ்</span>..<span>அப்புறம்</span> <span>வந்து</span> <span>அதில்</span> <span>அப்படி</span> <span>என்ன</span> <span>ருசி</span> <span>இருக்கிறது</span> <span>என்று</span> <span>என்னிடம்</span><span>சொல்லுங்கள்</span>. <span>நானும்</span> <span>தெரிந்து</span> <span>கொள்கிறேன்</span> <span>அந்த</span> <span>கற்பூர</span> <span>வாசத்தைபற்றி</span>.</span>Ushahttp://www.blogger.com/profile/00179239922869639391noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-3672689495290709037.post-3431021760843639632010-08-30T07:03:00.000-07:002010-08-30T07:04:18.242-07:00கதை அல்ல நிஜம்வடிவுக்கரசி என்ற தமிழ் நடிகை ஒரு பேட்டியில் சொன்னார்கள் அவர்களுக்கு செடிகள் வளர்ப்பதில் விருப்பம் உண்டாம். அவர்களுடைய் பால்கனியிலேயே நாலைந்து தொட்டிகளில் பூச்செடிகள் வளர்க்கிறார்களாம். இதென்ன பெரிய செய்தி என்கிறீர்களா? இருங்கள். அவர்கள் அடுத்து சொன்ன விஷயம்தான் சுவாரசியமாக இருந்தது - அதாவது இந்த செடிகளுடன் பேசுவாராம். ''<span style="font-style: italic;">ஓஹோ</span><span style="font-style: italic;"> </span> <span style="font-style: italic;">அந்த</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">மாதிரி</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">கேசா</span>' என்று நினைக்காதீர்கள். அந்த செடிகளும் இதற்கு respond செய்யுமாம். ஒரு முறை அவர்கள் இருக்கும் கட்டிடத்தில் செடிகள் வளர்ப்பதற்கு ஏதோ எதிர்ப்பு தெரிவித்தார்களாம். ( நாட்டிலே எதைத்தான் எதிர்ப்பது என்றுதான் வரைமுறையே இல்லாமல் இருக்கிறதே நிலைமை!) சரி என்று இவரும் அந்த செடிகளிடம் சொல்லிக் கொண்டிருந்தாராம்: '<span style="font-style: italic;">இங்கே</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">செடிகள்</span> <span style="font-style: italic;">வைத்துக்கொள்ளக்கூடாதாம்</span><span style="font-style: italic;">. </span><span style="font-style: italic;">உங்களை</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">எல்லாம்</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">கொண்டு</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">கீழே</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">எங்கேயாவது</span> <span style="font-style: italic;">வைக்கலாமா</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">என்று</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">இருக்கிறேன்</span>" என்று. அடுத்த சில நாட்களுக்கு ஒரு செடியிலும் பூவே பூக்கவில்லையாம். அப்புறம் இந்த எதிர்ப்பெல்லாம் கொஞ்சம் அடங்கியதும் செடிகளிடம் '<span style="font-style: italic;">சரி</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">இப்படி</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">எதனை</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">நாள்தான்</span> <span style="font-style: italic;">பூக்காமலேயே</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">இருப்பீங்க</span><span style="font-style: italic;">. </span><span style="font-style: italic;">என்னாலே</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">வெளிலே</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">போயெல்லாம்</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">பூ</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">வாங்க</span> <span style="font-style: italic;">முடியாது</span><span style="font-style: italic;">. </span><span style="font-style: italic;">கொஞ்சம்</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">பூக்கற</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">வழியைப்</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">பாருங்க</span>" என்றாராம் . மறுபடியும் பூத்ததாம்.<br /><br />செடிகளிடம் பேசுவது பாடுவது போன்ற வழிகளால் அவற்றை சிறப்பாக வளர்க்க முடியும் என்று பலரும் சொல்லிக் கேட்டிருக்கிறேன். இங்கே பெங்களூரில் லால்பாகில் இருக்கும் nursery யில் இதமான இசையை எப்போதும் போட்டு வைக்கிறார்கள். இதற்காகத்தான் என நினைக்கிறேன்.<br />நமது முன்னோர்களும் செடிகொடிகளுடன் இது போன்ற அன்பு, மரியாதையுடன் இருந்திருக்கிறார்கள் என்று என்னுடைய ஆசிரியை ஒருவர் சொல்வார். நாம் துளசிச் செடியிலிருந்து இலைகளைப் பறிக்கும் போதோ அல்லது பூஜைக்காக செடிகளிடம் பூக்கள் பறிக்கும்போதோ முதலில் அவற்றின் அனுமதி கேட்டுப் பின்னால்தான் பறிக்க வேண்டும். அப்படியே போய் பூவைக் கொய்வதோ கிளையை வெட்டுவதோ இயற்கையை அவமதிக்கும் செயல் என்பார்.<br />இவற்றை எல்லாம் பின்பற்றி இருந்தால் இன்று இப்படி ecological imbalance எல்லாம் வந்திருக்காது.<br /><br />இன்றும் கிராமப்புறங்களில் இது போன்ற நம்பிக்கைகள், பழக்கங்கள் இருக்கின்றன. என்னுடைய வீட்டில் வேலை செய்யும் பெண்மணி சில நாட்களில் செடிகளை வெட்டக்கூடாது என்பதில் மிகவும் கண்டிப்பாக இருப்பாள். ஒருமுறை புல்வெளியின் நடுவே மிளகாய்ச் செடி வளர்ந்திருக்கிறதே அதை வெட்டி அந்த பக்கம் வைக்கலாமே என்றேன். அதற்கு ' <span style="font-style: italic;">ஏன்</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">வேண்டுமானால்</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">அதை</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">சுற்றிக்</span> <span style="font-style: italic;">கொண்டு</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">நீங்கள்</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">நடக்கலாமே</span><span style="font-style: italic;">. </span><span style="font-style: italic;">அது</span><span style="font-style: italic;">பாவம்</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">இருந்து</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">விட்டுப்</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">போகிறது</span>' என்று சொல்லிவிட்டு அதை அங்கேயே பாதுகாப்பாக வளர்த்தாள். கொஞ்சம் ஹிட்லர் மாதிரித் தோன்றினாலும் அவள் சொன்னதில் அர்த்தம் இருக்கிறது என்று நானும் விட்டு விட்டேன். அந்தச் செடியும் மிக நன்றி உணர்வோடு அளவுக்கு அதிகமாகவே மிளகாய் கொடுத்தது.<br />இதுபோல எங்கள் தோட்டத்தில் ஒரு பலாமரம் வளர்ந்திருந்தது. நானும் அது காய்க்கும் காய்க்கும் என்று ஆறு வருஷம் ஆசையாகப் பார்த்துக் கொண்டே இருந்தேன். அது பெரிதாக வளர்ந்து கொண்டே போயிற்று ஆனால காய்ப்பதாக இல்லை. பக்கத்தில் இருந்த எலுமிச்சைச்செடி முருங்கை, கறிவேப்பிலை எல்லாம் வேறே இதன் நிழலில் காய்ந்து போய்க் கொண்டிருந்தன. சரி பலாமரத்தை வெட்டிவிடலாம் என்று தோட்டக்காரரிடம் சொன்னேன். அவர் 'பொறுங்கள் அம்மா காய்க்கும். ஒரு ஆணி கொடுங்கள்' என்று சொல்லி அதன் மேல் ஒரு ஆணியை அடித்தார். இனிமேல் காய்க்கும் பாருங்கள் என்று வேறே சொன்னார். வீட்டு வேலை செய்யும் அம்மா இதை எல்லாம் பார்த்துக் கொண்டே இருந்தவள் அந்த மரத்திடம் போய் பேச ஆரம்பித்தாள் : ' <span style="font-style: italic;">உன்னை</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">அம்மா</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">எதற்கு</span> <span style="font-style: italic;">பாடுபட்டு</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">வளர்கிறார்கள்</span><span style="font-style: italic;">. </span><span style="font-style: italic;">உனக்கு</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">கொஞ்சமும்</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">நன்றியே</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">இல்லையே</span><span style="font-style: italic;">. </span><span style="font-style: italic;">இவ்வளவு</span> <span style="font-style: italic;">பெரிதாய்</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">வளர்ந்திருக்கிறாய்</span><span style="font-style: italic;">. </span><span style="font-style: italic;">ஆனால்</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">ஒரு</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">பிஞ்சு</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">கூட</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">இல்லை</span><span style="font-style: italic;">. </span><span style="font-style: italic;">வெக்கமாக</span> <span style="font-style: italic;">இல்லையா</span><span style="font-style: italic;">. </span><span style="font-style: italic;">இரு</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">இப்படியே</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">நீ</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">இருந்தால்</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">உன்னை</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">வெட்டிதான்</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">போட</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">வேண்டும்</span>" என்றெல்லாம் மரத்திடம்! எனக்கு சிரிப்பு தாங்கவில்லை. மூன்று மாதம் ஆன பின்னால் ஒரு நாள் என்னைக் கூப்பிட்டாள். போய் பார்த்தால் மரத்தில் 8 காய்கள். "<span style="font-style: italic;">பாத்தீங்களாம்மா</span><span style="font-style: italic;">, </span><span style="font-style: italic;">அன்னிக்கு</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">என்னமோ</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">சிரிச்சீங்களே</span><span style="font-style: italic;">. </span><span style="font-style: italic;">இப்போ</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">பாருங்க</span><span style="font-style: italic;">. </span><span style="font-style: italic;">சுரணை</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">வந்திருச்சு</span><span style="font-style: italic;">. </span><span style="font-style: italic;">எப்படி</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">காய்ச்சு</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">தொங்குது</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">பாருங்க</span><span style="font-style: italic;">. </span><span style="font-style: italic;">நாம்</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">பேசினா</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">அதுக்கு</span> <span style="font-style: italic;">புரியும்</span><span style="font-style: italic;">'</span> என்றாள்.<br /><br />எதை நம்புவது, நம்பாமல் இருப்பது எனக்கு ஒன்றும் புரியவில்லை. பலாப்பழங்கள் இனிப்பாக இருந்தன. அது மாத்திரம்தான் புரிந்தது. '<span style="font-style: italic;">அம்மா</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">தாயே</span> <span style="font-style: italic;">அடுத்த</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">வருஷமும்</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">இது</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">போல</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">பழம்</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">கொடு</span>' என்று ஒரு application போட்டு வைத்திருக்கிறேன். அப்புறம் தோட்டப் பக்கம் போகும்போது ஏதும் எக்குத்தப்பாக பேசுவதில்லை. எதற்கு வம்பு?Ushahttp://www.blogger.com/profile/00179239922869639391noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-3672689495290709037.post-44957169908065788092010-08-26T06:02:00.000-07:002010-08-27T07:17:32.853-07:00கல்யாணம் பண்ணிப் பார்எனக்கு மிகவும் நெருங்கிய சொந்தக்காரப் பெண் ஒருத்திக்கு கல்யாணம் நிச்சயம் ஆகி இருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்புதான் என் மகனுக்குத் கல்யாணம் நடந்தது என்றாலும் இப்போதுதான் திருமணம் என்ற ஒரு நிகழ்வின் முழுப் பரிமாணமும் எனக்குப் புரிய ஆரம்பித்திருக்கிறது. சமீப காலத்தில் எங்கள் நெருங்கிய வட்டத்தில் நடந்த சில திருமணங்களின் செலவு 10 லட்சத்துக்கும் மேற்பட்டது என்று கேள்விப் பட்டபோது ஒரு வேளை திருமணப் பந்தலையே பண நோட்டுக்களை வைத்து கட்டினார்களோ என்று நான் யோசித்ததுண்டு. ஆனால் இன்றைய விலைவாசியில் தலைக்கு முன்னூற்று ஐம்பது ருபாய் என்ற கணக்கில் கல்யாண சாப்பாட்டுக்கே பல லட்சங்கள் செலவாகிறதாம். அது போக மேடை அலங்காரம், பூப் பந்தல்கள், மணப்பெண் அலங்காரம், தாம்பூலப்பை , சீர் பட்சணம், இரண்டு நாள் சத்திர வாடகை சேர்த்தால் பத்து லட்சம் ஒன்றுமே இல்லை என்று என் உறவுக்காரப் பெண்மணி (பெண்ணின் தாயார்) எனக்கு விளக்கினாள். இது தவிர புடவை, வேஷ்டி, தங்க நகைகள், வெள்ளிப் பத்திரம் என்று இன்னும் சில லட்சங்கள்.<br /><br />வீட்டில் ஒரு திருமணம் என்பது மகிழ்ச்சியான நிகழ்ச்சிதான்; அதைச் சிறப்பாகக் கொண்டாட நினைப்பது இயல்பே. ஆனால் கொண்டாடுவது என்றால் ஆடம்பரமாக செலவு செய்துதான் கொண்டாட வேண்டுமா என்ன? என்னதான் சொன்னாலும் பெண்ணுக்கு நகை புடவை போன்ற விஷயங்களை யாரும் குறைப்பதாக இல்லை. இதில் வேடிக்கை ஆன விஷயம் என்னவென்றால் இன்றைய இளம்பெண்கள் பலரும் தங்க நகை அணிவதை விரும்புவதும் இல்லை. ஆனாலும் பெற்றோர் விடுவதாக இல்லை. சம்பிரதாயம் என்று சொல்லி இருபது பவுனாவது போட்டு விடுகிறார்கள். இப்போதெல்லாம் ஒரு புதுக் கூத்து வேறே சேர்ந்து கொண்டிருக்கிறது. மாப்பிள்ளைப் பையனுக்கு செயின், மோதிரம் போக braceletடாம். எந்தப் பிள்ளை இதை எல்லாம் போட்டுக் கொண்டு இருக்கிறான் என்று புரியவில்லை. எனக்குத் தெரிந்து தமிழ் சினிமாவில் மைனர்<br />வேடம் போடுபவர்கள்தான் இதெல்லாம் போட்டுக் கொண்டு அலைகிறார்கள். மற்றதெல்லாம் கழுத்தில் ஆபீஸ் id கார்டைத்தான் தொங்கவிட்டுக் கொண்டிருக்கிறது.<br /><br />புடவை - பெண்ணுக்கு மட்டுமே ஐந்து ஆறு ஆடம்பரமான புடவைகள். புடவைக் கடைகளுக்கு இதுவே ஒரு பெரிய பிசினஸ். <a href="http://www.pothys.com/"><span>சாமுத்ரிக்கா</span>, <span>பரம்பரா</span></a> என்று என்னென்னமோ பேர் சொல்லி புடைவைகள் - ஒன்றாவது 25 ஆயிரத்துக்குக் குறைவில்லை. இதில் விசேஷம் என்ன வென்றால் இந்தப் பெண்களில் முக்கால்வாசிக்கு மேல் புடவையே கட்டியது இல்லை இனியும் கட்டுவதாக இல்லை. திருமண விசேஷங்களுக்குப் புடவை கட்டி அலங்காரம் செய்வதற்கென்றே அலங்கார நிபுணர்கள் வருவார்கள். பெண்ணின் கூடவே இருந்து வேளாவேளைக்கு அலங்காரம் செய்வார்கள். சும்மா 25அல்லது 30 கொடுத்ததால் போதும் - ஆயிரங்கள்தான். அந்த வீடியோ விலும் போட்டோக்களிலும் அழகாக வரவேண்டும் என்பது மட்டுமே நோக்கம். அப்புறம் இந்தப் புடவைகள் அழகாக மடித்து கப்போர்ட் உள்ளே தூங்கும். அவ்வளவுதான். இதற்கு என் இதனை விலை கொடுத்து வாங்க வேண்டும். பேசாமல் convocation gown போல வாடகைக்கு எடுத்துவிடலாமே என்று தோன்றும். மேல் நாடுகளிலும் வெட்டிங் gown க்கு செலவழிக்கிறார்கள். ஆனால் அது ஒரு உடுப்புக்காக மட்டுமே. இங்கே சுமார் ஐந்தோ ஆறோ. இதெல்லாம் போக ஒரு ஒன்பது கஜம் புடவை வேறே - அந்தக் காலத்தில் பூஜை விரதம் போன்ற நாட்களில் 9 கஜம் உடுத்துவார்கள். இப்போதோ பலருக்கும் அதை உடுத்தவே தெரியாது. ஆனாலும் சம்பிரதாயமாய் அந்த தாலி கட்டும் வைபவத்துக்கு அதைக் கட்டாயம் அணிய வேண்டும். அப்புறம் அலமாரி உள்ளே அது தூங்க வேண்டும். சரி ஒரு மணி நேரத்துக்குத்தானே என்று சாதாரணமாக வாங்குவார்களா என்றால் அதுதான் இல்லை. இரண்டு பக்கமும் கெட்டி ஜரிகை போட்டு பெரிய புடவை வேண்டும். இல்லை என்றால் கல்யாணத்துக்கு வருபவர்கள் என்ன நினைப்பார்கள் என்பார்கள். ஒரு காலத்தில் ஆந்திரா மட்டும் கர்நாடகத்தில் முஹூர்த்ததின் போது மஞ்சளில் தோய்த்த காட்டன் புடவையைத்தான் மணப்பெண்ணுக்கு கட்டுவார்களாம். நான் பார்த்த கேரளா நாயர் திருமணத்திலும் பெண் அது போல லேசான ஜரிகை போட்ட வெளிர் சந்தன புடவைதான் கட்டி இருந்தாள். பெண்ணுக்கும் பிள்ளைக்கும் நெருங்கிய உறவினர்களும் அது போன்ற புடவை அல்லது முண்டு தாவணிதான் அணிந்திருந்தனர். இந்த ஆடம்பரப் பட்டுப் புடவைகள் எல்லாம் எப்போது சம்பிரதாயம் ஆயின என்று கொஞ்சம் ஆராய்ச்சி செய்து கண்டு பிடிக்க வேண்டும். எனகென்னமோ இவை புடவை உற்பத்தியாளர்களின் மார்க்கெட்டிங் திறமையால் உருவாக்கப்பட்ட சம்பிரதாயங்கள் என்றுதான் தோன்றுகிறது.