Monday, August 30, 2010

கதை அல்ல நிஜம்

வடிவுக்கரசி என்ற தமிழ் நடிகை ஒரு பேட்டியில் சொன்னார்கள் அவர்களுக்கு செடிகள் வளர்ப்பதில் விருப்பம் உண்டாம். அவர்களுடைய் பால்கனியிலேயே நாலைந்து தொட்டிகளில் பூச்செடிகள் வளர்க்கிறார்களாம். இதென்ன பெரிய செய்தி என்கிறீர்களா? இருங்கள். அவர்கள் அடுத்து சொன்ன விஷயம்தான் சுவாரசியமாக இருந்தது - அதாவது இந்த செடிகளுடன் பேசுவாராம். ''ஓஹோ அந்த மாதிரி கேசா' என்று நினைக்காதீர்கள். அந்த செடிகளும் இதற்கு respond செய்யுமாம். ஒரு முறை அவர்கள் இருக்கும் கட்டிடத்தில் செடிகள் வளர்ப்பதற்கு ஏதோ எதிர்ப்பு தெரிவித்தார்களாம். ( நாட்டிலே எதைத்தான் எதிர்ப்பது என்றுதான் வரைமுறையே இல்லாமல் இருக்கிறதே நிலைமை!) சரி என்று இவரும் அந்த செடிகளிடம் சொல்லிக் கொண்டிருந்தாராம்: 'இங்கே செடிகள் வைத்துக்கொள்ளக்கூடாதாம். உங்களை எல்லாம் கொண்டு கீழே எங்கேயாவது வைக்கலாமா என்று இருக்கிறேன்" என்று. அடுத்த சில நாட்களுக்கு ஒரு செடியிலும் பூவே பூக்கவில்லையாம். அப்புறம் இந்த எதிர்ப்பெல்லாம் கொஞ்சம் அடங்கியதும் செடிகளிடம் 'சரி இப்படி எதனை நாள்தான் பூக்காமலேயே இருப்பீங்க. என்னாலே வெளிலே போயெல்லாம் பூ வாங்க முடியாது. கொஞ்சம் பூக்கற வழியைப் பாருங்க" என்றாராம் . மறுபடியும் பூத்ததாம்.

செடிகளிடம் பேசுவது பாடுவது போன்ற வழிகளால் அவற்றை சிறப்பாக வளர்க்க முடியும் என்று பலரும் சொல்லிக் கேட்டிருக்கிறேன். இங்கே பெங்களூரில் லால்பாகில் இருக்கும் nursery யில் இதமான இசையை எப்போதும் போட்டு வைக்கிறார்கள். இதற்காகத்தான் என நினைக்கிறேன்.
நமது முன்னோர்களும் செடிகொடிகளுடன் இது போன்ற அன்பு, மரியாதையுடன் இருந்திருக்கிறார்கள் என்று என்னுடைய ஆசிரியை ஒருவர் சொல்வார். நாம் துளசிச் செடியிலிருந்து இலைகளைப் பறிக்கும் போதோ அல்லது பூஜைக்காக செடிகளிடம் பூக்கள் பறிக்கும்போதோ முதலில் அவற்றின் அனுமதி கேட்டுப் பின்னால்தான் பறிக்க வேண்டும். அப்படியே போய் பூவைக் கொய்வதோ கிளையை வெட்டுவதோ இயற்கையை அவமதிக்கும் செயல் என்பார்.
இவற்றை எல்லாம் பின்பற்றி இருந்தால் இன்று இப்படி ecological imbalance எல்லாம் வந்திருக்காது.

