Monday, June 14, 2010

Iyer கல்யாணம் and இலை சாப்பாடு

இன்னிக்கு ஐயர் பிள்ளையின் திருமணம். 'ஐயர்' என்றதும் புரோஹிதர் என்று எண்ணி விடவேண்டாம். மாப்பிள்ளை பையனுடைய தந்தையின் பெயரே ஐயர்தான். பாலக்காட்டிலிருந்து மும்பையில் செட்டில் ஆன குடும்பங்கள்லே இது சகஜமான குடும்பப்பெயர். இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பெயராக இருந்தாலும் தமிழ்நாட்டில் இந்த சமூகத்தை சார்ந்தவர்கள் இதை அவர்களுடைய குடும்பப்பெயர் போல சொல்வதில்லை. சென்னையில் 'ஐயர் வூட்டு பொண்ணு' அப்டீன்னு சொன்னால் அது பொதுவாக பிராமணர் வீட்டு பெண்ணை குறிக்கும்- ஐயங்கார் பெண்களையும் சேர்த்து. தமிழ் வலைப்பதிவை படிப்பவர்களுக்கு இதெல்லாம் சொல்லணுமா என்று நீங்கள் கேட்கலாம். சில சமயம் இன்றைய தமிழ் படங்களில் பிராமணர் பாஷை மற்றும் பழக்க வழக்கங்களை சித்தரிப்பதை பார்த்தால் சொல்ல வேண்டும் என்றுதான் தோன்றுகிறது.
சரி இதைப்பத்தி இன்னொரு நாள் பேசுவோம். இப்போ சொல்ல வந்த விஷயத்துக்குப்போவோம்.

ஐயர் பிள்ளை இன்டர்நெட் மூலம் ஒரிய பெண்ணுடன் நட்பாகி பிறகு இருவரும் கல்யாணம் செய்து கொள்ள தீர்மானிக்க, அந்த கல்யாணத்துக்குதான் இன்று காலை நாங்கள் போய் இருந்தோம். Chetan Bhagat எழுதி இருக்கும் 'Two states ' புத்தகத்தில் வருவது போன்ற நறநரப்புகள் எதுவும் இருந்ததா என்று கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு இரு குடும்பத்தினரும் காணப்பட்டனர். இத்தனைக்கும் கல்யாணம் முழுக்க முழுக்க தமிழ் பிராமணர் முறைப்படிதான் நடந்து கொண்டிருந்தது. சுத்தமாக புரியா விட்டாலும் பெண் வீட்டை சேர்ந்தவர்கள் பூரணமாக ஒத்துழைத்துக்கொண்டிருந்தார்கள். பாவம் கல்யாண பெண்ணே கொஞ்சம் திருவிழாவில் தொலைந்து போன குழந்தை மாதிரிதான் உட்கார்ந்திருந்தது. நல்ல வேளை அதற்கு ஒன்பது கஜம் புடவையை சுற்றி விட்டு கஷ்டப்படுத்தவில்லை. பிள்ளையின் அம்மா - அதான் மிசெஸ் ஐயர் - மாத்திரம் மடிசாரில் இருந்தாள்.

முஹுர்த்தம் ஒன்பதுலேர்ந்து பத்தரை. இந்த மாதிரி முஹுர்த்த நேரத்தில் ஒரு கஷ்டம் என்ன என்றால் சாப்பாட்டுக்கு ரெண்டும கட்டானான வேளை. ஒன்பது மணிக்குள் போய் டிபன் சாப்பிட்டு விட்டு முஹுர்த்தம் முடிந்து கிளம்பலாம் என்றால் சாப்பிட்டு விட்டுதான் போக வேண்டும் என்ற அன்புத் துன்புறுத்தல். சாப்பிட்ட டிபனே இன்னும் ஜீரணம் ஆயிருக்காது. திரும்ப சாப்பிட வேண்டும் என்றால் குறைந்தது ரெண்டு மணி நேரமாவது காத்திருக்க வேண்டும். இல்லை முஹுர்த்த நேரத்துக்குப் போய் விட்டு சாப்பிட்டு வரலாம் என்றால் பத்தரைக்கெல்லாம் சாப்பாடு தயாராக இருக்காது. அதற்காக பனிரெண்டு மணி வரை உட்கார்ந்திருக்க வேண்டும். சாப்பிடாமல் வந்தாலும் மரியாதைக் குறைவாக இருக்கும்.