<br /><br />சானியா - ஷோயப் திருமணத்தின் போது கேள்விப்பட்டேன் பாகிஸ்தானில் விருந்துகளில் ஒரு சிறப்பு உணவு item மட்டுமே போட வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது என்று. இந்தச் சட்டத்தை நம் நாட்டிலும் தீவிரமாக செயல்படுத்த வேண்டும். நம் கல்யாண விருந்துகளில்தான் எத்தனை வீணடிக்கிறோம்! எத்தனை வகையான பொரியல், கூட்டு, எத்தனை வகை இனிப்புகள்! நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களில் பாதிக்கு மேல் சர்க்கரை வியாதி கேஸ். இன்னும் பலருக்கு உடல் பருமன் தொல்லை. எத்தனையே ஆரோக்கியமாக இருந்தாலும் திரும்பத் திரும்ப விருந்து சாப்பாடு மூன்று வேளை சாப்பிட்டால் யாருக்கும் அஜீரணம்தான் வரும். ஒரே ஒரு வேளை அல்லது இரண்டு வேளை மட்டுமே கல்யாண விருந்து கொடுத்தால் போதுமே. அதிலும் எந்த மாதிரியான விருந்து என்று தீர்மானம் செய்து கொண்டு எல்லோருக்கும் அதே போடலாம். ஒரு பக்கம் தென்னிந்திய வகைகள், ஒரு பக்கம் வடை இந்திய உணவு, அப்புறம் chinese, ஒரு பக்கம் pasta, pizza, அது தவிர சாட், அப்புறம் தோசா கவுன்ட்டர், ஸ்வீட்ஸ் அது போக ஐஸ் கிரீம். இது போல் சாப்பிட வேண்டும் என்றால் ஹோடேலுக்குப் போகட்டுமே எதற்கு கல்யாணத்தில் இத்தனை வகைகள்? இப்படித்தான் செலவையும் wastage ஐயும் அதிகரிக்கிறார்கள்.<br /><br />சமீபத்தில் ஒரு திருமணத்தில் reception ; இப்படித்தான் எக்கச்சக்கமான சாய்ஸ். ஒரு ரவுண்டு பார்த்துக் கொண்டு வந்ததிலேயே வயிறு ரொம்பிப் போன உணர்வு. நேராக தயிர் சாதம் எங்கே என்று தேடித் பார்த்து அதை மட்டும் சாப்பிட்டு வந்து விட்டேன். அதற்கும் அந்த contractor 350 ரூபாய்தானே போடப்போகிறார்? என்னைப் போலப் பலரும் இருப்பார்கள். யாரால் அங்கே போடும் எல்லாவற்றையும் சாப்பிட முடியும்.?இல்லை சாபிட்டலும் யார் மறுநாள் அவதிப் படுவது?<br /><br />இது எல்லாவற்றுக்கும் மேலான ஒரு வீண் செலவு என்னவென்றால் இந்தத் தாம்பூலத்தோடு ஏதோ பாத்திரங்கள் அல்லது fancy பொருட்கள் கொடுக்கிறார்களே அது எதற்கு? முக்கால்வாசி வீட்டில் அது வேலைக்காரிக்கு போகிறது. குழந்தைகளை பிறந்தநாள் கொண்டாட அழைக்கும்போது இது போல் பரிசு கொடுத்து அனுப்புவார்கள். வாழ்த்த வரும் குழந்தைகள் பிறந்தநாள் கொண்டாடும் குழந்தைக்கு பரிசு கொண்டு வருவார்கள். அதனால் அவர்கள் போகும்போது வெறும் கையோடு அனுப்ப வேண்டாம் என்று ஏதானும் ஒரு பொம்மையோ விளையாட்டு பொருளோ கொடுத்து அனுப்புவார்கள். கல்யாணத்துக்கு வரும் விருந்தினர் அனைவருக்கும் தாம்பூலம் தனித்தனியே கொடுக்க இயலாது என்பதற்காக உருவாக்கப்பட்ட conveneince இந்தப்பை. அதற்கும் மேலே அதனுள்ளே எதற்கு ஒரு ஸ்டீல் பாத்திரம் அல்லது பிளாஸ்டிக் டப்பா? மொய்க்கு பதில் மரியாதையா? ஏற்கனவே இருக்கும் செலவு போதாதென்று இது போல் ஏதானும் புதுப் புது 'சம்பிரதாயங்கள்' வேறு எதற்கு உருவாக்க வேண்டும்?<br /><br />இப்போது கல்யாணம் நிச்சயம் ஆகி இருக்கிறது என்று சொன்னேனே அந்தப் பெண்ணுக்கும் அவளுடைய தாயாருக்கும் இடையே நடந்த ஒரு சம்பாஷணையின் போது நானும் இருந்தேன். தாயார் பெண்ணுக்கு இன்னும் சில வெள்ளிப் பாத்திரங்கள் வாங்க வேண்டும் என்று சொன்னாள்அதற்கு கல்யாணம் ஆக இருக்கும் பெண் சொன்னாள்; "<span style="font-style: italic;">எதற்காக</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">அம்மா</span><span style="font-style: italic;">, </span><span style="font-style: italic;">அவர்களோ</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">கேட்கவில்லை</span><span style="font-style: italic;">. </span><span style="font-style: italic;">எனக்கோ</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">இவை</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">எல்லாம்</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">உபயோகப்</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">படவே</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">போவதில்லை</span><span style="font-style: italic;">. </span><span style="font-style: italic;">இதை</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">வீட்டில்</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">பூட்டி</span> <span style="font-style: italic;">வைத்து</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">விட்டு</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">நான்</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">வேலைக்குப்</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">போகும்போது</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">கவலை</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">வேறு</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">பட</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">வேண்டும்</span><span style="font-style: italic;">. </span><span style="font-style: italic;">ஏன்</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">வீணாக</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">அலைகிறாய்</span>?" என்று. அதற்கு அவள் தாயார் சொல்கிறாள்: "<span style="font-style: italic;">இதோ</span> <span style="font-style: italic;">பார்</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">சபையில்</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">சில</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">விஷயங்கள்</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">வைத்தால்தான்</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">கௌரவமாக</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">இருக்கும்</span><span style="font-style: italic;">. </span><span style="font-style: italic;">நீ</span> <span style="font-style: italic;">உபயோகப்</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">படுத்துவாயோ</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">இல்லையோ</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">அதை</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">எல்லாம்</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">பற்றி</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">எனக்குக்</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">கவலை</span> <span style="font-style: italic;">இல்லை</span><span style="font-style: italic;">. </span><span style="font-style: italic;">நான்</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">கொடுப்பதைக்</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">கொடுத்து</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">விடுகிறேன்</span><span style="font-style: italic;">. </span><span style="font-style: italic;">நீ</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">அவற்றை</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">என்ன</span> <span style="font-style: italic;">வேண்டுமானாலும்</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">செய்து</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">கொள்</span>" என்று.<br />இது என்ன லாஜிக்? கல்யாணத்தில் சீர் செய்வது பெண்ணுக்கும் பிள்ளைக்கும் உபயோகப்படுவதர்கா இல்லை ஊர் மக்களைத் திருப்திப்படுத்தவா?<br />ஆனால் பெரும்பான்மையான உயர் மத்தியத்தர மக்களின் மனோபாவம் இப்படித்தான் இருக்கிறது. "மாற்றம் தேவை ஆனால் நான் அதை செய்யத் தயாராக இல்லை. வேறு யாராவது முன்வந்து செய்தால் நான் அதை ஆதரிக்கத் தயார்."<br /><br />என்னவோ போங்கள். இருக்கிறவர்கள் இது போலெல்லாம் செய்து ஒரு முன்னோடி உருவாக்கி விடுகிறார்கள். இது இல்லாதவர்களின் சுமையை அதிகரிக்கிறது. அப்புறம் பெண் குழந்தை என்றாலே செலவு என்ற ரீதியில் எண்ணங்கள். இதனால் கீழ்மட்டங்களில் பல வேண்டாத பின்விளைவுகள்.<br /><br />இன்னொரு சட்டமும் வேண்டும்: இந்த தேர்தல் செலவுக்கு ஒரு உச்ச மட்டம் நிர்ணயித்திருப்பதைப் போல், திருமண செலவுக்கும் ஒரு உச்சமட்டம் கொண்டு வர வேண்டும். என்ன சொல்கிறீர்கள்?Ushahttp://www.blogger.com/profile/00179239922869639391noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-3672689495290709037.post-29726436669718169942010-08-18T03:08:00.000-07:002010-08-18T07:59:52.458-07:00இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடாநேற்று எனது நண்பனின் சகோதரி இறந்துவிட்டார்கள். ஒரு வருடத்துக்கும் மேலாக மூளையில் கான்செர் நோயால் அவதிப் பட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக உயிர் போயிற்று. <span></span>ஆனால் அதற்கு முந்தைய நாட்களில் அந்தப் பெண்மணியின் வாழ்கை எல்லோரும் ஆசைப் படக்கூடிய வகையில் இருந்தது. பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் எல்லோராலும் கொண்டாடப்பட்டவர். பணத்துக்கு குறையே கிடையாது. கணவர் அவர் எது செய்தாலும் அதற்கு உடன்படக்கூடிய மனிதர். இந்த காய்ச்சல் வந்த பிறகுதான் அவருக்குத் துன்பம் என்றால் என்ன என்றே தெரியும். அது வரை கஷ்டம் என்றால் என்ன என்றே தெரியாமல் இருந்தவர். இத்துணை முழுமையான வாழ்வு என்பது எத்தனை பேருக்கு வாய்க்கக் கூடிய ஒன்று? <span>ஆனாலும்</span> <span>அவருடைய</span> <span>வீட்டில்</span> <span>யாருக்கும்</span> <span>மனம்</span> <span>சமாதானமாக</span> <span>இல்லை</span>. <span>எல்லோரும்</span> <span>இன்னும்</span> <span>சில</span> <span>காலம்</span> <span>அவர்</span> <span>வாழ்ந்திருக்கலாமே</span> <span>என்பது</span> <span>போலத்தான்</span> <span>பேசினார்கள்</span>.<br /><br />மரணத்தின் நிச்சயம் நம் எல்லோருக்கும் தெரிந்தே இருந்தாலும் நம்மைச் சுற்றியவர்களுக்கு முடிவு வரும்போது அது எவ்வளவு வயதானவர்கள் ஆனாலும் அதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. எங்களுக்குத் தெரிந்தவர் ஒருவரது தாயார் சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக கோமாவில் இருந்த போது அவருடைய மனைவி 'இது போல இருப்பதைவிட அவர் இறந்துவிடுவதே நலம்' என்று கூறியபோது அவரது கணவருக்கு மிகவும் கோபம் வந்து விட்டது. 'கோமாவிலாவது என் அம்மாவை என்னால் பார்க்க முடிகிறதே என்று நான் ஆறுதல் அடைகிறேன் நீ எப்படி இது போல சொல்லலாம்' என்று கடுமையாக சண்டை போட்டார். அந்த அம்மாவுக்கு அப்படி ஒரு வாழ்வு தேவையா என்று அவர் யோசிக்கவே இல்லை. நமக்கு உகந்தவர்களின் மரணம் நம்மைக் கலங்க வைப்பது அவர்களுக்காகவா இல்லை நமக்காகவா என்று எனக்குத் தோன்றும்.<br /><br />எனக்குத் தெரிந்த பலரும் இறப்பு என்ற யதார்த்தத்தைப் பற்றி யோசிக்கவே தயங்குபவர்களாகத்தான் இருக்கிறார்கள். இது போன்ற பேச்சை எடுத்தாலே 'சரி அபசகுனமாக எதாவது உளராதே' என்பார்கள். இல்லை என்றால் 'அது நடக்கும்போது அதைப் பற்றி யோசித்துக் கொள்ளலாம். இப்போது சும்மா இரு' என்பார்கள். நாம் வாழ்கையின் மற்ற நிகழ்வுகளைப் பற்றி எல்லாம் நாம் யோசிக்கிறோம். அவற்றுக்காக திட்டமிட்டு செயல் படுகிறோம். ஆனால் இறப்பு என்பது மாத்திரம் பிறருக்கு மட்டுமே நடக்ககூடிய ஒன்று என்பது போல ஒதுக்கி வைத்து விடுகிறோம். சமீப காலத்தில் இன்சூரன்ஸ் கம்பனிகாரர்கள் மட்டுமே நமக்கு இறப்பின் நிச்சயத்தை நினைவு படுத்திக் கொண்டிருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து எந்த வீட்டிலுமே குடும்பமாக உட்கார்ந்து ' எனக்கு ஏதானும் நேர்ந்து விட்டால் ' என்ற scenario பற்றி நிதானமாக உணர்ச்சி வசப்படாமல் பேசி நான் பார்த்ததில்லை. நானே சில சமயம் என் மகனிடமோ மருமகளிடமோ வீட்டில் எந்தெந்த file எங்கிருக்கிறது என்று சொல்ல முயலும் போதெல்லாம் அவர்கள் என்னை அடக்கி விடுவார்கள் .அதெல்லாம் நேரம் வரும்போது பார்த்துக் கொள்கிறோம் என்று.<br /><br />இன்னொரு நண்பருக்கு கான்செர் மிகவும் முற்றிய நிலையில் இன்னும் சில நாட்களே என்று இருந்த சமயத்தில் கூட அவர் வீட்டில் எல்லோரும் மரணத்தைப் பற்றி நினைக்க விரும்பவில்லை. என்னமோ எல்லாம் இயல்பாக இருப்பது போலவும் ' இதோ அவர் எழுந்து முன் போல் நடமாடப் போகிறார்' என்பது போலவும் நடந்து கொண்டார்கள். ஒரு வேளை அவர்கள் உண்மையை எதிர்கொண்டிருந்தால் அந்த சில நாட்களை இன்னும் அர்த்தமுள்ளவை ஆக்கி இருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது அவருடன் வாய் விட்டுப் பேசி அவரது நிஜ உணர்வுகளையும், அவரது பயங்களையும் பற்றிப் பேச ஒரு வாய்ப்பு இருந்திருக்கலாம். இவர்களுக்கு நிஜத்தை எதிர் நோக்கும் பலம் இல்லாததினால் கடைசி நாட்களில் அவர் தனது உள்மனதின் பாரங்களை மனதிலேயே சுமந்து கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு உட்படுத்தப்பட்டுவிட்டரோ என்று தோன்றியது. இதில் வேடிக்கை என்னவென்றால் நோயாளி உட்பட அத்துணை பேருக்கும் அவரது மரணத்தின் அண்மையைப் பற்றி தெரியும். ஆனாலும் யாரும் அதைப் பற்றி இயல்பாகப் பேசத் தயாராக இல்லை. மரணத்தின் பிடியில் இருக்கும் அவர் எத்துணை தனிமைப் பட்டு போயிருப்பார் இல்லை ?<br /><br />நமக்குப் பிரியமானவர்கள் நம்மைப் பிரியும்போது ஏற்படக்கூடிய துக்கத்தை நான் மறுக்கவில்லை. பாசத்தால் ஏற்படும் அந்த வலி மிகவும் இயற்கை ஆனது. நான் சொல்ல வருவது என்னவென்றால் மரணம் என்ற நிகழ்வு நமக்கு அளிக்கும் அதிர்ச்சியை குறைக்க ஒரே வழி அதைப் பற்றி தெளிவாக சிந்திப்பதும் அதைப் பற்றி இயல்பாகப் பேசுவதும்தான். மரணத்தை இயல்பாக ஏற்றுக் கொண்டோமானால் இருக்கும் நாட்களை இன்னமும் தரத்தோடு வாழ்வோமா என்கிற கேள்விதான். அது யாருக்கு வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம் என்ற உணர்வு வந்தால் நம் வாழ்க்கையில் வன்மைகள் குறையுமோ? யாரும் சாஸ்வதம் இல்லை என்று தெளிந்து இருக்கும்போது பொறாமை, காழ்ப்புணர்ச்சி, பேச்சிலும் செயலிலும் வன்மை எல்லாம் குறையுமோ? எனக்குத் தெரிந்த வீட்டில் ஒரு பெண் அவரது மாமியாரை அவர் இருக்கும் வரை நோக அடித்து விட்டு இப்போது அவரது மறைவுக்குப் பின்னால் அவருக்கு ஸ்ரத்தையாக வருடாவருடம் திவசம் செய்கிறாள் - 25 வருடங்களாய். பலரும் இப்படித்தான் சொல்கிறார்கள் : 'இப்படி <span style="font-weight: bold;">திடீர்</span> என்று போய் விடுவார் என்று முன்னமே தெரிந்திருந்தால் அதை செய்திருப்பேன் இதை சொல்லி இருப்பேனே என்று. என்னமோ மரணம் என்பது அரியதான நிகழ்வு என்பதைப் போல.<br />மரணத்துக்குப் பின்னால் ஒருவரை நினைத்து நினைத்து அழுவதை விட அவரோடு இருக்கும் நாட்களை அன்புடனும் புரிதலுடனும் வாழ்வது இன்னும் சிறப்பல்லவா. ஒரு வேளை expiry தேதி குறிக்கப்பட்டு பிறந்தோமானால் பூமியில் வாழ்கை இன்னும் அர்த்தமுள்ளதாக வாழ்வோமோ என்னவோ?<br /><span></span>Ushahttp://www.blogger.com/profile/00179239922869639391noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-3672689495290709037.post-16479981242143907292010-08-02T08:07:00.000-07:002010-08-03T00:21:21.126-07:00சும்மாதான் ஹீ ஹீசமீபத்தில் ஒரு தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்துக் கொண்டிருந்த பெண் வல்லினம் மெல்லினம் எல்லாவற்றையும் கலந்து தமிழைக் கொலை செய்து கொண்டிருந்தது - bathma, meha ஹிட் , ராஜா சேஹரன் இப்படி எல்லாம் இஷ்டத்துக்கு உச்சரித்துக்கொண்டிருந்தாள் அந்தப் பெண்.