இன்றும் கிராமப்புறங்களில் இது போன்ற நம்பிக்கைகள், பழக்கங்கள் இருக்கின்றன. என்னுடைய வீட்டில் வேலை செய்யும் பெண்மணி சில நாட்களில் செடிகளை வெட்டக்கூடாது என்பதில் மிகவும் கண்டிப்பாக இருப்பாள். ஒருமுறை புல்வெளியின் நடுவே மிளகாய்ச் செடி வளர்ந்திருக்கிறதே அதை வெட்டி அந்த பக்கம் வைக்கலாமே என்றேன். அதற்கு ' ஏன் வேண்டுமானால் அதை சுற்றிக் கொண்டு நீங்கள் நடக்கலாமே. அதுபாவம் இருந்து விட்டுப் போகிறது' என்று சொல்லிவிட்டு அதை அங்கேயே பாதுகாப்பாக வளர்த்தாள். கொஞ்சம் ஹிட்லர் மாதிரித் தோன்றினாலும் அவள் சொன்னதில் அர்த்தம் இருக்கிறது என்று நானும் விட்டு விட்டேன். அந்தச் செடியும் மிக நன்றி உணர்வோடு அளவுக்கு அதிகமாகவே மிளகாய் கொடுத்தது.
இதுபோல எங்கள் தோட்டத்தில் ஒரு பலாமரம் வளர்ந்திருந்தது. நானும் அது காய்க்கும் காய்க்கும் என்று ஆறு வருஷம் ஆசையாகப் பார்த்துக் கொண்டே இருந்தேன். அது பெரிதாக வளர்ந்து கொண்டே போயிற்று ஆனால காய்ப்பதாக இல்லை. பக்கத்தில் இருந்த எலுமிச்சைச்செடி முருங்கை, கறிவேப்பிலை எல்லாம் வேறே இதன் நிழலில் காய்ந்து போய்க் கொண்டிருந்தன. சரி பலாமரத்தை வெட்டிவிடலாம் என்று தோட்டக்காரரிடம் சொன்னேன். அவர் 'பொறுங்கள் அம்மா காய்க்கும். ஒரு ஆணி கொடுங்கள்' என்று சொல்லி அதன் மேல் ஒரு ஆணியை அடித்தார். இனிமேல் காய்க்கும் பாருங்கள் என்று வேறே சொன்னார். வீட்டு வேலை செய்யும் அம்மா இதை எல்லாம் பார்த்துக் கொண்டே இருந்தவள் அந்த மரத்திடம் போய் பேச ஆரம்பித்தாள் : ' உன்னை அம்மா எதற்கு பாடுபட்டு வளர்கிறார்கள். உனக்கு கொஞ்சமும் நன்றியே இல்லையே. இவ்வளவு பெரிதாய் வளர்ந்திருக்கிறாய். ஆனால் ஒரு பிஞ்சு கூட இல்லை. வெக்கமாக இல்லையா. இரு இப்படியே நீ இருந்தால் உன்னை வெட்டிதான் போட வேண்டும்" என்றெல்லாம் மரத்திடம்! எனக்கு சிரிப்பு தாங்கவில்லை. மூன்று மாதம் ஆன பின்னால் ஒரு நாள் என்னைக் கூப்பிட்டாள். போய் பார்த்தால் மரத்தில் 8 காய்கள். "பாத்தீங்களாம்மா, அன்னிக்கு என்னமோ சிரிச்சீங்களே. இப்போ பாருங்க. சுரணை வந்திருச்சு. எப்படி காய்ச்சு தொங்குது பாருங்க. நாம் பேசினா அதுக்கு புரியும்' என்றாள்.

எதை நம்புவது, நம்பாமல் இருப்பது எனக்கு ஒன்றும் புரியவில்லை. பலாப்பழங்கள் இனிப்பாக இருந்தன. அது மாத்திரம்தான் புரிந்தது. 'அம்மா தாயே அடுத்த வருஷமும் இது போல பழம் கொடு' என்று ஒரு application போட்டு வைத்திருக்கிறேன். அப்புறம் தோட்டப் பக்கம் போகும்போது ஏதும் எக்குத்தப்பாக பேசுவதில்லை. எதற்கு வம்பு?

6 comments:

  1. Its true that plants respond to human interaction/stimulus. Good to keep them happy - our breath depends on it !

    ReplyDelete
  2. That's interesting!! :)

    Aargee

    ReplyDelete
  3. wow! I can see my comments here now...that's great!! Like the plants and trees your blog too responded to me :)

    - aargee

    ReplyDelete
  4. I still remember a chembaruthi plant in our house which kept on growing, but not yielding a single flower.

    after waiting for long time, my aunt insisited to cut it off. my grandma was denying it for many times.

    one day i saw my aunt becoming wild, she started abusing the plant... slowly her anger was seen shifting to my grandma for having the plant.

    my grandma was cooler, she slowly came towards my aunt, lifted her tender hand and walked slowly with her towards the plant.

    she showed her a birds nest in it.... she pointed it telling her that the tree has lived meaningfully and served a purpose.

    i saw tears rolling out of my aunts eyes...

    i did not understand it at that younger age.

    gods creation has reasons and meaning for everything.

    may be the insulting anon had been created by god purposefully ... who knows !!!!

    ReplyDelete
  5. BoC aka PV: nanum ippodehllam indha chedinga kite vambu vechukaradillai. Idea advt madiri palaarnu oru arai vitta kashtam illaya!

    argee; YAY!

    Karuna: what a sweet lesson! True, everything in creation has a purpose. Sometimes to make us feel good sometimes to make us feel grounded sometimes to build our character.
    The problem with us humans is that we see everything from the perspective of how useful it is to us and many times we end up destroying things because their raison d'etre is not evident to us.
    Apram global warming, eco imbalance, greenhouse effect apdeenu vayilayum vayathilayum adichundu enna prayojanam?

    ReplyDelete
  6. அதுதானா விஷயம். நாளைக்கு ஒரு பெரிய கச்சேரியே பண்ணிடறேன் எங்க வீட்டு செடிங்களுக்கு. ஆனா என்னோட சொந்த கத சோகக் கதைய கேட்டுட்டு இன்னும் சீக்ரமாவே பட்டு போய்டுமோன்னு பயமா இருக்கு!!!

    ReplyDelete