பத்து மணிக்கு போய் மங்களாட்சதை போட்டு விட்டு உட்கார்ந்திருந்தோம் வந்திருந்தவர்கள் உடுத்தி இருந்த பட்டு புடவைகளைப் பார்த்துக்கொண்டு. பதினொன்றரை மணிக்கு பிள்ளை வீட்டை சேர்ந்த மனிதர் வந்து சொன்னார் 'சாப்பாட்டு இலை போட்டாயிற்று' என்று. சரி என்று போய் பந்தியில் உட்கார்ந்தோம். அவியல் பால் பாயசம் மெனுதான் என்று கண்டிப்பாகத் தெரியும் - பாலக்காட்டு கல்யாணம் ஆச்சே. பொண்ணு வேண்டுமென்றால் வேறு ஊரிலிருந்து எடுப்போம் ஆனால் சாப்பாட்டு விஷயம் மட்டும் No compromises.
( பாம்பின் கால் பாம்பறியும் மாதிரி ஐயரின் நாக்கு ஐயர் அறியும்!)

இந்த இலை சாப்பாடை காண்ட்ராக்டில் விட்டுவிட்டாலே சொதப்பல்தான். இல்லை சாப்பாடு என்பது நிதானமாக குடும்பத்தினர் சேர்ந்து உட்கார்ந்து வேண்டுமானவற்றை கேட்டு விசாரித்து பரிமாறி ருசித்து சாப்பிடும் விஷயம். இதை standardize செய்வது கொஞ்சம் கொஞ்சம் கஷ்டமான விஷயம். சிலர் இலையில் முதலில் பரிமாறிய ஒரு ஸ்பூன் பொரியலே குப்பைக்கு போகும். சிலர் ஒரே வாயிலே அதைக் காலி செய்துவிட்டு தொட்டுக்க ஒன்றும் இல்லை என்று உட்கார்ந்திருப்பார்கள். இதற்காகத்தான் முதலில் மெனுவில் இருக்கும் எல்லா பதார்த்தங்களையும் எல்லாம் ஒரு சாம்பிள் மாதிரி பரிமாறிவிட்டு பிறகு சாம்பார் சாதம் சாப்பிட ஆரம்பிச்சதும் இன்னொரு தரம் கேட்டுக்கொண்டு வருவார்கள். அப்பொழுது யாருக்கு எது பிடிக்குமோ அதைக் போட்டுக்கொள்ளலாம். காண்ட்ராக்டில் கொடுக்கும்போது அவர்கள் கறி கூட்டு இவற்றை எல்லாம் இரண்டாவது முறை கேட்பதே இல்லை. முதலில் போட சாம்பிள் ஒரு ஸ்பூனுடன் நிறுத்திவிடுகிறார்கள். எகாநோமி மேஷெர் மாதிரி. ரெண்டாவது அவர்கள் நாம் சாப்பிட நேரமே கொடுப்பதில்லை. கறி எல்லாம் பரிமாறி, சாதம் போட்டு, சாம்பார் ஊற்றிய உடனேயே , ரசத்துக்கு சாதம் வேண்டுமா என்று கேட்டுக்கொண்டு இன்னொருவன். கூடவே ஒருவன் ரச வாளியுடன். . இதுபோல் அவர்கள் அவசரத்துக்கு நாம் அள்ளிப் போட்டுக்கொள்ள வேண்டி இருக்கிறது. 'ஆச்சா ஆச்சா' என்று ரேஸ் மாதிரி. இந்த பதற்றத்துக்கு நடுவே ரசம் ஓடி வந்து பட்டுப் புடவையில் பட்டுவிடுமோ என்று வேறே டென்ஷன். இந்தக் கூத்திலே இலை அப்பளம் எல்லாம் பறக்கக் கூடாது என்று முனஜக்ராதையாக பேனை வேறே அணைத்து விடுவார்கள். நல்ல summer லே சுட சுட சாப்பாடு , கச கசன்னு பட்டுப் புடவை and no fan. இதை விட கொடுமை என்ன இருக்க முடியும்! அதுவும் பத்திரிகை வெச்சுக் கூப்பிட்டு செய்யும் கொடுமை!
இந்த கல்யாணத்தில் பரவா இல்லை - இரண்டாவது தரம் சைடு டிஷ் எல்லாம் கேட்டுப் பரிமாறினார்கள். ஆனால் மற்ற எல்லா விஷயங்களிலும் guilty as charged above. இந்த இரண்டாம் தரம் கேட்பதும் பின்னாடி வந்த பந்திகளில் கேட்க வேண்டும். . நாங்கள்தான் முதல் பந்திக்கே ஆஜர் ஆச்சே. so stock பற்றிய கவலை இருந்திருக்காது.