<br />எனக்கு வைரமுத்துவின் அழகான வரிகள் நினைவுக்கு வந்தன:<br /><span style="font-weight: bold;">வலிமிகும்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">இடங்கள்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">வலிமிகா</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">இடங்கள்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">தமிழுக்கு</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">தெரிகின்றதே</span> <span style="font-weight: bold;">வலிமிகும்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">இடங்கள்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">வலிமிகா</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">இடங்கள்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">தங்களுக்கு</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">தெரிகின்றதா</span><br /><br />இந்த வரிகளைக் கூட அந்த பெண் இப்படித்தான் படிப்பாளோ என்னமோ:<br /><br /><span style="font-weight: bold;">வலிமிஹும்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">இடங்கல்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">வலிமிஹா</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">இடங்கல்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">தமிழுக்கு</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">தெரிகிந்ரதெ</span><br /><span style="font-weight: bold;">வலிமிஹும்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">இடங்கல்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">வலிமிஹா</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">இடங்கல்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">தங்கலுக்குத்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">தெரிகின்ரதா</span><br /><br />இது மாதிரி உச்சரிக்கும் போது தமிழுக்கும், தமிழை நேசிப்பவர்களுக்கு எத்தனை வலிக்கும் என்று அந்த பெண்ணுக்கு எங்கே புரியப் போகிறது?<br /><br />எப்படியும் பாடல வரிகளை யாரும் கவனிப்பதில்லை என்பதினால்தானோ 'ஆச்சா போச்சா' ' என்று எதையோ எழுதி பாடலைப் பதிவு செய்து விடுகிறார்கள். இசை நன்றாக அமைந்து விட்டால் அது வெற்றியும் ஆகிவிடுகிறது. தமிழ் படம் என்ற படத்தில் மிக அழகாக oh maha <span>zeeya </span>பாடலில் கிண்டல் செய்திருந்தார்கள். வார்த்தைகளுக்கு அர்த்தமே வேண்டாம். புரியாத மொழியில் இருந்தால் இன்னும் நலம். அப்படி இருக்கிறது நிலைமை. ரஹ்மான் க்கு இது போன்ற வார்த்தைகளின் மீது பயங்கர காதல் - 'கும்சும் கும்சும் குப்பச்சி, 'அஜூபா ஜுஜோபா' என்று எதாவது ஹம்மிங் வைத்து விடுவார். அதுவும் சூப்பர் ஹிட் ஆகிவிடும்.<br /><br />ஒரு முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பு பாடல்களை வானொலியில் மட்டுமே கேட்க முடியும். அதனால் பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் அதிகம். படங்களிலும் பாடல்கள் படத்தோடு ஒட்டி இருக்கும். இப்போது போல பொழுது போகவில்லை என்றால் சுவிட்சர்லாந்த்தில் ஒரு டூயட் இல்லை என்றால் கனவு சீன் என்பது போன்ற அமைப்புகள் இருக்காது. ஒரு படத்தின் பாடல வரிகளில் இருந்தே அந்த படத்தின் கதையை ஓரளவு யூகிக்க முடியும். படங்கள் மறந்து போய் விட்டாலும் பாடல்கள் நினைவில் நிற்கின்றன. வானம்பாடி என்றொரு படம். நிறைய பேருக்கு நினைவிருக்காது. ஆனால் அந்த படத்தில் வந்த 'கங்கைக் கரைத் தோட்டம்', 'ஏட்டில் எழுதி வைத்தேன்' , 'கடவுள் மனிதனாக வேண்டும்' போன்ற பாடல்கள் எல்லோருக்கும் நினைவிருக்கும். அத்தனை அழகான, கருத்துள்ள பாடல்கள். இன்னும் சில பாடல்கள் ஏதோ நமக்காகவே நம் வாழ்க்கையைப் பற்றி எழுதப்பட்டவை போலிருக்கும். இதனாலேயே அவை காலத்தை மீறி இன்றும் பசுமையாக இருகின்றன.<br /><br />வானொலியில் கேட்கும்போது பாடல் வரிகளாலும், இசையாலும், பாடகர்களின் குரலாலும் அவ்வளவு பிடித்த அந்த பாடல்களை இன்று சில சமயம் தொலைக்காட்சியில் பார்க்கும்போது சற்று அதிர்ச்சி ஆகி விடுகிறது.<br />'ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்' என்று ஒரு அருமையான பாடல். அந்தக் காட்சியை இப்போது சமீபத்தில்தான் ஒரு தொலைக்காட்சி சேனலில் பார்த்தேன். வெறுத்துப் போய் விட்டேன்: அசோகனுக்கு இப்படி ஒரு பாட்டு தேவையா என்று. அதே போல 'ரோஜா மலரே ராஜகுமாரி' என்று ஒரு அழகான melody. திரையில் பார்த்தால் சச்சுவும் ஆனந்தன் என்று ஒரு ஹீரோ(?யாரோ ?) வும். கோர்ட்டில் கேஸ் போடலாமா என்று கோபம் வந்தது எனக்கு. இப்போதும் சில படங்களில் இது போன்ற அநீதி நடக்கிறது. இந்த 'ஜீன்ஸ்' படத்தையே எடுத்துக் கொள்ளுங்களேன். அந்த பிரஷாந்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய். இது முதல் அநியாயம் என்றால் பாடல்களுக்குக் குரல் ஹரி, உன்னி கிருஷ்ணன் . இதெல்லாம் கொஞ்சம் too much இல்லை? பாடல்களை கேட்டு விட்டு படத்துக்குப் போனவர்களின் நிலைமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! இது போலத்தான் அந்த மைக் மோகனுக்கும் ஒரு ராசி. பாட்டெல்லாம் பிரமாதமாக அமைந்து விடும். ' ஏதடா இளையராஜா, SPB, வைரமுத்து என்று ஒரு கூட்டணியே நமக்காக கஷ்டப்படுகிரார்களே' என்று கொஞ்சமாவது கஷ்டப்பட்டு நடித்தாரா என்றால் அதுதான் இல்லை. போதாக்குறைக்கு இவருக்கு என்று குரல் கொடுக்க வேறு ஒரு ஆள் - சுரேந்தர். இந்த மாதிரி அநியாயத்தின் உச்சகட்டம் 'பூவே செம்பூவே' என்ற பாடல் 'சொல்ல துடிக்குது மனசு' என்ற படத்தில். படத்தைப் பார்த்தவர்களுக்குப் புரியும் என் கோபம்.<br />இதுக்கெல்லாம் ஒரு சட்டம் போட வேண்டும் இனிமேல். என்ன சொல்கிறீர்கள்?<br /><br />இப்போது FM ரேடியோ வாயிலாகத் திரும்பவும் வானொலி கலாச்சாரம் முன்னுக்கு வந்து கொண்டிருதாலும், முன்னைப் போல பாடல்களை அனுபவிக்க முடியவில்லை. முன்பெல்லாம் தொகுப்பாளர்கள் பாடலைப் பற்றிய சுவையான விஷயங்களைச் சொல்லுவார்கள். அளவாகப் பேசி பாடல்களை முழுமையாக ஒலிபரப்புவார்கள். இப்போது எங்கே? இந்த RJ க்கள் பேசிப் பேசியே கழுத்தறுக்கிறார்கள். அதென்ன எல்லா பெண்களுக்கும் ஒரே மாதிரியே பேசுகிறார்கள் என்றும் புரியவில்லை. பாடல்களையும் பாதி பாதிதான் ஒலிபரப்புகிறார்கள். இது நிம்மதியாய் பாடல்களை அனுபவிக்க ஏற்றமாதிரி இல்லை. fast food மாதிரி அள்ளிப் போட்டுக் கொண்டு ஓடுவது மாதிரிதான் இருக்கிறது. பாட்டை இந்த மாதிரி அனுபவிக்க முடியுமா சொல்லுங்கள். இது இன்றைய இளைய தலைமுறையின் வாழ்கை முறையை சார்ந்ததாக இருப்பதினால் அவர்களுக்கு வேண்டுமானால் பிடிக்குமோ என்னமோ? அப்துல் ஹமீது போல வல்லினம் மெல்லினம் எல்லாம் சரியாக உச்சரித்து தமிழ் சினிமாப் பாடல்களைப் பற்றிய அபாரமான ஞானத்தோடு தொகுப்பவர்கள் எல்லாம் இன்றைய வானொலிகளுக்குத் தேவையில்லை. சும்மா பொழுதுபோக்காகப் பேசத் தெரிந்தால் போதும்.<br /><br />ஹிஹிஹி, இதைப் படிக்கும்போதே புரிந்திருக்குமே எனக்கும் பொழுது போகவில்லை என்று. அதேதான். serious ஆக போஸ்ட் எழுத கை ஓடவில்லை. சரி இப்படி ஏதானும் oh maha zeeya மாதிரி அர்த்தமில்லாமல் கொஞ்சம் சத்தம் போட்டால் <span> </span>ஏதானும் inspiration வருகிறதா பார்ப்போமே என்றுதான். கோபித்துக் கொள்ளாதீர்கள்.Ushahttp://www.blogger.com/profile/00179239922869639391noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-3672689495290709037.post-29680429635530197742010-07-29T04:31:00.000-07:002010-07-29T08:08:09.931-07:00மொழிப் பிரச்சினைஇந்த வலைப்பதிவில் தமிழில் எழுதுவது relaxing ஆக இருக்கிறது. சில சமயம் ஆங்கிலத்தில் எழுதுவது ஒரு பணி போலத் தோன்றும்.உணர்ச்சிபூர்வமான விஷயங்களை எழுதும்போது சில சமயம் சரியான வார்த்தை கிடைக்காது அப்படி கிடைத்தாலும் மொத்த உணர்வையும் சரியாக வெளிப்படுத்துவதாகத்<span></span> தோன்றாது. அதென்னமோ 'those idiots' என்றுசொல்வதை விட 'அந்த அறிவு கெட்ட ஜென்மங்கள்' என்று சொல்லும்போது கோபம் இன்னும் சரியாக வெளிப்படுகிறது இல்லையா? ஆங்கில வார்த்தை ஆனாலும் பேசும்போது அழுத்திச் சொல்லி ஒரு சொல்லின் வீரியத்தை அதிகரிக்கலாம். ஆனால் எழுதும்போது அது கொஞ்சம் சாதுவாகி விடுகிறது. அதே போலத்தான் "I was enraged" என்பதை விட 'கொதிச்சுப் போயிட்டேன்" என்பதில் சரியாக உணர்வு வெளிப்படுவது போல இருக்கிறது. ஒரு வேளை என்னுடைய emotional self develop ஆகும் வயதில் நான் தமிழ் சூழலில் வளர்ந்ததினால் இருக்கலாமோ என்னவோ. அதே போல் யோசிக்கும் திறன் வளர்ந்த பருவத்தில் ஆங்கிலமே அதிகமாய் கேட்டும் படித்தும் இருந்ததினால் இன்றும் அறிவு பூர்வமான விஷயங்களை ஆங்கிலத்தில் சொல்வது எளிதாக இருக்கிறது.<br /><br />ஒரு நாள் நான் என் தோழிகளுடன் படம் பார்ப்பதற்கு ஒரு mall க்கு சென்றிருந்தேன். அங்கே வந்திருந்த காலேஜ் கூட்டம் எல்லாம் ஆங்கிலத்தில்தான் சம்பாஷித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது என் தோழி சொன்னாள் 'இன்றைய நகர்புற இளைஞர்களுக்கு அவரவர் தாய் மொழியே தெரிவதில்லை. தெரிந்தாலும் அவர்கள் அதை பேசுவதை இழிவாக நினைக்கிறார்கள்", இன்னொரு தோழி சொன்னாள் " ஐயே இதெல்லாம் சும்மா வெளிவேஷம். எதிர்பாராமல் கன்னத்தில் ஒரு அறை விட்டுப் பார் "ஐயோ அப்பா என்றுதான் கத்தும்"<br />அப்போது பார்த்து ஒரு பெண் ஏதோ தடுக்கி கீழே விழப்போனது. ஆனால் அதன் வாயிலிருந்து "ஐயோ, அம்மா' என்றெல்லாம் வரவில்லை. 'ouch' என்றுதான் சொல்லிற்று. உடனே நான் என் தோழியைக் கேட்டேன் "இப்போது என்ன சொல்கிறாய்?" என்று. அதற்கு அவள் சொன்ன பதில் என்னை யோசிக்க வைத்தது. அவள் சொன்னாள்: " பார். இவர்களெல்லாம் மேலை நாகரீகத்தில் மூழ்கிப் போய் உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தும் திறனைக் கூட இழந்து விட்டார்கள். எல்லாவற்றிலும் ஒரு செயற்கைப் பூச்சு இருக்கிறது. இதனால்தான்<br />இவர்கள் நிஜமான உணர்வுகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் வரும் கணங்களில் உடைந்து போய் விடுகிறார்கள். அப்புறம் மனவியல் மருத்துவர்களைத் தேடிப் போகிறார்கள்" என்று.<br /><br />இது எந்த அளவிற்கு உண்மை என்று எனக்கு இன்னும் புரியவில்லை. ஆனால் கலாச்சார பூர்வமாக நம்முடைய உணர்வுகளை முழுமையாக ஒரு அந்நிய மொழியில் வெளிப்படுத்த முடியுமா என்பது எனக்கு ஒரு கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. நாம் சீக்கிரத்தில் உணர்ச்சிவசப்படுபவர்கள். எல்லாவற்றிலும் ஒரு தீவிரம் - தீக்குளிக்கும் அளவிற்கும் போகத் தயங்காதவர்கள். ஆங்கிலேயர்கள் உணர்சிகளை மிகவும் மிதமாக வெளிப்படுத்தும் தங்களது 'stiff upper lip' பற்றி பெருமை கொள்பவர்கள். அப்படிப்பட்டவர்களின் மொழியில் நமது ஆழ்ந்த உணர்வுகளை வெளிப்படுத்த முடியுமா என்பதுதான் எனது சந்தேகம். இன்னொரு கோணத்திலிருந்து யோசித்தால் 'எந்த நாடானால் என்ன. கடைசியில் எல்லோரும் மனிதர்கள். எந்த ஊரானாலும், எந்தக் கலாசாரம் ஆனாலும் உணர்வுகள் என்பவை மனிதர்கள் எல்லோருக்கும் பொதுவானவைதானே. ஆழ்ந்த உணர்சிகளை வெளிப்படுத்த எந்த மொழியிலும் வகை இருக்கத்தானே செய்யும்" என்று.<br />நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?Ushahttp://www.blogger.com/profile/00179239922869639391noreply@blogger.com18tag:blogger.com,1999:blog-3672689495290709037.post-6104700234902671932010-07-25T05:49:00.000-07:002010-07-25T18:26:38.560-07:00இங்கு ஏமாறப்படும்சில பேரைப் பற்றி சொல்வார்கள் :" அவள் சரியான ஏமாளி என்று அவள் முகத்திலேயே எழுதி ஒட்டி ஒருக்கிறது " என்று. அந்த மாதிரி ஏதோ ஒரு மெசேஜ் என் முகத்தில் இருக்கிறது போல் இருக்கிறது. நாங்கள் கூட்டமாய் நாலு பேர் போனாலும் இந்த ஏமாற்றுப் பேர்வழிகள் எல்லோரும் என்னிடம்தான் வருவார்கள். ஏதானும் ஒரு கதை சொல்லிஎன் மனத்தைக் கரைப்பார்கள்.<br />சில நாட்கள் முன்பு என் மருமகளை ஏதோ ஒரு கடையின் முன்னால்இறக்கிவிட்டு அவள் வரும்வரை காரில் காத்துக்கொண்டிருந்தேன். இரண்டு பெண்மணிகள் ஒரு சிறுவன் மற்றும் ஒரு சிறுமியோடு என் அருகே வந்து ஹிந்தியில் பேசத்தொடங்கினார்கள். அவர்கள் மும்பையிலிருந்து திருப்பதி போவதற்காக ரயிலில் வரும்போது அவர்கள் பெட்டி 7000 ரூ பணம் எல்லாம் திருட்டு போய் விட்டதாம். இப்போது ஊருக்குப் போவதற்கு பணம் கொடுத்தால் மும்பை சென்றதும் அனுப்பி விடுவார்களாம். ஒரு வேளை என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றால் குழந்தைகள் பசியோடு இருக்கிறார்கள், அவர்களுக்காவது நீங்களே ஏதானும் வாங்கிக் கொடுத்து விடுங்கள் என்றார்கள்.<br />என்னுடைய மிகப் பெரிய weakness குழந்தைகள். அதுவும் அவர்கள் பசியோடு இருக்கிறார்கள் என்றால் எனக்குத் தாங்காது. இது எப்படித்தான் அவர்களுக்குத் தெரிந்ததோ. எனக்கு மண்டைக் குடைச்சல் ஆரம்பித்து விட்டது. கையில் 200 ரூ இருந்தது. கொடுத்து விடலாமா என்று யோசித்தேன். ஒரு வேளை ஏமாற்றுப் பேர்வழிகளாக இருந்தால் என்று தோன்றியது. கடைசியில் ஒரு முடிவுக்கு வந்து 100 ரூபாயை கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்தேன். என்ன இன்றைய விலைவாசியில் ஏதானும் டிபன் வாங்கி சாப்பிட்டிருப்பார்கள் அவ்வளவுதானே.<br />ஏமாந்தால் பரவாயில்லை. வாய் வாழ்த்தா விட்டாலும் வயிறு வாழ்த்தும் என்று சமாதானமும் சொல்லிக் கொண்டேன். வீட்டில் வந்து சொன்னதும் எல்லோரும் ஒரு மொத்தமாக என்னை ஏமாளி என்று சொல்லி விட்டார்கள். "அவர்கள் திருப்பதி போக வேண்டும் என்றால் பெங்களூருக்கு என் வந்தார்கள்? ரயிலில் எல்லாம் தொலைத்து விட்டு இங்கே நம் வீட்டருகே என்ன செய்து கொண்டிருந்தார்கள்? போலீசில் புகார் செய்தார்களாமா? என்றெல்லாம் வேறே என்னை குறுக்கு விசாரணை செய்து என்னை குற்றவாளி போல் ஆக்கி விட்டார்கள்.<br />இதில் கஷ்டம் என்னவென்றால் கொடுக்காமல் வந்திருந்தால் என் மனசாட்சி என்னைக் குடைந்து எடுத்திருக்கும். பாவம் சாப்பாட்டுக்குத்தானே கேட்கிறார்கள். எத்தனை அனாவசிய செலவு செய்கிறோம். சில சமயம் கோவில் உண்டியலில் 100 ரூ போடுவதில்லையா. ஒருவரின் பசியை தீர்ப்பது ஆண்டவனுக்கு செய்யும் சேவை போல்தானே என்றெல்லாம் நினைத்து நொந்து நூலாகிப் போயிருப்பேன்.<br /><br />சில வருடங்களுக்கு முன்பு இப்படித்தான் ஒரு இளம்பெண் ரோட்டோரத்தில் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தாள். கூட 10/ 12 வயதில் ஒரு சிறுவன். அந்தத் தெருவில் அவ்வளவாக நடமாட்டம் இருக்கவில்லை. நான் எங்கோ போய் விட்டு அந்த வழியாக வந்து கொண்டிருந்தேன். அந்தப் பையன் ஓடி வந்து தன தாய்க்கு அடிக்கடி இது போல் நெஞ்சில் வலி வரும் என்றும் ஆஸ்பத்ரிக்கு அழைத்துப் போக வேண்டும் ஏதானும் உதவி செய்ய முடியுமா என்று கேட்டான். நான் உடனே 200 ரூ எடுத்துக் கொடுத்து ஆட்டோ வைத்துக் கொண்டு போகுமாறு கூறிவிட்டு வீட்டை நோக்கி வண்டியை செலுத்தினேன். கொஞ்ச தூரம் போனதும்தான் எனக்குத் தோன்றியது "சே நம்மிடமே கார் இருக்கிறது. நாமே கொண்டு விட்டிருக்கலாமே. ஏன் இது கூடத் தோன்றவில்லை. பாவம் அந்த சின்னப் பையன் எப்படி அழைத்துப் போவான். வழியில் அவன் தாய்க்கு ஏதானும் ஆகி விட்டால் என்ன செய்வது?" இப்படி எல்லாம் யோசித்துக் கொண்டு காரைத் திருப்பிக்கொண்டு அதே இடத்துக்கு திரும்ப வந்தேன். இருவரையும் காணவில்லை. கொஞ்ச தூரத்தில் பார்த்தால் எதிர் சாரியில் இருவரும் ஒன்றுமே நடக்காதது போல நடந்து போய்க் கொண்டிருந்தனர். அவளிடம் உடல் நலவுக் குறைவிற்கான ஒரு அடையாளமும் தென்படவில்லை.<br />எங்கே போய் முட்டிக்கொள்வது?<br /><br />இது போன்ற விஷயத்தில் ஒரு முடிவுக்கு வருவது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. பரம்பரை நடிகர்களா அல்லது அவர்களது வறுமை அல்லது கட்டாயம் அவர்களை அப்படி நடிக்க வைக்கிறதா என்று தெரியவில்லை, ஆஸ்கார் லெவெலில் நடிப்பார்கள். கண்ணீர் அனாயாசமாக வரும், வசனம் நெஞ்சைத் தொடும். அந்த சமயத்தில் எனக்கு அவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்றெல்லாம் ஆராய்ந்து பார்க்க எனக்குத் தோன்றாது. என்ன மிஞ்சிப் போனால் சாப்பாட்டுக்காகத்தானே இவ்வளவு நடிக்கிறார்கள். போகட்டும் என்று என் மன ஆறுதலுக்கு விலையாக கையில் இருப்பதில் கொஞ்சம் பணத்தைக் கொடுத்து விட்டுஎன் வழியில் வந்து விடுவேன்.<br /><br />என்னுடைய நண்பர்கள் பலரும் இதற்காக என்னைக் கிண்டல் செய்வதுண்டு. ஒருவர் சொல்வார்: "உஷாவுக்கு யாரானும் கையில் மிளகாயை வைத்துக் கொண்டு இருந்தாலே பிடிக்காது. உடனே சொல்வாள் ஐயோ, ஏன் மிளகாயை கையில் வைத்துக்கொண்டு கஷ்டப்படுகிறீர்கள். இதோ என் தலை இருக்கிறதே. அதில் அரைத்துக் கொள்ளுங்கள் என்பாள். அதான் எல்லோரும் அவள் தலையில் மிளகாய் அரைக்கிறார்கள்" என்பார்.<br />இன்னொருவர் சொல்வார் "ஆமாம் அதே போல்தான் அவளுக்கு செக் புஸ்தகம் வெறுமே இருந்தாலும் பிடிக்காது. கை எழுத்துப் போட்டு யாருக்கானும் கொடுக்க வேண்டும் என்று துறு துறுக்கும்" என்று. இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான். ஆனாலும் இந்த கிண்டல் எல்லாம் பொறுக்காமல் இப்போதெல்லாம் நான் ஏமாறும் கதைகளை யாருக்கும் சொல்வதில்லை.<br /><br />ஆனாலும் என் முகத்தில் எழுதி ஒட்டி இருப்பதாக அவர்கள் சொல்வது சரிதானோ என்று எனக்கே சந்தேகம் வரும்படி நேற்று ஒரு சம்பவம் நடந்தது. பெங்களூர் சென்ட்ரலில் ஏதோ வாங்கிக் கொண்டு வண்டியை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தேன். பக்கத்தில் ஒரு ஆட்டோ வந்து நின்றது. 'வேண்டாம். வண்டி இருக்கிறது' என்றேன். உடனே அந்த டிரைவர் சிரித்துக் கொண்டே (கன்னடத்தில்தான்) 'என்ன மேடம் மறந்து விட்டீர்களா, என்னைத் தெரியவில்லையா?' என்றார். எனக்கோ வர வரக் காலையில் சாப்பிட்ட சிற்றுண்டியே மறந்து போய் விடுகிறது. பலரது பெயர் மறந்து விடுகிறது. அதனால் ஒரு அசட்டுச் சிரிப்போடு 'இல்லை நினைவு வரவில்லை. நீங்களே சொல்லி விடுங்கள்" என்றேன். "நன்றாக யோசித்துப் பாருங்கள்' என்றார். அப்புறம் மெதுவாக "பாங்குக்கு வருவீர்களே. மறந்து போய் விட்டதா?" என்றார். நான் 'ஓஹோ பாங்கில் வேலை பார்த்தீர்களா " என்றேன். தான் பாங்கில் காஷியர் ஆக இருந்ததாகவும், சக்கரை நோய் அதிகமாகி காலை வெட்டும் அளவுக்குப் போய் விட்டதாகவும், பின்னர் voluntary retirement எடுத்துக் கொண்டு இப்போது ஆட்டோ ஓட்டிக்கொண்டிருப்பதாகவும் சொன்னார். முட்டி வரைக்குமே இருந்த காலையும் காட்டினார். அவ்வளவுதான் நெகிழ்ந்து போய் விட்டேன். அழாத குறைதான். உடனே அவர் அடுத்த ஆயுதத்தை எடுத்தார். குழந்தை இல்லை என்று வெகு நாள் வேண்டி மனைவி கர்ப்பமானதாகவும், ஆனால் முழு கர்ப்பமாக இருக்கும்போது கார் விபத்தில் இறந்து போய் விட்டதாகவும் சொன்னார். பின்னர் தாய் தந்தையைப் பார்த்துக் கொண்டு இருந்தாராம். தந்தை போன வருடம் கான்சரில் இறந்து போய் விட்டாராம். அவருக்கு 6 லட்சம் வரை செலவு செய்து வைத்யம் பார்த்தாராம். அதிலிருந்து மீண்டு வரும்போது தாய்க்கு ஏதோ பெரிய ஆபரேஷன் செய்ய வேண்டி வேலூரில் சேர்த்திருக்கிறாராம். திங்கள்கிழமை ஆபரேஷன் அதற்கு ஏதானும் உதவி செய்யுங்கள் என்று முடித்தார்.<br />இந்த மாதிரி யாரானும் உங்களிடம் வந்து சொன்னால் நீங்கள் என்ன செய்வீர்கள்?<br /><br />நான் என்ன செய்தேன் என்கிறீர்களா? என்ன செய்திருப்பேன் என்று நினைக்கிறீர்கள்?Ushahttp://www.blogger.com/profile/00179239922869639391noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-3672689495290709037.post-78082490120165949412010-07-19T06:53:00.000-07:002010-07-20T03:16:50.627-07:00அழகின் நிறம்சமீபத்தில் ஒரு கல்யாணத்தில் ஒரு தூரத்து உறவினர் தனது மகளை அறிமுகம் செய்து வைத்தார். அந்த பெண்ணைப் பார்த்ததுமே எனக்குப் பிடித்துப் போயிற்று. எல்லோரிடமும் சகஜமாகப் பழகும் விதம், குழந்தை போன்ற அவளது முகம், புத்திசாலித்தனமான பேச்சு, இவை அனைத்துக்கும் மேலாக அவளது un-self-conscious behaviour (இதை தமிழில் எப்படி சொல்வது என்று தெரியவில்லை) சிலர் பழகும் விதத்தைப் பார்த்ததுமே தெரியும் - அவர்கள் பிறரைக் கவர்வதற்காக, அவர்கள் தன்னை கவனிக்க வேண்டும் என்பதற்காக அப்படி நடந்து கொள்கிறார்கள் என்று. இன்னும் சிலருக்கு தான் நன்றாக் இருக்கிறோம் என்பது தெரியும் அதை பிறரும் உணர்கிறார்களா என்று கவனித்துக் கொண்டே இருப்பார்கள். அவர்களது ஒரொரு அசைவும் கணக்கு போட்ட மாதிரி இருக்கும். எதிலும் ஒரு spontaneity இருக்காது. இது பல பிரபலங்களுக்கும் முக்கியமாக மாடல் அழகிகளுக்கும் பொருந்தும். நான் பார்த்த அந்த பெண்ணிடம் இது போன்ற எந்த விதமான குண லக்ஷணங்களும் இருக்கவில்லை. அதுதான் என்னைக் கவர்ந்தது.<br />ஆனால் கூட இருந்த என் தங்கை உடனே சொன்னாள்: "யாரவது கொஞ்சம் வெளுப்பாய் இருந்தால் போதுமே உடனே அவர்களை அழகு என்றுவிடுவாய்."<br />இதற்கு ஒரு பின்னணி உண்டு. என் தங்கை பால் வெளுப்பு. நானோ 'மாநிறம்' என்று பூசி மெழுகப்படும் கருப்பு. சின்ன வயதில் பல முறை என் காது படவே<br />இந்த வேற்றுமை அடிக்கோடிட்டு பேசப்பட்டதுண்டு. உதாரணமாக இரண்டு பாவடைத் துணிகள் வாங்கி வந்து காண்பிக்கும்போது பாட்டி சொல்லுவாள்: "இந்த நீலம் சின்னவளுக்குப் பொருந்தும். பெரியவளின் நிறத்துக்கு கொஞ்சம் முகத்தில் அடிக்கிறார்போல இருக்கும். அவளுக்கு கொஞ்சம் லைட் கலர் ஆக எடுக்க வேண்டும்." அவர்கள் இதை யதார்த்தமாகவே சொல்லி இருக்கலாம். ஆனால் ஏழு எட்டு வயதில் என்னுடைய கலர் என்னமோ ஒரு வியாதி போல எனக்குத் தோன்றும். இல்லை என்றால் 'பெரியவள் கொஞ்சம் நேரம் கம்மி. சின்னவள் நல்ல கலர்' என்பார்கள்.<br />அந்த நாளில் குழந்தை மனோதத்துவம் , சரியான பேச்சு என்றெல்லாம் யாரும் மிகவும் கவலைப் பட்டதில்லை. பள்ளிக்கூடத்தில் ராஜகுமாரி வேடம் என்றால் சிவந்த தோலுடைய பெண்ணைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். நாங்களெல்லாம் சாமரம் வீசும் தோழி, அல்லது ஏதானும் நகைச்சுவை வேடத்துக்குதான் பொருந்துவோம். கதைப் புத்தகங்களிலும் தேவதைகள், பெண் கடவுள்கள், ராஜகுமாரிகள் எல்லாம் சிவப்பாகத்தான் இருப்பார்கள். ராட்சஷிகள், துர்தேவதைகள் , கெட்ட மந்திரவாதிகள் இவர்கள் எல்லாம்தான் கருப்பாகவும் பார்க்க அசிங்கமாகவும் இருப்பார்கள். வெளித்தோற்றம் உள்மனதை பிரதிபலிக்க வேண்டும் என்ற symbolism இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் கருப்பையும் அசிங்கத்தையும் கூட சேர்த்து வைத்ததுதான் தப்பு.<br /><br />பெண் பார்த்து விட்டு வருவார்கள். 'பொண்ணு நல்ல செவப்பு' - இதை சொல்வதிலேயே ஒரு பிரமிப்பு இருக்கும். 'பொண்ணு மாநிறம்தான்" - இதை சொல்லும்போது குரல் தாழ்ந்து இருக்கும். இது ஒரு disqualification என்பது போல. "<span>பொண்ணு</span> <span>கருப்பாக</span> <span>இருந்தாலும்</span> <span>களையாக</span> <span>இருக்கிறாள்</span>" <span>என்பார்கள்</span>. <span style="font-weight: bold;">இருந்தாலும்</span> - அந்த வார்த்தையை தெளிவாக கவனிக்குமாறு கனம் கோர்ட்டார் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.<br />என்னுடைய தோழி ஒருத்தி தந்தக் கலரில் இருப்பாள். அவளுடைய அக்கா மாநிறத்துக்கும் கீழே. இருவருக்கும் ஒரே வயதுதான் வித்யாசம். அக்காவைப் பெண் பார்க்க வரும்போதெல்லாம் அவளுடைய தாய் என் தோழியை யார் வீட்டுக்காவது அனுப்பிவிடுவாள். யாராவது இவளைப் பார்த்து விட்டு இவளை கல்யாணம் பண்ணிக் கொள்கிறேன் என்று விடப் போகிறார்களே என்று. இது அக்கா தங்கை இருவரது மனோ நிலையையும் எப்படி பாதித்திருக்கும் என்று நீங்களே புரிந்து கொள்ளலாம்.<br /><br />பெண்களை வர்ணிக்கும் சினிமா பாடல்களும் ஒன்றும் குறைவில்லை:<br />கண் பார்வை தெரியாதவன் வர்ணிக்கும் பாடலில் கூட பெண்ணின் முகம் '<span style="font-weight: bold;">பொன்முகம்</span>"என்றுதான் வர்ணிக்கப்படும். அல்லது நிலவுக்கு ஒப்பிடுவார்கள் - "<span style="font-weight: bold;">முகம்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">மட்டும்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">பார்த்தால்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">நிலவின்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">எதிரொலி</span>"<br />இல்லை என்றால் '<span style="font-weight: bold;">நிலவு</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">ஒரு</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">பெண்ணாகி</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">நீந்துகின்ற</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">அழகோ</span>"!<br />இன்னும் ரொம்ப அழகு என்றால் ஓவர் ஆக போய்<br /><span class="postbody">"<span style="font-weight: bold;">செந்தழலின்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">ஒளி</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">எடுத்து </span><span style="font-weight: bold;">சந்தனத்தில் </span><span style="font-weight: bold;">குளிர் </span><span style="font-weight: bold;">கொடுத்து </span><br /><span style="font-weight: bold;">பொன் </span><span style="font-weight: bold;">தகட்டில் </span><span style="font-weight: bold;">வார்த்து</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">வைத்த </span><span style="font-weight: bold;">பெண்</span><br /><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">உடலை</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">என்னவென்பேன்</span>" என்பார்கள்.</span><br />இன்னொரு பாட்டில் கவிஞர் தெளிவாகவே சொல்வார் :<br />"<span style="font-weight: bold;">அடி</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">ஒம்போல</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">செவப்பு</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">இல்லை</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">கணுக்கால்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">கூட</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">கருப்பு</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">இல்லை</span>"<br /><br />மொத்தத்தில் அழகான பெண் என்ற உடனேயே இந்தக் கவிஞர்களுக்கு நினைவு வருவதெல்லாம் நிலவு, சந்தனம், பொன், தாமரை, சிகப்பு, வெளுப்பு இவைதான். கருப்பான ஒரு பெண் எப்படி எல்லாம் வெறுக்கப்படுகிறாள் என்பது பற்றி ஒரு படமே எடுத்திருக்கிறார்கள். அதில் அந்தப் பெண் பாடுவாள்:<br />"<span style="font-weight: bold;">மனம்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">பார்க்க</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">மறுப்போர்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">முன்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">படைத்தாய்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">கண்ணா</span><br /><span style="font-weight: bold;">நிறம்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">பார்த்து</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">வெறுப்போர்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">முன்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">கொடுத்தாய்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">கண்ணா</span>"<br />அறியாத <span>புரியாத</span> <span>வயதிலிருந்தே</span> <span>இப்படி</span> <span>ஒரு</span> <span>கருத்து</span> <span>திணிக்கப்பட்டு</span> <span>விட்டால்</span> <span>நம்மை</span> <span>அறியாமல்</span> <span>சில</span> <span>அபிப்ராயங்கள்</span> <span>உருவாகிவிடுகின்றன</span>. <span>அவற்றை</span> <span>அழிப்பதோ</span> <span>அல்லது</span> <span>அவற்றால்</span> <span>பாதிக்கப்</span> <span>படாமல்</span> <span>இருப்பதோ</span> <span>அவ்வளவு</span> <span>எளிதான</span> <span>விஷயம்</span> <span>இல்லை</span>. என்னுடைய மனத்திலும் எனக்கே தெரியாமல் இப்படி ஒரு காம்ப்ளெக்ஸ் வளர்ந்திருக்கலாம். ஆனால் ஓரளவு முதிர்ச்சி வந்த பிறகு என் கலரை பற்றி எல்லாம் நான் அவ்வளவாக கவலைப்படுவதில்லை.<br /><br />"<span style="font-weight: bold;">கருப்புதான்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">எனக்குப்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">புடிச்ச</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">கலரு</span>" என்று ஏதோ ஒரு பாட்டில் எழுதினால் பலரும் கை தட்டினாலும் அவர்கள் திரையில் பார்க்க விரும்புவது வட இந்தியாவில் இருந்து இறக்குமதியான வெளுப்பான heroine களைத்தானே?<br />இதில் வேடிக்கையான விஷயம் என்ன வென்றால் தென்னிந்தியாவில் பொதுவான உடல் வண்ணம் மாநிறம்தான். இதனால்தானோ என்னமோ அபூர்வமான வெளுப்புத் தோலுக்கு இத்தனை மதிப்பு. சருமத்தை வெளுப்பாக்குவதாக சொல்லப்படும் கிரீம் தென்னிந்தியாவில்தான் அதிகமாக விற்பனை ஆகிறதாம். இதன் உற்பத்தியாளர்கள் இதைப் பற்றி விளம்பரம் செய்வதே - சிகப்பழகைப் பெறுவதற்குத் தேவையான அழகு சாதனம் என்று. அழகுக்கு சிகப்பாக இருந்தால் மட்டுமே போதும் என்பது மறைமுகமான குறிப்பு போலும்.<br />இப்போது இத்தோடு ஒரு புதுக் கொடுமை வேறே சேர்ந்து கொண்டிருக்கிறது. நாங்கள் சிறியவர்களாக இருந்த போது ஆண்கள் கலரைப் பற்றி அவ்வளவு கவலைப்பட மாட்டார்கள். இப்போது என்னவென்றால் அவர்களுக்கும் இந்த குழப்பம் வந்து விட்டது அல்லது உருவாக்கி விட்டார்கள். தன்னம்பிக்கை உருவாகவேண்டும் என்றால் இந்த சருமத்தை வெளுப்பாக்கும் கிரீம் உபயோகிக்க வேண்டுமாம்.<br />ஆண்களும் பெண்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை நம்புகிறவள்தான் நான் - ஆனால் இந்த மாதிரி குழப்பங்களில் கூட இந்த சமத்துவம் தேவையா?<br /><br />இதெல்லாம் ஒரு பக்கம் நடந்து கொண்டு இருக்கிறது. இன்னொரு பக்கம் இந்த' கருப்புக்கென்ன குறைச்சல்" அணியினர் கலாட்டா வேறே - வெளுப்பாக இருக்கிற பெண் நிஜமாகவே அழகாக இருந்தாலும் அதை சொன்னால் போராட்டமே நடத்துவார்கள் போல. வர வர வாயையே தொறக்க முடியலை - எதைச் சொன்னாலும் யாராவது ஒருத்தர் சண்டைக்கு வருகிறார்கள்.<br /><br />கவிதை,<span> சினிமா, சமுதாயத்தின் எண்ண ஓட்டம் - இது போன்ற பல்வேறு விதமான தாக்கங்களினால் <span></span>சருமத்தின்</span> வண்ணம் குறித்த இந்தப் பாகுபாடு நம் சமுதாயத்தின் ஆழ்மனதில் பதிந்து போய் விட்டதா? கருப்பு, வெளுப்பு இரண்டையும் மீறி அழகைப் பார்பதற்கு பார்ப்பதற்கு இனிமேல் வழியே இல்லையா?Ushahttp://www.blogger.com/profile/00179239922869639391noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-3672689495290709037.post-44388904642764558082010-07-09T00:33:00.000-07:002010-07-16T06:33:33.239-07:00எங்க மண்ணுக்கே ஒரு வாசம்தமிழ் வருடப்பிறப்பன்று என்று நினைக்கிறேன் - ஒ அதுதான் இப்போதெல்லாம் சித்திரைத் திருநாள் ஆகிவிட்டதே - அமாம் அன்றுதான், விஜய் டிவி யில் தமிழகத்தின் வட்டார வழக்குகளைப் பற்றி ஒரு அருமையான விவாதம் நடந்தது.<br />பல்வேறு வட்டாரங்களின் வசவுச் சொற்கள், சொற்ப்பிரயோகங்கள், இச்சொற்களின் மூலம் வெளிப்படும் வாழ்க்கைமுறைகள் என்றெல்லாம் மிக சுவாரஸ்யமான முறையில் கோபிநாத் இந்த கருத்தரங்கை நடத்தினார். சில மொழி ஆராய்ச்சி நிபுணர்களும், எழுத்தாளர்களும் கூட நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்துக்களை சொன்னார்கள். தஞ்சை மாவட்டத்தைப் பற்றி இவர்கள் எல்லோருமே ஒப்புக்கொண்டது என்னவென்றால் தஞ்சை மண்ணுக்கு வட்டார வழக்கு என்பது கிடையாது. அது பல்வேறு அரசர்களின் நேர்பார்வையில் இருந்த வட்டாரமானதால் அங்கு பெரும்பாலும் எழுதப்படும் தமிழே அதாவது வரி<br />வடிவமான தமிழே உபயோகப்படுத்தப்பட்டது அதனால் தஞ்சையில் வட்டாரச் சொற்கள் மிகவும் குறைவு என்று அவர்கள் கூறினர்.<br />இது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஏனென்றால் எங்கள் வீட்டில் பேசப்படும் தமிழைக் கேட்பவர் எவரும் சில நொடிகளில் கேட்டு விடுவார்கள்:<br />"நீங்க தஞ்சாவூரா?" என்று.<br />இத்தனைக்கும் நாங்கள் ஒன்றும் செந்தமிழில் பேசுவதில்லை. என்ன, மதுரை, கோயம்பத்தூர் தமிழ் போல எங்கள் பேச்சில் ஒரு ராகம் இருக்காது. நிதானமாக அவசரமே இல்லாமல் பேசுவோம். பிரபஞ்சன் சரியாக சொன்னார் அந்தக் கருத்தரங்கில்: " நிதானமாக வெத்திலையில் சுண்ணாம்பு தடவிக்கொண்டு பேசுவதுபோல் இருக்குமாமா தஞ்சாவூர் பேச்சு.