இவ்வளவு வியாக்கியானம் இப்போது பண்ணினாலும் - அவியல், ஓலன், எரிசேரி, பால் பாயசம் என்று ஒரு கை பார்த்துவிட்டுதான் வந்தேன். எங்களுக்கு எதிர் வரிசையில் ஒரு பஞ்சாபி மாமியும் மாமாவும் பார்க்கவே பாவமாக இருந்தது. முதலில் இலையில் பரிமாரியதையே சாப்பிடுவதற்கு திண்டாடிக் கொண்டிருந்தார்கள். அதற்கு நடுவே இந்த servers வேறே - ரைஸ் for ரசம்? மோர் ரைஸ்? ? அவியல்? பாயசம்? என்று ஒரே பிடுங்கல். அவியல், பால் பாயசம் என்றால் என்னவென்று அவர்களுக்கு கையேடு போட்டுக் கொடுக்க வேண்டும் போலிருந்தது. இந்த வடக்கத்தியர் பலரும் ' we like south Indian food' என்பார்கள் ஆனால் அவர்களுக்குத் தெரிந்த south Indian food இட்லியும் தோசாவும் தான் . கொண்டு வந்ததை எல்லாம் 'வேண்டாம் வேண்டாம்' என்று மறுத்து விட்டு குருவி போல இலையை கொத்திக்கொண்டிருந்தார்கள். சுற்றும் முற்றும் நாங்கள் எல்லோரும் இலைக்கும் வாய்க்கும் போட்டி போட்டுக் கொண்டிருந்ததை பார்த்து அசந்து போய் விட்டார்கள். பாவம் வீட்டிலே போயி இரண்டோ மூணோ பராத்தா பண்ணி சாபிடுவார்களாக இருக்கும்.

எனக்கு ஒரிசா சம்மந்திகளை நினைத்தால்தான் பாவமாக இருந்தது. அவர்கள் எங்கே போய் சாப்பிடுவது? ஒருக்கால் இங்கே கொறித்து விட்டு ஒரிசாவில் ரிசெப்ஷேனின் போது பதில் கொடுப்பார்களோ என்னமோ - ஈசாப் கதையில் வரும் கொக்கை போல.

7 comments:

  1. Muhurtha saapadunnale.. veyarvayum pattu pudavai kasakasappum thaan nyabagam varum. So ippo ellam muhurtha saapadu saapdanumnu aasa vandha nera GN Chetty road la irukkara Arusuvai arasu restt.. ku poidanum.. pazhaya salwar la kaathottama nimmadhiya muhurtha saapatta anubavikkalaam.. with all aviyal poriyal sweet ice creamnu.. kalyana moi ya vida kammi thaan standard aa 120 rupees bill..

    ReplyDelete
  2. amaam chennaile irundha arusuvai arasukko illai margazhi masam narada gaana sabhakko pogalam. Engalai madiri bengalore vaasigalukellam ipdi kalyanathule poi moi ezhudhinadaan elai saappadu!
    Varugai thandhamaikku nanri. Meendum varuga.

    ReplyDelete
  3. You have expressed the difficulty faced by attendees of Odd-Muhurtham time weddings very, very well

    Though the same issue holds in North Indian weddings as well. There is typically a heavy "Nashta" as soon as the Baraat arrives and regular dinner is served about an hour afterwards - So much to eat, so little time

    ReplyDelete
  4. Pakistan le kalyana sappadukku kooda rules irukkame. Adhu poley ingeyum oru velai saappadudaan podanumnu rule kondu varanum. 2 nalaikulle ethanai velai saapadu. Ethanai wastage!

    ReplyDelete
  5. Ethukkuthan receptionukku poratha ellai muhurthathukku porathnnu mothalle mudivu pannanum. 2. Pona breakfasta lunchannu decide pannanum. Ethu rendun ellainna previousdy receptionukku ponam. Dining hale oru survey pannanum. cooking contractor yarunnu secreta kandupidikkanum. Appadiye onnum pidikkalainna dining halle chthi pathuttu kai alambittu KAIYE THODACHUNDU velile varanum. Thambulam tharuva. neenga onga athukku poi morumcha ( curd rice) chappittukkanam nammadava including myself maramattom. Mappilaiyathukkara vendam chonnalum "Namakku erukkara ore ponnukku naana cheyyavendamo"Maramattom Rasam odum

    ReplyDelete
  6. Neeveer Senthamizh manattai otti ezhuthierukkum katturai miga sirappaga ullathu. Ungal thamizh pulamaye vazhtugirom Vazga Thamizh, Vazhga Thamuzh Anthanrgal. Engum Thamizh. Ethilum Thamizh.Vazhga Manamakkal

    ReplyDelete
  7. Chetan: Hahha. adeppadi chapdame kaiye thodachundu varuvel?
    apram paalpayasam aviyal sadyannakka epdi chapdame varadu?
    Vaazhga Tamizh. Matha postellam padikaliya?

    ReplyDelete