<br /><br />பிரத்தியேகமான சொற்ப்ரயோகங்கள் என்று பார்த்தால்<br /><span style="font-weight: bold;">நொரநாட்டியம்</span><span style="font-weight: bold;">, </span><span style="font-weight: bold;">திருவாழத்தான்</span><span style="font-weight: bold;">, </span><span style="font-weight: bold;">சதிராடறது</span><span style="font-weight: bold;">, </span><span style="font-weight: bold;">காண்டுக்கோல்</span><span style="font-weight: bold;">, </span><span style="font-weight: bold;">கட்டுவாய்</span><span style="font-weight: bold;">, </span><span style="font-weight: bold;">சாணிச்சுருணை</span><span style="font-weight: bold;">, ஓக்காளித்தல், </span><span style="font-weight: bold;">ஈஷிக்கறது</span><span style="font-weight: bold;">, </span><span style="font-weight: bold;">தீர்த்தமாடறது</span><span style="font-weight: bold;">, </span><span style="font-weight: bold;">தம்பிடி</span><span style="font-weight: bold;">, </span><span style="font-weight: bold;">லங்கிணி</span><span style="font-weight: bold;">, </span><span style="font-weight: bold;">தாஜா</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">பண்றது</span><span style="font-weight: bold;">, திலாவறது,</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">முடை</span><span style="font-weight: bold;">,ஜாகை, சவுக்கம், </span><span style="font-weight: bold;">இளப்பம்</span><span style="font-weight: bold;">, </span><span style="font-weight: bold;">வெளக்குமாத்துக்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">கட்டை</span><span style="font-weight: bold;">, </span><span style="font-weight: bold;">மென்னி</span>, <span style="font-weight: bold;">பாஷாங்கராகம்</span>, <span style="font-weight: bold;">பீத்தல்</span>, <span style="font-weight: bold;">சுருக்க</span><br />இது போன்ற சில பிரயோகங்கள் எங்களூர்காரர்களிடம் மட்டுமே கேட்டிருக்கிறேன்.<br />(Ed: முதலில் ராங்கி, சோப்ளாங்கி, பொம்மனாட்டி, கிராதகன், அவ்வளூண்டு, இவ்வளூண்டு, கொல்லைப்பக்கம் போன்ற வார்த்தைகளையும் சேர்த்திருந்தேன். ஆனால் குறும்புக்காரி மற்றும் என்னுடைய தங்கையார் இந்த லிஸ்ட்டை மறுக்கிறார்கள். அவர்கள் கட்சி என்னவென்றால் இவை எல்லாம் தமிழ் பிராமணர்களிடையே சகஜமாக உபயோகமாகும் வார்த்தைகள். தஞ்சை மண்ணுக்கே சொந்தமானவை அல்ல என்பதாகும். இந்த லிஸ்டுக்கு ஆதாரமே கிடையாது. இது என்னுடைய அபிப்ராயம் மட்டும்தான்.)<br /><br /><br />இவற்றுக்கெல்லாம் மேலாக தஞ்சாவூர்காரர்கள் பேச்சில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் அவர்கள் பேச்சினிடையே சர்வசாதாரணமாக<br />அடிபடும் பழமொழிகளும், வஜனங்களும். நேரிடையாக ஒரு விஷயத்தை சொல்வதை விட மறைமுகமாக இந்த வசனங்களின் மூலம் உணர்த்துவதில் மிகத் திறமைசாலிகள். சில சமயம் இவை நக்கல் செய்வதற்காகவும் உபயோகிக்கப்படும்.<br />உதாரணமாக இன்னொருவருடைய பொருளை தாராளமாக உபயோகிப்பவர்களைப் பற்றி கூறுவதற்கு:<br /><span style="font-weight: bold;">ஊரான்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">வீட்டு</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">நெய்யே</span><span style="font-weight: bold;">, </span><span style="font-weight: bold;">என்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">பொண்டாட்டி</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">கையே</span><br />என்பார்கள்.<br />ஒருத்தி வழக்கத்துக்கும் அதிகமாக கோபத்தைக் காட்டினால்<br /><span style="font-weight: bold;">ஏற்கனவே</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">துர்க்குணி</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">அதிலும்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">கர்ப்பிணி</span><br />என்பார்கள்.<br />மற்ற வட்டாரத்தவர்களும் இதுபோலபேசுவார்களா என்று எனக்குத் தெரியாது. ஆனால் நான் இப்படிப் பேசுவதை கேட்டு என் நண்பர்கள் எல்லாம் வியந்து போவார்கள்.<br />சம்பந்தமே இல்லாதவரிடம் உறவு கொண்டாடுவதைச் சொல்ல இது போல் சொல்வார்கள்:<br /><span style="font-weight: bold;">வாச்சானுக்கு</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">போச்சான்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">மதனிக்கு</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">உடப்பிறந்தான்</span><br />என்பது போல உறவு என்று.<br />இதையே இன்னொரு விதமாக இன்னும் நீட்டி முழக்கி சொல்வார்கள்:<br /><span style="font-weight: bold;">பூவாளூர்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">சந்தையிலே</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">உங்கள்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">மாமா</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">கூடையும்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">எங்கள்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">சித்தப்பா</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">கூடையும்</span> <span style="font-weight: bold;">இடித்துக்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">கொண்டு</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">இருந்தன</span><br />என்பது போல உறவு என்று. அவர்கள் இவ்வளவு விஸ்தாரமாக சொல்வதிலேயே தெரியும் எத்தனை தூரத்து உறவு என்று.<br /><br />இன்னும் சில உபமானங்கள்:<br /><br /><br /><span style="font-weight: bold;">விளக்குமாத்துக்குப்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">பட்டுக்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">குஞ்சலம்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">கட்டினாப்ல</span><br /><br /><span style="font-weight: bold;">யானைக்கு</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">கோமணம்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">கட்டின</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">மாதிரி</span><br /><br /><span style="font-weight: bold;">ராஜா</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">வீட்டுக்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">கன்னுக்குட்டி</span><br /><br /><span style="font-weight: bold;">நெருப்பைக் குளிப்பட்டினாப்போலே<br /></span><br /><span style="font-weight: bold;">கடைஞ்ச</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">மோர்லே</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">வெண்ணை</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">எடுக்கற</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">மனுஷன்</span><br /><br /><span style="font-weight: bold;">தாம்பும்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">அரதல்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">தோண்டியும்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">பொத்தல்</span><br /><br /><span style="font-weight: bold;">சீலை</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">இல்லேன்னு</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">சின்னாயி</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">வீட்டுக்குப்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">போனாளாம்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">அவள்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">ஈச்சம்பாயைக்</span><br /><span style="font-weight: bold;">கட்டிண்டு</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">எதுத்தாப்போலே</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">வந்தாளாம்</span><br /><br /><span style="font-weight: bold;">அடியே</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">ங்கரத்துக்கு</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">ஆம்படையானைக்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">காணுமாம்</span><br /><span style="font-weight: bold;">புள்ளைக்கு</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">பேர்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">வெச்சாச்சு</span><br /><span style="font-weight: bold;">சந்தான</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">கோபால</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">கிருஷ்ணன்னு</span><br /><br />இப்படிப் பல. இவைகளுக்கு என்ன அர்த்தம் என்று புரிகிறதல்லவா? பாருங்கள் எவ்வளவு நக்கல், கிண்டல், ஹாஸ்யம், அதே சமயத்தில் சொல்லவந்தது எவ்வளவு தெளிவாக சொல்லப்படுகிறது. எதையும் பூசி மெழுகும் வழக்கம் கிடையாது 'தேங்காயையும் கல்லையும் எதிர் எதிரே போட்டு உடைப்பது போல' ஒரு பேச்சு. 'Political incorrectness" என்றால் தஞ்சாவூர்தான்.<br />தி ஜானகிராமன் அவர்களது கதைகளைப் படிக்கும்போதே ஏதோ எங்கள் உறவினர்கள் உரையாடுவதைப் போலத் தோன்றும்.<br /><br />சில வஜனகளுக்குப் பின்னே ஒரு கதையே இருக்கும்<br />உதாரணமாக ஒருவர் முதலில் வேண்டாம் என்று ஒதுக்கி விட்டுப் போன பொருளை பின்னால் வந்து கேட்டால்<br /><span style="font-weight: bold;">சொவத்துக்</span><span style="font-weight: bold;"> கீரைய </span><span style="font-weight: bold;">வழிச்சுப்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">போடடி </span><span style="font-weight: bold;"></span><span style="font-weight: bold;">சொரணை</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">கேட்ட</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">வெள்ளாட்டி<br /></span><span>என்பது போல வந்தான்</span><span style="font-weight: bold;"> </span>என்பார்கள்<br /><br />இதன் பின்னே உள்ள கதை என்னவென்றால் வயலில் வேலை செய்து விட்டு வேளாளன் மதியம் வீட்டுக்கு சாப்பிட வந்தானாம். வாரம் முழுவதும் மனைவி கீரையும் சோறுமே வைத்துக்கொண்டிருந்தாளாம். மறுபடியும் அன்று கீரையும் சோறும் பார்த்துக்கோபமாகி அந்த கீரைச் சட்டியை சுவற்றில் விசிறி அடிக்கப் போக கீரை எல்லாம் சுவற்றில் அப்பி கொண்டதாம். பின்னர் இரவுச் சாப்பாட்டின் போது வெறும் சோறு மட்டும்தான் இருந்தது. அப்போது வேளாளன் சொன்னானாம்:<br />'சுவத்துக் கீரைய வழிச்சுப் போடடி ' என்று. அவள் ஏதானும் கிண்டலாக சொல்லி விட்டால் என்ன செய்வது? அதற்காக அவனே முந்திக் கொண்டு அவளை<br />'சொரணை கெட்ட வெள்ளாட்டி' என்றானாம். எப்படிக் கதை?<br /><br />இது போல் பல கதைகள் சொல்வார்கள். சில கதைகள் மற்றவட்டாரங்களுக்கும் பொதுவானாலும் இவர்கள் சொல்லும் விதமே தனி. இதோ ஒரு உதாரணம்:<br />மருமகள் குளத்துக்குத் தண்ணி எடுக்க போய் தாமதமாகத் திரும்பினாளாம். மாமியார் கேட்டாளாம்:<br />"மேனா மினுக்கியரே என் மூத்த மகன் தேவியரே<br />தண்ணி எடுக்க போன இடத்தில் தாமசங்கள் ஏனடியோ"<br />என்று.<br /><br />மருமகள் உடனே அழுது கொண்டே போய் கணவனிடம் சொன்னாளாம்:<br />"சொமமழகரே துப்பட்டிக்காரரே<br />உங்கம்மா என்னை உருக உருக சொன்னா "<br />என்று<br /><br />அவன் போய் தாயாரைக் கேட்டானாம்:<br />"கடுகாய் சிறுத்தவரே காசாம்பு மேனியரே<br />என் இடை சிறுத்த செம்பகத்தை என்ன சொன்னீர் மாதாவே?" என்று<br /><br />அம்மாவுக்கு வந்ததே பாக்கணும் கோவம்:<br />"பீத்த முறமே நான் பெருக்கி வெச்ச வாருகல்லே<br />நான் ஆத்தாங்கரையோட போறவரைக்கும்<br />என்னை அம்மான்னு கூப்புடாதேடா கட்டேல போறவனே" அப்படீன்னு<br />சொன்னாளாம்.<br />எப்படி? செம descriptive இல்லை டயலாக் எல்லாம்? கதை சொல்லச் சொன்னால் ஸ்கரிப்டோட டிராமாவே ரெடி. ஒவ்வொருவருடைய கேரக்டர் எவ்வளவு நயமாக வெளிப்படுகிறது பாருங்கள்.<br /><br />பின்னால் ஒரு தரம் இன்னும் ஒரு கதை சொல்கிறேன். அதற்குள் உங்கள் வட்டாரத்தின் சுவாரஸ்யமான் வழக்குகளைப் பற்றி கமென்ட் எழுதலாமே?Ushahttp://www.blogger.com/profile/00179239922869639391noreply@blogger.com15tag:blogger.com,1999:blog-3672689495290709037.post-40154660298340962252010-07-05T00:38:00.000-07:002010-07-06T05:42:00.597-07:00சிக்கு புக்கு ரயிலுமுன்பெல்லாம் ரயில் பிரயாணம் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். எப்போதிருந்து என்றால்<br />"<span style="font-weight: bold;">ஜன்னலுக்கு</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">வெளிலே</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">எட்டிப்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">பார்க்காதே</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">கரி</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">கண்ணிலே</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">படும்</span>" என்பார்களே அந்த காலத்திலே கூட . அப்போதெல்லாம் ஊருக்கு கிளம்பும் தினம் ஸ்டேஷனில போய் டிக்கெட் வாங்கிக் கொண்டு ரயிலில் ஏறிவிடலாம். நிறைய அந்ரிஸர்வ்ட் பெட்டிகள் இருக்கும். அகப்பட்ட இடத்தில் உட்கார்ந்து கொண்டு போய் விடலாம். சிறு பெண்ணாக இருக்கையில் சென்னையிலிருந்து தஞ்சாவூர் போகும் ரயில்களில் அநேகமாக இரவு வண்டிகளில் பிரயாணம் செய்தது நினைவிருக்கிறது. இரண்டு பக்கத்துத் தாத்தாக்களின் வீடுகளும், இதர உறவினர்களின் வீடுகளும் அக்கம்பக்கமான ஊர்களில் அந்தப்பக்கம்தான் இருந்தன. ரிசேர்வ் செய்யாத காரணத்தினாலா அல்லது அப்போது குழந்தைகளுக்கு பெர்த் கிடையாதா என்று தெரியவில்லை - பெரும்பாலும் நானும் என் தங்கையும் சீட்டுகளுக்கு இடையே தரையில் தினசரி தாள்களின் மேல் விரித்த பெட் ஷீட் மேல் கிடத்தப்படுவோம். இப்போது 6 அல்லது 7 மணி நேரங்களே நீடிக்கும் பிரயாணங்கள் அப்போதெல்லாம் பல மணி நேரம் ஆகும். வழியில் வரும் ஊர்களில் எல்லாம் வண்டி நிற்கும். சில நிறுத்தங்களில்<br />அந்த ஊரில் விசேஷமான பழங்கள், தின்பண்டங்கள் விற்பார்கள் - பண்ருட்டி பலாப்பழம் <span>போல.</span>எங்கள் வீட்டிலிருந்து பெரும்பாலும் மிளகாய்ப்பொடியில் பிரட்டப்பட்ட இட்லியும் தயிர் சாதமும் கையில் கட்டிக்கொண்டு வந்திருப்பார்கள். இது போன்ற நிறுத்தங்களில் காபி, பழங்கள் மற்றும் ஏதேனும் தின்பண்டங்கள் வாங்கப்படும். சிலசமயம் எஞ்சினுக்கு கரி நிரப்புவதற்காக நிறைய நேரம் நிற்கும். அப்போதெல்லாம் பிளாட்பாரத்தில் இறங்கி நடக்க அனுமதி கிடைக்கும். என்ஜினிலிருந்து கடைசிபெட்டி வரை நடந்து விட்டால் என்னமோ எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட மாதிரி பெருமைப் பட்டுக் கொள்வோம்.<br /><br />ரயிலில் ஜன்னல் பக்கம் உட்காருவதற்கு ஒரு அடிதடி. அப்புறம் பெரியவர்கள் மத்தியஸ்தம் செய்து ஒவ்வொருவரும் கொஞ்ச நேரம் ஜன்னல் பக்கம்<br />உட்கார ஏற்பாடு செய்வார்கள். வெளியில் காணும் காட்சிகள் எல்லாம் ஏதோ discovery சேனல் குறும்படம் போல் இருக்கும் - மரங்கள், வயல்வெளி, ஆறு, நதி, தூரத்தில் வீடுகள் அதனுள்ளே மினுமினுக்கும் விளக்குகள் என்று.<br /><br />சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு வரை கூட இந்த fascination இருந்தது. ஒரு முறை கன்னியாகுமரி எக்ஸ்ப்ரெசில் திருச்சூர் வரை போய் வந்த பின் தீர்மானம் செய்தேன் - ஒரு முறை இந்த ரயிலில் சும்மா டிக்கெட் புக் செய்து கொண்டு கன்னியாகுமரி வரை போய் அடுத்த ரயிலில் திரும்பி விட வேண்டும் என்று - அவ்வளவு அற்புதமாக இருந்தது அந்த பாதை. எங்கு பார்த்தாலும் பசுமை ஆங்காங்கே சிறு ஓடைகள் , ஓட்டு வீடுகள் என்று.<br />சமீப காலத்தில் இதெல்லாம் மாறிப் போய் ரயில் பிரயாணம் என்றாலே ஒரு ஆயாசம் வந்து விடுகிறது. 'ஏன் என்ன ஆச்சு' என்கிறீர்களா? - எனக்குத்தான் வயசாகிப் போச்சு என்று நினைக்கிறேன். இல்லை இந்திய ரயில்வேயின் தரம்தான் குறைந்து போய் விட்டதா என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. இத்தனைக்கும் முன்பெல்லாம் மூன்றாவது வகுப்பிலும், இரண்டாவது வகுப்பிலும்தான் பிரயாணம். இப்போதெல்லாம் ஏ சி ஆனாலும் முடியவில்லை.<br />லால்பாக், பிருந்தாவன் , சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏறின பத்தே நிமிஷத்தில் ஒருவர் வருவார் - காபி, டீ என்று. சற்றே நேரத்தில் வடை, சமோசா, கட்லெட் . பிறகு ஒருவர் போளி ஒப்பட்டு கொண்டு வருவார்ர். பின்னர் சிப்ஸ், சாக்லேட், பிஸ்கட் . இவர்கள் அரை மணிக்கு ஒருதரம் விடாக்கண்டர்களாய் வந்து நம்மை விசாரித்துக்கொண்டே இருப்பார்கள். குழந்தைகள் அதிகம் இருக்கும் பெட்டி என்றால் இன்னும் ஒருதரம் கூட வருவார்கள். காலை வண்டி என்றால் பொங்கல், இட்லி, வடை அல்லது பிரட் ஆம்லேட் , மதிய வேளையில் வெஜ் பிரியாணி, டொமாடோ ரைஸ், லைம் ரைஸ், தயிர் சாதம். அப்புறம் <span>cold ட்ரிங்க்ஸ், ஐஸ்</span> கிரீம் வேறே. இது போல் 6 நிமிடத்துக்கு ஒருவர் என்ற விகிதத்தில் பிரயாணம் முழுவதும் கதவைத் திறந்து கொண்டிருப்பார்கள். இதிலேயே ஏ.சி. பெட்டி சூடாக ஆரம்பிக்கும். போதாதென்று இந்த உணவுப் பண்டங்களின் மணம் வேறு பெட்டியை நிரப்பும். ஜன்னலையும் திறக்க முடியாது. இதெல்லாம் சேர்ந்து லேசாக வயிற்றைப் பிரட்ட ஆரம்பிக்கும். இன்னும் அவற்றை எல்லாம் வாங்கி சாப்பிட்டால் என்ன ஆகுமோ தெரியாது.<br /><br />இந்தக் கஷ்டங்களை நினைத்துக்கொண்டு<br />'ஆறு மணி நேரப் பிரயாணம்தானே , இரண்டாம் வகுப்பில் போய் விடலாம்' என்று நினைத்தால் அங்கு வேறு விதமான பிரச்சினை. இந்த வகுப்புக் கழிவறைகளை நாளைக்கு ஒரு முறைதான் சுத்தம் செய்வார்கள் போல. சில சமயம் பெங்களூரில் சென்னையிலிருந்து வந்த வண்டியில் ஏறும்போதே இவை உபயோகிக்க லாயக்கில்லாமல் போய்விடுவதும் உண்டு. அவ்வளவு மணம் வீசும்.<br />அப்புறம் மூவர் உட்கார ஒதுக்கப்பட்ட பலகையில் ஒருவர் வந்து ஒட்டிக்கொள்வார் - 'இதோ அரக்கோணம் வரைக்கும்' என்பார். சிலசமயம் கால் கை நீட்ட வழி இல்லாமல் சாமான்களை வைத்துப் பெட்டியை நிரப்பி விடுவார்கள்.<br /><br />இரவுப்பிரயாணத்தில் வேறு விதத் தொல்லைகள் - ஒரு முறை அவசரமாக சென்னை போக வேண்டி <span style="font-weight: bold;">தத்கால்</span> திட்டத்தில் சீட்டு எடுத்து கடைசியில் அந்த பெட்டியில் மொத்தம் மூன்றே பேர். நான், இன்னொரு நடுவயது ஆண் மற்றும் டிக்கெட் பரிசோதகர். பயத்தில் இரவு முழுவதும் உறக்கமே இல்லை. இன்னொரு முறை சைடு பெர்த்தில் படுத்திருந்த <a href="http://agelessbonding.blogspot.com/2009/07/fao-madam-railway-mantriji-and-all.html">ஒரு பெண்மணியை வயதுப்பையன் ஒருவன் தடவிப்பார்க்க முயற்சிக்கப் போக </a>அதனால் தூக்கம் போயிற்று. இப்போதெல்லாம் சைடு பெர்த் என்றலே பயமாக இருக்கிறது.<br /><br />இவற்றோடு கூட இப்போது இன்னொரு தொல்லை சேர்ந்து கொண்டிருகிறது - அதான் இந்த செல் போன் தொல்லை. ஆளாளுக்கு போனை எடுத்து <span>வீட்டு</span><br /><span>விஷயங்கள்</span> அத்தனையும் சத்தம் போட்டு பேச ஆரம்பித்து விடுகிறார்கள். இப்படித்தான் இந்த முறை சென்னை போகும் ட்ரெயினில் ஒரு மாமி தன பேரனின் ஆயுஷ்யஹோமத்துக்கு தன உற்றம் சுற்றம் எல்லோரையும் அழைத்துக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரத்தில் எனக்கு அந்த தேதி, அட்ரெஸ் எல்லாம் மன்ப்பாடமாகிப் போச்சு. அவர் கணவருக்கு சமீபத்தில் உடம்பு சுகம் இல்லாமல் இருந்தது போல் இருக்கிறது. அதை பற்றி அவர்கள் எல்லோரும் விசாரிக்க எல்லோருக்கும் இவர் status அப்டேட் கொடுக்க பயணம் முழுக்க அவருக்கு நேரம் போனதே தெரியவில்லை. கூட இருந்த எங்களுக்குத்தான் தாங்கவில்லை. இன்னொரு பக்கம் ஒரு மனிதர் ஆபீஸ்மீட்டிங்கை<br />போனில் நடத்திக் கொண்டிருந்தார். தேவையா? இவர்கள் எல்லாம் ஒரு 5 வருஷம் முன்னாடி எப்படி வாழ்க்கை நடத்தினார்களோ தெரியவில்லை. ஒரே அலம்பல். பேசட்டும். பெட்டி முழுக்கக் கேட்கும்படியாகவா பேசுவது? இந்த ரயில்வேகாரர்களும் சரி - கழிவறைகளை சுத்தம் செய்ய ஏற்பாடு செய்வதில்லை. பெட்டிகளை அவ்வபோது சுத்தம் செய்வதைப் பற்றி அவ்வளவு அக்கறை எடுப்பதில்லை. அனால் ரயில் பெட்டி முழுவதும் அங்கங்கே சுவிட்சு வைத்திருக்கிறார்கள். செல்போன் சார்ஜ் செய்து கொள்ள வசதியாய். கொடுமையோ கொடுமை.<br /><br />இப்படியாகத்தானே சின்னச் சின்ன ஆசையான ரயில் பயணம் இப்போதெல்லாம் நான் தவிர்க்க விரும்பும் விஷயமாகிப் போனது.<br />போன முறை அமெரிக்க போன பொழுது Amtrak ட்ரெயினில் நியூ யார்க் கிலிருந்து வாஷிங்டன் வரைக்கும் போன பொழுது தோன்றியது - நம்மூரிலும் இப்படிப்பட்ட ரயில் திட்டம் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று. என்னுடைய வாழ்நாளில் வருமா?Ushahttp://www.blogger.com/profile/00179239922869639391noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-3672689495290709037.post-79940587302480988852010-06-25T04:56:00.000-07:002010-06-26T00:46:12.046-07:00உசுரே போகுதேகடந்த சில நாட்களாக அடிக்கடி காதில் விழும் பாடல் ராவணன் படத்திலிருந்து<br /><span style="font-weight: bold;">'உசுரே போகுதே</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">உசுரே</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">போகுதே</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">உதட்டை</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">நீ</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">கொஞ்சம்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">சுழிக்கையிலே</span>' என்ற பாடல். நான் முன்பே சொன்ன மாதிரி கேட்டுக் கேட்டு இப்போது அந்த பாட்டு ரொம்பவும் பிடித்து போய் விட்டது. எனக்கு எப்போதுமே<br />இதுபோன்ற நாட்டுப் புற பாடல்கள் என்றால் மிகவும் பிடிக்கும். சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் நல்லது கெட்டது இவைகளை அன்றாட வழக்குப் பேச்சில் விவரிக்கும் பாடல்கள் மனதைத் தொடுவதில் ஆச்சரியம் இல்லை. <span>நாட்டுப்புறப்</span> <span>பாடல்களில்</span> <span>நம்முடைய</span> <span>உணர்ச்சிகளையும்</span> <span>எண்ணங்களையும்</span> <span>சிரமப்பட்டு</span> <span>அழகுபடுத்தாமல்</span>, <span>அப்படியே</span> <span>அப்பட்டமாக</span> <span>சொல்லுவதால்</span> என்னால் அவை விவரிக்கும் விஷயங்களை உணர முடிகிறது. காதலன் காதலியிடம் பேசும்போது அப்படித்தானே பேசுவான்? இல்லை மிகவும் கஷ்டப்பட்டு பயங்கரக் கவித்துவமாய் '<span style="font-weight: bold;">மின்னலை</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">பிடித்துத்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">தூரிகை</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">சமைத்து</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">ரவிவர்மன்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">எழுதிய</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">வதனமடி</span>' என்று சொன்னால் கேட்பதற்கு அழகாக இருந்தாலும் செயற்கையாக இல்லையோ? வைரமுத்துவே அவரது காதலியிடம் பேசும்போது இப்படிப் பேசுவாரா என்ன? போதாக்குறைக்கு சினிமாக் காதலன் அபாரமான கற்பனையுடன்<br />'<span style="font-weight: bold;">கோபுரமே</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">உன்னை</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">சாய்த்துக்கொண்டு</span><span style="font-weight: bold;"> </span> <span style="font-weight: bold;">உன்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">கூந்தலில்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">மீன்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">பிடிப்பேன்</span>' என்றெல்லாம் பாடும்போது <span>என்</span> <span>போன்ற</span> <span>ஞானசூன்யங்களுக்கு அது<br /></span><span></span> 'கூந்தலில் பேன் பிடிப்பேன்' என்பது போலத் தோன்றும். நமக்கு இந்த காதல் கத்திரிக்காய் இந்தஅனுபவம் எல்லாம் கொஞ்சம் கிடையாதா அதுதான் கஷ்டம்.<br />எப்பவும் போல எங்கயோ ஆரம்பித்து எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறேன்.<br /><br />அந்த 'உசுரே போகுதே' பாட்டு கேட்கும்போது சில மணி நேரமே பார்த்த பெண்ணின் மீது எப்படி இப்படி காதல் வரும் என்று தோன்றியது. இல்லை அவள் அழகு அப்படி அவரைக் கொல்லுகிறது என்கிறாரா?( ஆங்கிலத்தில் Breath-taking என்பார்களே?)<br />ஆழ்ந்த காதல் உணர்வைப் பற்றி பேசும்போதெல்லாம் ஏன் கவிஞர் சாவைபற்றி பேசுகிறார் என்பது எனக்குப் புரிவதே இல்லை.<br />உதாரணமாக 'காதலன்' படத்தில் வரும் 'என்னவளே' பாடலில் வரும் வரிகள்:<br /><span style=""><span style="font-weight: bold;">இது</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">சொர்க்கமா </span><span style="font-weight: bold;">நரகமா </span><span style="font-weight: bold;">சொல்லடி </span><span style="font-weight: bold;">உள்ளபடி- </span><br /><span style="font-weight: bold;"> - </span><span style="font-weight: bold;">நான்</span><br /><span style="font-weight: bold;">வாழ்வதும்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">விடைகொண்டு</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">போவதும்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">உந்தன்</span><br /><span style="font-weight: bold;">வார்த்தையில்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">உள்ளதடி</span><br /></span><br />'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தில் 'சந்தன தென்றல்' பாட்டிலிருந்து<br /><span style="font-weight: bold;">என்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">தளிர்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">மலரே</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">இன்னும்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">தயக்கமென்ன</span><br /><span style="font-weight: bold;">என்னைப்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">புரியாதா</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">இது</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">வாழ்வா</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">சாவா</span><br /><br /><br />'பாம்பே' படத்தில் 'உயிரே உயிரே' பாடலில்:<br /><span style=""><span style="font-weight: bold;">காதல்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">இருந்தால்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">எந்தன்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">கண்ணோடு</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">கலந்துவிடு</span><br /><span style="font-weight: bold;">காலம்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">தடுத்தால்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">என்னை</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">மண்ணோடு</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">கலந்துவிடு</span><br /></span><br />'உயிரே' படத்திலிருந்து 'என் உயிர்பாடலில்:<br /><span style="font-weight: bold;">என்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">ஆறறிவில்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">ரெண்டு</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">காணவில்லை</span><br /><span style="font-weight: bold;">என்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">ஆருயிரே</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">என்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">ஓருயிரே</span><br /><span style="font-weight: bold;">வந்து</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">சேர்ந்துவிடு</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">என்னை</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">சேர</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">விடு</span><br /><span style="font-weight: bold;">இல்லை</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">சாக</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">விடு</span><br /><br />ஏன் ஏன் ஏன் இப்படி?<br />காதலுக்காக வயதுப்பிள்ளைகள் தற்கொலை பண்ணிக் கொள்ளும்போதெல்லாம் யோசித்திருக்கிறேன் - வாழ்க்கையில் பார்க்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறது இதற்குள் விரும்பிய ஒரு பெண்ணோ பையனோ கிடைக்கவில்லை என்பதற்காக வாழ்வையே தியாகம் செய்யும் அளவிற்கு அது எப்படிப்பட்ட காதல் என்று. காதல் என்பது வாழ்கையின் ஒரு அத்யாயம்தானே அதுவே வாழ்கையா என்று.<br />பெரும்பாலும் ஆண்கள் பாடும் பாடல்களில்தான் இந்த மாதிரியான ஒரு செண்டிமெண்ட் அடிக்கடி வருகிறது. காதல்வசப்ப்படும்போது ஆண்கள் மிகவும் உணர்ச்சி வசப்படுகிரார்களா இல்லை வாழ்வு/சாவு என்ற இரண்டு சாத்தியம்தான் உண்டு என்று சொல்லி தான் காதலிக்கும் பெண்ணை blackmail செய்கிறார்களோ?<br /><br />இந்தப் பாடல்களை எல்லாம் நிஜக்காதல் அல்ல சினிமாவுக்காக மிகைப்படுத்தப்பட்ட உணர்வுகள் என்று இந்த பிள்ளைகளுக்கு எப்படி புரிய வைப்பது?<br />சினிமாதான் இதற்கெல்லாம் காரணம் என்று சொல்ல வரவில்லை. ஆனால்ஒரு பெண்ணோ பையனோ <span></span> நம்மைக் காதலிக்கும்போது நம் ஒவ்வொருவருக்கும் நாமும் ஒரு ஹீரோ போன்ற உணர்வு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அப்போது இந்த பாடல்கள் எல்லாம் நம்மை பாதிக்கும் வாய்ப்பும் இருக்கிறது என்று சொல்கிறேன்.<br />நமக்குப் பிடித்தவரோடு வாழ்க்கை அமைத்துக்கொள்ளவேண்டும் என்பது எல்லோரும் எதிர்பார்க்ககூடிய நியாமான ஆசைதான். இதையும் மிக அழகாக சொல்வார் கவிஞர் ' மின்சாரக் கனவு' படத்தில் ஒரு பாடலில் :<br /><span style=""><span style="font-weight: bold;">பெண்ணே</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">பெண்ணே<br /></span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">பூங்காற்று </span><span style="font-weight: bold;">அறியாமல் </span><span style="font-weight: bold;">பூவைத்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">திறக்க</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">வேண்டும்</span><br /><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">பூகூட</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">அறியாமல் </span><span style="font-weight: bold;">தேனை </span><span style="font-weight: bold;">ருசிக்க</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">வேண்டும்</span><br /><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">அட</span><span style="font-weight: bold;">உலகை</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">ரசிக்க</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">வேண்டும் </span><span style="font-weight: bold;">நான்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">உன் </span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">போன்ற</span><br /><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">பெண்ணோடு<br /></span></span><br />உடன் சேர்ந்து உலகை ரசிக்க காதலியே மனைவி ஆவது பெரிய வரம்தான். ஆனால் கிடைக்காது போனால் வாழ்க்கை முடிந்து போக வேண்டாமே? ஆறு பில்லியன் மனிதர்களில் இன்னொருத்தி அதே போல் இல்லாமலா போவாள்?<br /><br />வாழ்வு என்பது ஒரு பிரசாதம் போல அதை இன்னொருவருக்காக அழித்துக்கொள்வது என்பது வாழ்வையே அவமதிப்பது போலாகும். நாம் வாழ்வை அர்த்தமுள்ளதக்குவது நாம் கையில் இருக்க வேண்டும். அதை இன்னொருவரால்தான் அர்த்தப்படுத்தமுடியும் என்று நினைப்பது மடத்தனம். இதனால்தானோ என்னமோ எனக்கு " விண்ணைத்தாண்டி வருவாயா' படம் பிடித்திருந்தது. அவனும்தான் அலைந்துகொண்டிருந்தான்:<br /><span style="font-weight: bold;">வாழ்வுக்கும்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">பக்கம்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">வந்தேன்</span><br /><span style="font-weight: bold;">சாவுக்கும்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">பக்கம்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">நின்றேன்</span><br />என்று.<br />அப்படி விழுந்து விழுந்து காதலித்த பெண் கிடைக்கவில்லை என்றாலும் செத்துப்போகாமல் வாழ்ந்து அதில் வெற்றியும் பெற்று காட்டுகிறானே அதானால்அந்தப் படம் எனக்குப் பிடித்தது.<br /><br />சரி இப்பொழுது போய் இன்னொரு தரம் கேட்கிறேன் 'உசுரே போகுதே' பாடலை.Ushahttp://www.blogger.com/profile/00179239922869639391noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-3672689495290709037.post-65205278447200711552010-06-22T01:18:00.001-07:002010-06-22T04:52:13.865-07:00Raavan - என் மதிப்பீட்டில்போன போஸ்டில் raaavan படம் பார்ப்பதற்காக நான் பட்ட பாடைப் பற்றிப் படித்த சில பேர் Raavan பட விமர்சனம் எழுதும்படி கேட்டிருகிறார்கள். பொதுவாக நான் பட விமர்சனங்கள் செய்வதில்லை. முக்கிய காரணம் எனக்கு சினிமா என்னும் கலைவடிவத்தைப் பற்றி அவ்வளவாக ஒன்றும் தெரியாது. நான் சினிமா பார்ப்பது ஒரு பாமர ரசிகையாய். சில சமயம் ரொம்பவே அபத்தமான படத்தைப் பார்த்தால் நக்கலாக அதைப் பற்றி எழுதத் தோன்றும். மணி ரத்னம போன்றவர்கள் படம் 50% மட்டத்திற்குக் கீழே போகத்தான் வாய்ப்பே கிடையாதே?<br /><br />நானும் பலரது விமரிசனகளைப் படித்தேன். முக்கியமான குற்றச்சாட்டு கதையே இல்லையே என்பது. ஓரு crime அதற்கு ஒரு motive பின்னர் ஒரு அருமையான chase பிறகு ஒரு denouement - இதற்கு நடுவில் முக்கிய கதாப்பாத்திரங்களிடம் உண்டாகும் மாற்றங்கள். எல்லாமே அளவாகத்தான் சொல்லி இருக்கிறார். "தசரத மகாராஜாக்கு மூன்று பெண்டாட்டிகள்' எனறு ஆரம்பித்து நீளமாக கதை வேண்டும் என்கிறார்களா என்ன? மணி ரத்னத்துக்கு அப்படிப் பேச வராது என்பது தெரிந்த செய்திதானே. அதே போல் அவர் யாருடைய நடத்தையையும் justify செய்யவோ condemn செய்யவோ முயற்சிக்கவும் இல்லை. இதுதான் நடந்தது எனறு சொல்லிவிட்டு 'யார் நல்லவன் யார் நல்லவன் இல்லை என்பதை நீங்களே தீர்மானம் செய்யுங்கள் எனறு விட்டு விடுகிறார். படத்தின் ராகினியைப் போலவே நாமும் யோசனையுடன் வெளியே வருகிறோம்.<br /><br />இதெல்லாம் நடக்கும் களம் ஒரு அழகான காட்டுப்பகுதி. அதை எத்தனை அழகாக நமக்குக் காட்ட முடியுமோ அதனை அழகாக சந்தோஷ் சிவனும் மணிகண்டனும் காண்பித்திருக்கிறார்கள். இதிலேயே நாம் கொடுத்த பைசா வசூல். மற்றதெல்லாம் இலவச இணைப்பு தான்.<br /><br />நடிப்புக்கு வருவோம் - காட்டில் வளர்ந்தவன், படிப்பில்லாதவன் என்றால் சில mannerisms தேவையா என்ன? அபிஷேக் பச்சனை <span></span> காட்டுவாசியாககாட்டுவது கொஞ்சம் கஷ்டம். அந்த முகத்தில் ஆத்திரமும் கோபமும் பார்க்கும்போது நமக்கு ஏதோ ஒரு குழந்தை தலையிலும் கன்னத்திலும் அடித்துக்கொண்டு கோபப்படுவது போலத்தான் இருக்கிறது. யதார்த்தமான காட்டான் தோற்றம் வரவில்லை. பீரா முற்றிலும் காட்டான் இல்லை, சமுதாயத்தின் அநியாயங்கள், ஏற்ற தாழ்வுகளை எதிர்த்து போராளி ஆனவன் என்றால் இந்த பக் பக் பக் mannerism எல்லாம் எதற்காக? அனால் பாவம் முயன்றிருக்கிறார். அவருக்கு சரிப்படாத கதாபாத்திரம் அதனால் முயற்சிக்கேற்ற பலன் இல்லை.<br />ஐஸ்வர்யா- அழகோ அழகு. சரீரத்தை கஷ்டப்படுதிக்கொண்டு நடித்திருக்கிறார் - மலை ஏறி, தண்ணீரில் குதித்து, மழையில் நனைந்து - பாவம் நல்ல துணி கூட இல்லை. ஆனால் கிழிசல் கந்தலில் கூட படு அழகாக இருக்கிறார். (குடுத்து வைத்த ஜன்மம்) சில சமயம் அதிகமாகக் கத்துகிறார் - ஆனால் kidnap செய்து காட்டில் சிறை வைக்கப் பட்ட பெண என்பதினால் கொஞ்சம் கத்தினால் தப்பில்லை. என்னமோ அவருடைய அழகுதான் மனதில் நிற்கிறதே தவிர ராகினி என்ற அந்தப் பாத்திரத்தின் மன உறுதியும், தைரியமும் , fierce spirit <span>டும் </span>நன்றாக வெளிப்பட்டதா என்பதை யோசிக்க வேண்டி இருக்கிறது.<br />விக்ரம் - ம்ம்ம், அழகாக இருக்கிறார். தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பை சரியாக நிறைவேற்றி இருக்கிறார். நடிப்பு எனறு பெரிதாக ஒன்றும் இந்த பாத்திரத்துக்கு வாய்ப்பு இல்லை.<br />கோவிந்தா: மனதில் நிற்கிறார். ஆனால் எதற்கு அந்த குரங்கு சேஷ்டைகள்? அவை இல்லாமலே ஹனுமான் பாத்திரத்தை வடிவமைத்திருக்கலாம். இன்னும் கௌரவமாக இருந்திருக்கும்.<br />ரவி கிஷேன்:பாத்திரத்துக்கு மிகவும் சரியான நடை, பாவம், பேச்சு, நடனம் எல்லாமே. படத்திலேயே மிகச் சிறந்த performance.<br />பிரியா மணி: சின்ன வேஷம் . கச்சிதமாக செய்திருக்கிறார்.<br /><br />இசை: ஓஹோ எனறு ஒன்றும் இல்லை. ஆனால் ரஹ்மானின் இசை கேட்க கேட்க நமக்கு பிடித்துப் போய் விடும். இன்னும் சில வருடங்களுக்கு இந்தப் பாட்டெல்லாம் காதில் கேட்டுக் கொண்டேதான் இருக்கும். பிடித்துப் போய் விடும். எந்தப் பாட்டும் படத்தின் போக்கை விட்டு விலகாமல் ஒட்டி இருப்பது நன்றாக இருந்தது.<br /><br />காஸ்ட்யும்: சவ்யசாச்சி - எனக்கு இவரைப் பிடிக்கும். மற்ற designers போல் நடைமுறைக்கு ஒத்துவராத உடைகளை இவர் கற்பனை செய்வதில்லை. ஐஸ்வர்யா முதலில் தோன்றும்போது ஒரு மஞ்சள் டிரஸ் போட்டு வருகிறாரே அது ரொம்ப நன்றாக இருந்தது. அப்புறம் காட்டில் அவருக்குக் கொடுக்கப்பட்ட புடவை.அதற்கு சம்பந்தமே இல்லாத ரவிக்கை. அதுவும். ஆமாம், குத்துவிளக்குக்கு பொட்டு வைக்க வேண்டுமா என்ன? எதைப் போட்டாலும் அழகாக இருக்கிறார் ஐஸ்வர்யா. அவருக்கு நம்ம தெருக்கோடி Tailor தெய்த்தது கூட சூப்பர் ஆக இருக்கும். (ஆனால் சவ்யசாச்சிக்கு நான் மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன்: இப்போதெல்லாம் புடவைக்கு மேட்ச் ஆக ரவிக்கை கிடைக்கவில்லை என்றால் ஏதோ ஒன்றை போட்டுக் கொண்டு சவ்யசாச்சி பாணி எனறு சொல்லி விட முடிகிறது. )<br />விக்ரமுக்குதான் கொஞ்சம் அதிகமாக மாடல் லுக் கொடுத்து விட்டாரோ எனறு தோன்றுகிறது. நமக்குத் தெரிந்த போலீஸ்காரர்கள் எல்லாம் தொந்தியும் தொப்பையும் இருக்கிறார்களா அது வேறே.<br />மற்றபடி ஓகே.<br /><br />ஒரு வேளை இந்த இராவணன் விஷயத்தைக் கலக்காமல் இருந்திருந்தால் இவ்வளவு criticism இருந்திருக்காதோ என்னமோ? சந்தர்ப்ப சூழ்நிலையால் சட்டத்தை மீறுபவனிடமும் நல்லகுணங்கள் இருக்கலாம். சட்டத்தை காக்கும் கடமை வீரர்களிடமும் சாதாரண மனிதத்துவம், சில குறைபாடுகள் இருக்கலாம். யாரும் மொத்தமான் மகாத்மா அல்லது மொத்தமான துராத்மா அல்ல - எல்லோருமே கலவைதான் எனறு பீரு, ராகினி, தேவ் என்ற சாதாரண மனிதர்களின் கதையாகவே விட்டிருந்தால் இத்தனை எதிர்பார்ப்புகள் இருந்திருக்காதோ என்னமோ. அதனால் நிராசையும் இருந்திருக்காது.<br />எனக்கு ஒரே ஓரு பாயிண்ட் டில் கொஞ்சம் எதிர்பார்ப்பு இருந்தது - அதான் அந்த அக்னிப்ரவேசம் விஷயத்தில் மணியுடைய Take என்ன வாக இருக்கும் எனறு. அதை கரெக்ட் ஆக சொதப்பி விட்டார் மனிதர்.<br />மத்தபடி ஓகே. போய் பாருங்கள். பைசா வசூல்தான். அப்புறம் நாமும் கும்பலோடு சேர்ந்து படத்தை திட்டலாம் பாருங்கள்.Ushahttp://www.blogger.com/profile/00179239922869639391noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-3672689495290709037.post-56092891523431664832010-06-18T07:09:00.000-07:002010-06-21T20:26:08.998-07:00சினிமா படுத்தும் பாடுநான் சின்னவளாக இருந்தப்போ சினிமாவுக்குப் போவது என்பது வருடத்தில் என்றைக்கோ ஒரு நாள் நடக்கும் விஷயம். டிக்கெட் விலை 60 பைசாவிலிருந்து 2:50 ருபாய் வரைக்கும்தான் என்றாலும் எல்லா படங்களுக்கும் போக முடியாது. மொதல்லே 2:50 ரூபாய் என்பதே பெரிய தொகை. பத்து இட்லி ஒரு ரூபாய்க்குக் கிடைத்த காலம் அது - ஒரு கூஜா சாம்பாரும் சட்னியும் சேர்த்து. 4 பேர்ஒரு படம் பார்க்க 10 ருபாய். செலவு அதிகம் என்பது ஒரு பக்கம். தவிர படங்கள் பார்த்து சின்னவர்கள் எல்லாம் கெட்டுப் போகக் கூடாது என்பதிலும் வீட்டுப் பெரியவர்களுக்குக் கவலை. ( அவர்கள் பாஷையிலே சொல்லவேண்டுமென்றால் '<span style="font-style: italic;">சினிமா</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">பாத்து</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">காதல்</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">கீதல்னு</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">கெட்டுப்</span><span style="font-style: italic;">போயிட்டாக்க</span>?' அவர்களைப் பொறுத்த வரையில் காதல் என்பது ரொம்ப கெட்ட விஷயம்.)<br />அதனாலே எதாவது ஒரு படம் உயர்வாக பேசப்பட்டாலோ அல்லது சரித்திரம் அல்லது புராணம் சம்பந்தப்பட்டதாக இருந்தாலோ அனுமதி கிடைக்கும். யாராவது பெரியவர்கள் அழைத்துக்கொண்டு போவார்கள். இன்டர்வலில் Popcorn ஐஸ் கிரீம் இதெல்லாம் கிடையாது. சில தியேட்டர்களில் காபி, டீ , கூல் ட்ரிங்க்ஸ், பிஸ்கட் கிடைக்கும் . ஆனால் அதெல்லாம் வாங்க மாட்டார்கள். '<span style="font-style: italic;">வெளியில்</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">கண்டதையும்</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">சாப்பிட்டால்</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">உடம்பு</span><span style="font-style: italic;"> </span><span style="font-style: italic;">கெட்டுபோகும்</span>' என்று சொல்லி விடுவார்கள். சில சமயம் வீட்டிலிருந்தே ஏதேனும் தின்பதற்கு பாக் செய்து கொண்டு போவது உண்டு. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் கிடையாது என்பதால் குள்ளமாக சின்னவராக இருக்கும் சிறுவர் சிறுமியரை 5 வயது என்று சொல்லச் சொல்வார்கள். 'எங்க வீட்டு பிள்ளை' படம் வந்த போது எனக்கு 7 வயது . சிதம்பரத்தில் ஒரு கல்யாணத்துக்கு அப்பா அழைத்துச் சென்றிருந்தார். கல்யாணத்துக்கு வந்திருந்த வாலிபக் கூட்டம் நைட் ஷோ படம் பார்க்க தீர்மானித்து என்னையும் அழைத்துச் சென்றது. நான் குள்ளமாக இருந்ததால் எனக்கு 5 வயது என்று சொல்லி விட்டார்கள். எனக்கோ பாதியில் யாரானும் வந்து வெளியே போக சொல்லி விடுவார்களோ எனறு பயம். நல்ல வேளை அதெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை.<br /><br />முதலிலேயே ரிசர்வ் செய்வது போன்று மெனக்கிடும் வேலை எல்லாம் கிடையாது. படம் கொஞ்சம் பழசானதும் கூட்டம் குறைவாக இருக்கும். அப்போது காட்சி நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்னதாகச் சென்று queue விலே நின்று டிக்கெட் வாங்குவோம். அநேகமாக கிடைத்து விடும். சில சமயம் திரைக்கு ரொம்ப பக்கமாக இருக்கும். அவ்வளவுதான்.<br />அப்போதெல்லாம் black டிக்கெட் என்றுஒன்று உண்டு. <span></span>ஒவ்வொரு ஆட்டத்துக்கு (ஆட்டம்னா ஷோ) முன்பும் queue வில் நின்று இத்தனை டிக்கெட் வாங்கிவிடுவார்கள். அப்புறம் அவற்றை டிக்கெட் கௌண்டர் மூடியானதும் அதிக விலைக்கு விற்பார்கள். <span>சில</span> <span>பேருக்கு</span> <span>இதே</span> <span>தொழில்</span>. <span></span><span>இதில்</span> பேரம் எல்லாம் நடக்கும். இரண்டரை ருபாய் டிக்கெட்சில சமயம் பத்து ருபாய் வரைக்கும் போகும். அதுவும் படம் வெளிவந்த முதல்நாள் என்றால் கேட்கவே வேண்டாம். அவ்வளவு கலை ஆர்வம் உள்ள மக்களும் உண்டு. இந்த மாதிரி எல்லாம் வாங்கும் அளவுக்கும் எங்களுக்கெல்லாம் ஆர்வமும் இல்லை, பணமும் இல்லை.<br /><br />பத்தாவது வகுப்பு வந்த பின் ஸ்கூல் கடைசி நாள் அன்று வகுப்பு தோழிகளுடன் சேர்ந்து ஒரு படம் போகும் வழக்கம் ஆரம்பித்தது. இது ஒரு பெரிய பிக்னிக் மாதிரி எங்களுக்கு. அப்போது மாத்திரம் ஒரு நாள் முன்னதாகவே போய் வேண்டுமான எண்ணிக்கையில் டிக்கெட் வாங்கிவிடுவோம். அப்புறம் எல்லோரும் ஸ்கூலில் கூடி அங்கிருந்து ஒன்றாக 12 b பஸ்ஸில் கமலா தியேட்டர் போனது , பஸ்ஸில் ஜோக் அடித்து சிரித்துக் கொண்டே பயணம் செய்தது இதெல்லாம் வாழ்கையில் மறக்க முடியாத நாட்கள். இது காலேஜ் முடியும் வரையும் தொடர்ந்தது.<br /><br />அப்புறம் கல்யாணம் ஆகி பெங்களூருக்கு வந்தபின் திரும்பவும் சினிமா பார்ப்பது அபூர்வமாகிப் போனது. எனக்கோ கருத்துள்ள படங்களுக்குப் போய் கண்ணீர் விட்டால்தான் கொடுத்த காசுக்கான மதிப்பு கிடைத்தது என்ற அபிப்ராயம். கணவருக்கோ சண்டை, action , james Bond மாதிரி படங்கள் பார்க்கத்தான் பிடிக்கும். எனவே குடும்பத்தில் கலவரம் வேண்டாம் என்று படம் போவதையே நிறுத்தி விட்டோம். தொலைக்காட்சியும் வந்து விட்டது. பையனுக்கும் கிரிக்கெட்டில் மாத்திரம்தான் ஆர்வம். தாத்தாவும் பேரனும் தொலைகாட்சியில் கிரிக்கெட் பார்பார்கள். எனக்குத் தாலி கட்டிய மனிதர் செய்திகள் பார்த்து புல்லரித்துப் போவார். நான் சனி ஞாயிறில் மதியம் வரும் award winning படங்களைப் பார்த்துக் கண்ணீர் விடுவேன். இந்த காலகட்டத்தில் தியேட்டருக்கு போய் சினிமா பார்க்கும் அளவு ஆர்வம் இல்லை.<br /><br />இப்போது இந்த multiplex எல்லாம் வந்தபிறகு திரும்பவும் தியேட்டரில் சினிமா பார்க்க ஆரம்பித்திருக்கிறேன். வழக்கமாய் படம் எல்லாம் வந்து 3 வாரம் ஆன பின், பேப்பர், blog எல்லாவற்றிலும் விமர்சனம் எல்லாம் படித்து, ஏற்கனவே பார்த்தவர்களின் அபிப்ராயத்தையும் கேட்டு அப்புறம் சாவகாசமாய் ஏதாவதொரு காலை ஆட்டத்துக்கு தோழிகளுடன் போய் வருவேன். அனால் இந்த Raavan கதை சற்று வித்தியாசம் ஆனது. கடந்த சில மாதங்களாக இந்த படத்தை பற்றிய செய்திகளை படித்ததில் இதை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் கொஞ்சம் அதிகமாக இருந்தது. போதாததற்கு இளம் நண்பன் ஒருவன் (<span>பிரவீன்</span> <span>- கையை தூக்கு! இதோ இவன்தான்</span>) இந்த படத்தின் பாடல்கள், செய்திகள் என்று ஈ மெயிலில் அனுப்பி கடந்த ஒரு மாதமாய் எதிர்பார்ப்பை அதிகரிக்கப்போக தமிழ், ஹிந்தி இரண்டு வடிவங்களையும் பார்க்க வேண்டும் என்று மாட்டுப்பெண்ணும் நானும் தீர்மானித்தோம். இதற்கு நடுவே கர்நாடகத்தில் படத்தை வெளியிடப் போவதில்லை என்று முதலிலும், பிறகு சில அரங்கங்களில் மாத்திரம்தான் இந்த படத்தை வெளியிடுகிறார்கள் என்றும் வரிசையாக செய்திகள். இன்று காலை வரை எந்தெந்த தியேட்டர்களில் படம் வெளி ஆகிறது என்று சரியாகத் தெரியவில்லை.<br /><br />நானும் காலையிலிருந்து இன்டர்நெட் மூலமாய் டிக்கெட் புக் செய்யலாம் என்று பார்த்தால் வெளிவரப்போவதாகச் சொன்ன இரண்டு தியேட்டர்களிலும் இந்த படத்துக்கான காட்சிகளைப் பற்றிய விவரமே இல்லை. பத்து மணி வாக்கில் PVR இல் GOLD கிளாஸ் இல் ஷோ உண்டு டிக்கெட் ஆயிரம் ருபாய் என்று காண்பித்தது. நொந்து போய் விட்டேன். 'சரி இந்த வாரம் நாம் இதை பார்க்கப் போவதில்லை அகிலாவிடம் சொல்லி விடலாம்' என்று தீர்மானித்தேன். பாவம் பிரவீன் வேறே எங்களோடு போகிறேன் என்று சொல்லி இன்றைக்குப் போகாமல் உட்கார்ந்துகொண்டிருந்தான். 'சரி இந்தபடம் நமக்கு பொசிப்பு இல்லை. பின்னால் எப்போவாவது '<span style="font-weight: bold;">இந்தியத்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">தொலைக்காட்சிகளில்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">முதன்முறையாக</span>' வரும்போது பார்த்துக்கொள்ளலாம்' என்று தீர்மானித்தேன். '<span style="font-weight: bold;">சீ</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">சீ</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">இந்த</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">பழம்</span> <span style="font-weight: bold;">புளிக்கும்</span>' என்பது போல சில விமர்சனங்களில் படம் அவ்வளவு ஒண்ணும் பிரமாதமாய் இல்லை என்பதையும் பார்த்து ஆறுதல் சொல்லிக் கொண்டேன்.<br /><br />அப்புறம் மெதுவாய் 1 மணி வாக்கில் திரும்ப தியேட்டர் website போனால் நாளை advance booking க்கான வாசல் திறந்தது. சரி டிக்கெட் இருக்கா பாப்போம் என்று போனால் மொத்த ஹாலும் காலி. இன்னும் யாருமே புக் பண்ணலை. '<span style="font-weight: bold;">பொறுத்தார்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">பூமி</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">ஆள்வார்</span>' என்பார்களே அது சரிதான் என்று நினைத்துக் கொண்டு டிக்கெட் புக் செய்ய ஆரம்பித்தேன். என் பேரு, கோத்ரம் எல்லாம் கேட்டு விட்டு ' எத்தனை டிக்கெட் வேணும்?' என்று கேட்டது. பிறகு 'சீட் தேர்வு செய்து கொள்ளவும்' என்று சொல்லி அனுமதி கொடுத்ததா, எனக்கு மொத்த ஹாலையும் காலியாகப் பார்த்ததில் சந்தோஷம் கரைகொள்ளவில்லை. கடைசிவரிசை என்று நினைத்துக் கொண்டு N வரிசையில் 3 நல்ல சீட் தேர்வு செய்தேன். பணம் எல்லாம் செலுத்தி விட்டு வெளியே வந்து படு குஷி ஆக அகிலாவுக்கும் பிரவீனுக்கும் மெயில் மெசேஜ் எல்லாம் போட்டு விட்டு படுத்தேன். பாதி தூக்கத்திலே ஏதோ நினைவு வந்தது. ராஜநீதி போனப்போ கடைசீலேர்ந்து ரெண்டாவது வரிசையில் பார்த்தோமே அது B Row இல்லையோ? அப்போ N எப்படி கடைசீயாக இருக்கமுடியும் என்று. ஆரம்பித்தது திரும்பவும் மனதிலே குடைச்சல். திரும்ப கம்ப்யூட்டர்,திரும்ப தியட்டர் வெப்சைட். போய் பார்த்தால் பெரிசா சிவப்பு கலர் லே ஸ்க்ரீன் அப்டீன்னு பட்டன் இருந்தது. அதுக்கு முதல் Row N Row! முதலில் புக் செய்த போது இது என் கண்ணில் படவே இல்லை - சத்தியமா சொல்றேன். போதுமா என் சமத்து? தேடித் தேடி முதல் Row அதுவும் ஒரு டிக்கெட் 275 ருபாய் குடுத்து! வாழ்க்கை வெறுத்துப் போச்சு.<br /><br />அப்புறம் என்ன ஆச்சு என்று கேக்கறீங்களா ? இன்னும் 3 டிக்கெட் புக் பண்ணிட்டு மொதல் மூணையும் நாளைக்கு தியேட்டர்லே யாருக்காவது விக்கலாம்னு தீர்மானம் பண்ணினோம். அப்போதான் அந்த பழைய காலத்து black டிக்கெட் சமாசாரம் எல்லாம் நெனவுக்கு வந்துது. சந்தர்ப்பவசத்திலே தொழிலே மாறிப் போச்சு பார்த்தீர்களா, எல்லாம் நேரம்தான்.<br /><br />Latest update: யாரோ friends கிட்டே கேட்டார்களாம் அகிலாவும் பிரவீனும். முதல் Row வானாலும் பரவா இல்லை வாங்கிக்கறோம் என்றார்களாம் அந்த அப்பாவிகள்.<br />எந்தரோ மகானுபாவுலு வால் அந்தரிக்கு நா வந்தனகளு.<br /><br /><br />அப்புறம் இன்னொரு சமாசாரம்:<br />Gold classலே டிக்கெட் விலை 1000 ருபாய் என்று விற்கிறார்களே - அவ்வளவு பணம் குடுத்து யாரேனும் ஒரு படத்தை போய் பார்ப்பார்களோ?<br />வேண்டுமானால் இந்த தலைப்பில் ஒரு பட்டி மன்றம் வைக்கலாமே <span>முனைவர்</span><br /><span>ஞானசம்பந்தம்</span> <span>தலைமையிலே</span>:<br />"<span style="font-weight: bold;">ஆயிரம்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">ருபாய்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">கொடுத்து</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">படம்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">பார்ப்பதற்குக்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">காரணம்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">அளவு</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">கடந்த</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">சினிமா </span><span style="font-weight: bold;">ஆர்வமா</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">அல்லது</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">தாங்க</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">முடியாத</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">பணப்புழக்கமா</span><span style="font-weight: bold;">?</span>" என்று.<span></span><br />என்ன சொல்றீங்க?Ushahttp://www.blogger.com/profile/00179239922869639391noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-3672689495290709037.post-76153427775215972602010-06-17T04:47:00.000-07:002010-06-21T09:09:32.270-07:00பக்தி பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்எங்க வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு வீட்டின் சொந்தக்காரர் ஒரு சாமியார் பிரபலத்தின் பரம பக்தர். இந்த சாமியார் அண்மையில் பல வீடியோ படங்களில் கதாநாயகர். ஜெயிலிலிருந்து சில நாட்கள் முன்புதான் வெளியே வந்தார். இவருடைய லீலைகள் எல்லாம் அம்பலத்துக்கு வரும் முன்பு இந்த பக்தர் அவ்வபோது இவரது புத்தகங்களை எனக்குக் கொடுத்துப் படிக்க சொல்வார். ஒரு நாள் இவர் வீட்டுக்கு இந்த சாமியாரின் செருப்புகள் வந்தன. அதை வந்து பார்த்து வணங்கி ஆசி பெறும்படி அழைப்பும் விடுத்தார். சாமியாருடைய செருப்புக்கே இந்த மதிப்பு என்றால் சாமியாருக்கு எவ்வளவு இருக்கும் பார்த்துக் கொள்ளுங்களேன்.<br /><br />எனக்கோ காவி கலரை பார்த்தாலே கொஞ்சம் அல்லர்ஜி. எனக்கும் என்னுடைய கடவுளுக்கும் இருக்கும் பந்தத்தில் மூன்றாம் நபருக்கு வேலை இல்லை என்பது எனது கொள்கை. இந்த ஸ்லோகம் பஜனை இதை எல்லாம் கூட நான் வெகுவாக கையாள்வதில்லை. எல்லாம் நேர் சம்பாஷணைதான். சில சமயம் ஆங்கிலம் சில சமயம் தமிழ் பல சமயம் ரெண்டும் கலந்த ஒரு கூட்டு. எதானும் நல்லது நடக்கும்போது தேங்க்ஸ் சொல்கிறேனோ இல்லையோ எதானும் தப்பா போச்சு என்றால் அன்னிக்கு சுவாமிக்கு அர்ச்சனைதான். And என்னோட கடவுளும் ok with it னுதான் நெனைக்கறேன். இது வரைக்கும் என் கண்ணை எல்லாம் ஒண்ணும் குத்திவிட வில்லையே.<br />So இந்த பக்கத்துக்கு வீடு மனுஷனோட தொல்லை தாங்காமல் அவரை பார்த்தால் ஓடும் அளவுக்கு ஆயிடுத்து.<br /><br />நான் காலேஜ் படிக்கும்போது இந்த மாதிரிதான் ஒரு கும்பல் உண்டு. இவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்று தெரியாது. லஞ்ச் பிரேக்கின் போது யாராவது தனியே உட்கார்ந்திருந்தால் போதும் அவர்களை 'டபக்' என்று பிடித்து விடுவார்கள். அப்புறம்' உங்கள் இந்து கடவுள்கள் எல்லாம் பொய். ஏசுதான் உண்மையான வழி' அப்படி இப்படி என்று சொல்ல ஆரம்பிப்பார்கள். நானோ முழுக்க முழுக்க ராமகிருஷ்ண மடம் நிர்வகிக்கும் பள்ளியில் படித்தவள். வளர்ந்ததும் இந்துமத சூழலில். ஏசுவும் சிவன் விஷ்ணு இவர்களைப்போல் இன்னொரு கடவுள் என்ற வரைக்கும்தான் தெரியும். முதல்நாள் இந்த மாதிரி ஒரு பெண் என்னிடம் பேச ஆரம்பித்ததும் எனக்கு ஒண்ணுமே புரியவில்லை. 'ஓஹோ அப்படியா? என்று பொதுவாக சொல்லி வைத்தேன். அதோடு அவள் போய் விடுவாள் என்று நினைத்தேன். அவளானால் 'நீ இந்த மாதிரி பொய் கடவுளை எல்லாம் நம்பினால் நரகத்துக்கு போவாய். அதனால் உடனே ஏசுவின் வழிக்கு மாறு' என்றதும் எனக்கு கிலி பிடித்து போயிற்று. நரகம் என்பது பற்றி பயங்கரமான விஷயங்கள் கேள்விப் பட்டிருக்கிறேன். அங்கே ஒரு பெரிய கொப்பரையில் கொதிக்கும் எண்ணையில் நம்மைப் போட்டு வறுப்பார்கள் ;இது போல் பல சித்திரவதைகளுக்கு நம்மை உட்படுத்துவார்கள் என்றெல்லாம் கேள்விப் பட்டிருக்கிறேன். அங்கே போனால் கஷ்டமாச்சே என்று யோசனை ஆயிற்று. வீட்டில் வந்து அம்மா, அண்ணா இவர்களிடம் மெதுவாக இதைப் பற்றி சொன்னேன். வேண்டுமானால் சுவாமி அறையில் ஒரு ஏசு படமும் வைத்து விடலாமா , எதற்கு வீண் வம்பு என்று சொன்னேன். அவர்களானால் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள். அப்புறம்தான் மதமாற்றம் செய்வதுதான் இது போன்ற கும்பலின் வேலை. அதற்காக என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள் என்று விளக்கினார்கள். அடுத்த முறை அந்த பெண் என்னிடம் பேச வந்தபோது "எனக்குத் தெரிந்தவர்கள் எல்லோரும் நரகத்துக்குதான் போகிறார்களாம். அதனால் நானும் அங்கேயே போகலாம் என்றிருக்கிறேன்' என்று சொல்லி அனுப்பி விட்டேன். இந்த மாதிரி மற்றவர்களை நரகத்துக்குப் போகாமல் காப்பாற்றுகிறேன் என்று சொல்லிக்கொண்டு அலைபவர்கள் அநேகம் பேர். நிஜமாகவே சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்வதற்கென்று ஒரு வாகனம் இவர்களிடம் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். இவர்கள் எல்லாம் நம்மை முதலில் ஏறிக்கொள்ள விடுவார்களா என்ன? எல்லோரையும் பின்னாடி தள்ளிவிட்டு தாங்கள் முதலில் ஏறிக்கொள்வார்கள்.<br /><br /><span>முதலில்</span> சொன்னேனே என் பக்கத்துக்கு வீட்டுகாரர் அவரைப் பார்த்தாலே ஓடி ஒளிந்து கொண்டிருந்தேனா? அப்புறம் இந்த மாதிரி அந்த சாமியாரைப் பற்றிய நிஜங்கள் எல்லாம் வெளியே வந்ததும் ஒரு நாள் நானே வலுவில் போய் அவரை நிறுத்திப் பேசினேன். எல்லாம் குறும்புதான் வேறென்ன?<br />'என்ன இப்படி எல்லாம் செய்தி வெளி வருகிறதே?' என்று கேட்டேன்.<br />உடனே அவர் 'இல்லை அவருடைய மகிமையைக் கண்டு பொறாமை கொண்டுள்ள சிலர் கிளப்பி விட்டிருக்கும் புரளி இதெல்லாம். அவருடைய சக்தியால் இதையெல்லாம் முறியடித்து விடுவார் பாருங்கள்' என்றார்.<br />தினமும் அவருடைய காரில் இந்த சாமியாரின் பெருமை பாடும் பஜனைகளை அலற விட்டுக் கொண்டுதான் காரைக் கழுவுவார். பிறகு தன கார் கண்ணாடியில் அவருடைய படம் ஒன்றை எல்லோருக்கும் தெரியும்படியாக வைத்துக் கொண்டு இந்தப் பாடல்களைப் போட்டுக் கொண்டு ஓட்டலுக்குச் சென்று காலை உணவருந்தி வருவார். இந்த <span>வீடியோ</span> <span>எல்லாம்</span> நிஜம் என்று போலீஸ் <span>தரப்பில்</span> <span>நிரூபித்த</span> பின்பும் இவர் அவரை மகான் பதவியிலிருந்து விலக்குவதாக் இல்லை.<br /><span>அந்த</span> சாமியாரே <span>தான்</span> <span>மகான்</span> <span>இல்லை</span> <span>என்று</span> <span>சத்தியம்</span> <span>செய்தாலும்</span> <span>இவர்</span> <span>ஒப்புக்</span> <span>கொள்ள</span> <span>மாட்டார்</span> <span>போலிருக்கிறது</span>.<br /><br />இதுதான் சிலருடைய பிரச்சினை. அல்லது இது ஒரு விதமான மனோரீதியான கோளாறாகவும் இருக்கலாமோ என்னமோ. ஒரு விஷயத்தில் நம்பிக்கை வைத்து விட்டு அது தப்பு என்று தெளிவாக நிரூபணம் ஆன பின்பும் அதை விட்டு வெளிவர முடியாமல் இருப்பது. <span>சிலருக்கு</span> வாழ்வில் பிடிப்பு இது போன்ற ஏதேனும் ஒரு நம்பிக்கையின் மூலம்தான் கிடைக்கிறது போலிருக்கிறது. அதனால்தான் காவி உடை தரித்தவர்களுக்கு இத்தனை செல்வாக்கோ? ஒரு சிநேகிதி சொல்கிறாள்: 'நமக்கு சரியான மார்க்கத்தைக் காட்டுவதற்கு ஒரு குரு தேவை. நாம் அதற்குத் தயாராக இருக்கும் போது நம்முடைய சரியான குரு நம் முன் தோன்றுவார்' என்று.<br />எனக்கென்னவோ இதில் எல்லாம் நம்பிக்கை வரவில்லை. கடவுளுக்கும் நமக்கும் நடுவே இது போன்ற புரோக்கர், ஏஜென்ட் எல்லாம் தேவையா என்ன?Ushahttp://www.blogger.com/profile/00179239922869639391noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-3672689495290709037.post-25923665810162211892010-06-15T05:13:00.000-07:002010-06-15T20:25:56.660-07:00வடிவுசில நாட்களில் நம் கடந்த காலத்திலிருந்து ஒரு சம்பவமோ அல்லது ஒரு நபரைப் பற்றிய நினைவோ திரும்பத் திரும்ப மனக்கண்ணில் வந்து போகும். சில சமயம் அதற்கான காரணம் நமக்குத் தெரியும் - ஒரு பாடலின் வரிகளோ அல்லது அவர்களின் பெயரைக் கேட்பதோ இதற்கான தூண்டுதலாக இருக்கும். சில சமயம் காரணமே தெரியாமல் இந்த flash backs மனதில் வந்து போகும். அது போலத்தான் இன்று காலையிலிருந்து எனக்கு வடிவைப் பற்றிய ஞாபகம்.<br /><br />எனக்கு ஏழு அல்லது எட்டு வயது இருக்கும்போது என்னுடைய அப்பா சொந்த வீடு வாங்கினார். நான் கல்யாணம் ஆகி செல்லும் வரை அந்த வீடுதான் என்னுடைய வாழ்கையின் background setting. இதற்கு முன்பு நாங்கள் வாடகைக்கு இருந்த வீடு கொஞ்சம் பக்கமாகவே இருந்ததினால் முதல் சில நாட்கள் பழைய நண்பர்களுடன் விளையாட அங்கேயே போய் விடுவேன். அடுத்த சில நாட்களில் புது வீட்டுக்குப் பக்கத்திலும் நண்பர்கள் பழக்கமானார்கள். இங்கே எனக்கு முதலாக பரிச்சயம் ஆனது வடிவுதான். வடிவு என்னை விட ஓரிரண்டு வயது பெரியவள் ஆனாலும் பார்ப்பதற்கு என்னை விட சின்னவள்போல் இருக்கும். அவர்களுக்கு எங்கள் தெருவிலேயே ரெண்டு பெரிய வீடுகள் உண்டு. ஒன்று எங்களுக்கு நேர் எதிர் வீடு. இன்னொன்று அதிலிருந்து ரெண்டாவது வீடு. இதில்தான் அவர்கள் இருந்தார்கள். எங்கள் வீட்டுக்கு எதிர் வீடு காலி ஆக இருந்தது. அதில் ஓரு பெரிய தோட்டம். வீடும் பெரிது. அதனால் இதுதான் எங்களது விளையாட்டு மைதானம். எங்கள் தெருவிலேயே பள்ளிக்கு போகும் வயதில் பத்து அல்லது பதினைந்து பேர் இருந்தோம். அடுத்த தெருவில் இருந்தும் சிலர் கிரிக்கெட் ஆடுவதற்கு வருவார்கள்.<br /><br />ஓரு நாள் என் வீட்டு வாசலில் கதவைப் பிடித்துக்கொண்டு அவர்கள் விளையாடுவதைப் பார்த்துக்கொண்டிருந்த போதுதான் அந்தப் பெண்ணை கவனித்தேன். என் வயதுதான் இருக்கும், எந்த விளையாட்டிலும் சேர்ந்து கொள்ளாமல் அவர்கள் வீட்டுச் சுவரின் உட்புறமாக இருந்த திண்ணை மேல் நடந்து கொண்டு அவளும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். கொஞ்ச நேரம் இந்த நாடகம் நடந்த பின் அங்கிருந்தே "உன் பெயர் என்ன?' என்றாள். இதற்குத்தானே நானும் காத்துக்கொண்டிருந்தேன் . அடுத்த ரெண்டாவது நிமிடம் நானும் அவளோடு அந்த திண்ணை மேல். அவள்தான் வடிவு. இந்த பெயரே எனக்குப் புதிதாக இருந்தது. இது வரை இது போன்ற பெயரையே நான் கேட்டதில்லை. அவள் Holy angels' convent இல் ஐந்தாவது படிக்கிறாள் என்றும் தெரிந்து கொண்டேன். என்னை விட பெரியவள் ஆனாலும் என்னை விட ஒல்லியாக இருந்தாள் . மற்றவர்களுடன் விளையாடலாமா என்றேன். 'இல்லை எனக்கு ஓடினால் மயக்கம் வரும். மூச்சு வாங்கும். அதனால் நான் இந்த விளையாட்டெல்லாம் விளையாட மாட்டேன்' என்றாள். எனக்குப் புரியவே இல்லை. நானோ மரம் ஏறுவது, சுவர் ஏறி குதிப்பது, பம்பரம் ஆடுவது என்று எல்லாம் ஆடுவேன். ஏன் இவள் இப்படி சொல்கிறாள் என்று அம்மாவிடம் வந்து கேட்டேன். அம்மா சொன்னாள்: பெண் பிள்ளைகள் பொதுவாக இது போன்ற விளையாட்டிலெல்லாம் சேர்ந்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் வீட்டில் அது போல வளர்க்கிறார்கள் போல என்று. அத்தோடு நிறுத்தாமல் என்னையும் திட்டினாள்: 'நீதான் இப்படி ஆண் பிள்ளைகளுக்கு சமமாக குதிக்கிறாய்' என்று.<br />அடுத்த சில நாட்களில் அவளை தினமும் பார்ப்பது வழக்கமானது. சில சமயம் நான் மற்றவர்களுடன் ஆடப் போய் விடுவேன். இவள் திண்ணையில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பாள். சில சமயம் இவளுடன் உட்கார்ந்து கொண்டு அரட்டை அடிப்பேன். வடிவுக்கு மூன்று அக்காமார் ஒரு அண்ணன். அக்கா எல்லாம் வீட்டுக்கு வெளியே கூட வர மாட்டார்கள். காலேஜ் போகும்போதும் குனிந்த தலை நிமிராமல் போய் வருவார்கள். இடுப்பு வரை ரவிக்கை, சேலையின் ஒற்றைத் தலைப்பை சுற்றி இடுப்பில் சொருகி இருப்பார்கள். கையும் பாதமும் மாத்திரம்தான் தெரியும். அவ்வளவு அடக்கம். ஏன் வடிவு விளையாடுவதில்லை என்றபோது அம்மா சொன்னது சரிதான் என்று நினைத்துக் கொள்வேன். அவளுடைய அம்மா முகம் முழுதும் மஞ்சள் பூசி இருப்பார்கள். காலையில் வெகு நேரம் பூஜை அறையில் இருப்பார்கள். அண்ணன் பழனி வடிவை விட ரெண்டு வயது பெரியவன். எங்களுடன் விளையாட வருவான். அவனுடைய பெற்றோர் கூட அவனை "தம்பி' என்றுதான் கூப்பிடுவார்கள். அவளுடைய அப்பா என்னிடம் மிகப் பிரியமாகப் பேசுவார்.<br /><br />சில மாதங்களிலேயே அவளை என்னுடைய Best friend என்னும் அளவுக்கு நெருங்கிப் பழகி விட்டோம். யாரையும் பற்றிக் குற்றம் சொல்ல மாட்டாள். யாருடனும் சண்டை போட மாட்டாள். யாரும் அவளை எதுவும் சொல்ல மாட்டார்கள். இதற்கு முன்னாள் இருந்த தெருவில் கான்வென்ட் ஸ்கூல் போகும் பெண்களிடம் ஒரு superior attitude இருப்பதாகத் தோன்றும். இங்கிலீஷ் பேசத் தெரியாதவர்களைப் பற்றி ஒரு மட்டமான நினைப்பு. தாங்கள் என்னமோ ஓட்டைக் கப்பலில் இங்கிலாந்தில் இருந்து இங்கே வந்தவர்கள் போல. அனால் வடிவிடம் அதெல்லாம் ஒன்றுமே கிடையாது. மொத்தத்தில் ரொம்ப செல்லமான பெண்.<br /><br />ஒரு ஆறு மாதம் ஆனா பின் அவளைப் பார்ப்பது அரிதானது. எப்போவாவதுதான் விளையாட வருவாள். எதிர் வீட்டையும் அவர்கள் ஓரு government ஆபீசுக்கு வாடகைக்குக் கொடுத்து விட்டார்கள். அவள் வீட்டுக்குப் போனால் 'அவளுக்கு உடம்பு சுகம் இல்லை. நாளைக்கு விளையாடலாம்' என்று அவளுடைய அக்கா அல்லது அப்பா சொல்லி விடுவார்கள். இப்படி சில நாட்கள் போன பின் ஒரு நாள் காலை வடிவு இறந்து போய் விட்டாள் என்று சொன்னார்கள். எனக்குப் புரியவே இல்லை. இது எப்படி சாத்தியம். வயதான்வர்கள்தானே இறந்து போவார்கள். அந்த வயதில் எனக்குத் தெரிந்து சிறியவர்கள் யாருமே இறந்து போனதில்லை. அவள் எப்படி இறந்து போனாள் என்று அம்மாவிடம் கேட்டேன் . 'ஏதானும் வியாதியாக இருக்கும்" என்றாள். எனக்கு வியாதி என்றால் என்ன அதனால் ஏன் இறந்து போக வேண்டும் என்றும் புரியவில்லை. மேலே கேட்டால் திட்டுவாளோ என்று பயம்.<br /><br />சில சாயங்கால வேளைகளில் வடிவை பார்க்க வேண்டும் என்று தோன்றும். இனிமேல் பார்க்கவே முடியாது என்று நினைக்கும் போது அழுகையாக வரும். சாதல் என்பதைப் பற்றி நான் முதலில் தெரிந்து கொண்டது வடிவின் இறப்பிலிருந்துதான். அதனாலா இல்லை வடிவின் நல்ல குணங்கள் காரணமா தெரியவில்லை - அவளை நான் மறக்கவே இல்லை. இன்றும் கண்ணை மூடினால் ஒல்லியான அந்தச் சின்னப்பெண் என் கண் முன்னே தெரிகிறாள். வெகு நாட்கள் வரை வடிவு என்றால் ஒரு சோகமான உணர்வுதான் வரும். சில வருடங்கள் முன்னால் இலங்கை சென்ற போதுதான் தெரிந்து கொண்டேன் வடிவு என்றால் அழகு என்று அர்த்தம் என்று.Ushahttp://www.blogger.com/profile/00179239922869639391noreply@blogger.com2