Sunday, February 6, 2011

இந்திய ரயில் பயணிகளின் கவனத்துக்கு

என்னிடம் இந்திய ரெயில்வேசுக்கு ஏதோ பிணக்கு என நினைக்கிறேன். முன்னமேயே எனது சில கசப்பான அனுபவங்களைப் பற்றி இங்கு எழுதி இருக்கிறேன். ஒரொரு முறை பயணிக்க வேண்டிய நிர்ப்பந்த்தம் வருகையிலும் எனக்கும் கணவருக்கும் இதைப் பற்றி ஒரு வாக்குவாதம் நடக்கும்.
வை: விமானத்தில் தொந்தரவு இல்லாமல் போகலாம்.
நான்: ட்ரெயினில் ஏ.சி கோச்சில் போனாலும் தொந்தரவு இல்லாமல் போகலாம். விமானம் என்றால் பயண நேரத்துக்கு 4 மணி நேரம் முன்னால் புறப்பட வேண்டி இருக்கிறது ஒரு மணீநேர பிரயாணத்துக்கு . இங்கே இரவு ரயிலில் ஏறிப்படுத்துவிட்டால் ஊர். டிக்கெட் செலவும் பத்தில் ஒரு பங்குதான்.
வை: தூக்கம் சரியாய் இருக்காது. பாத்ரூம் நன்றாய் இருக்காது. யாரானும் தவறாய் நடப்பார்கள். பெட்டி திருடு போகும். விமானத்தில் அதெல்லாம் இருக்காதே.
நான்: ஏன் உங்கள் வாயில் நல்ல வார்த்தையே வராதா. ட்ரெயினில் போகும் எல்லோருக்கும் இதெல்லாம் ஆகிறதா என்ன? ஏதொ ஒன்றிரண்டு தரம் ஆவதயே நினைத்து பயந்து கொண்டிருந்தால் வெளியே கிளம்புவதே கஷ்டம். விமான சௌகர்யம் எல்லாம் எதற்கெடுத்தாலும் பழகிப்போனால் அப்புறம் கஷ்டம் ஆகிவிடும். கொஞ்சம் உடம்பை வருத்தப் பழக வேண்டும்.
வைத்தியநாதன் ஒப்புக்கொள்ள மாட்டார். நானும் விட்டுக் கொடுக்காமல் கண்களில் நம்பிக்கை நட்சத்திரத்தை வைத்துக் கொண்டு ”நம் ரெயில்வே ஒண்ணும் அத்தனை மோசம் இல்லை’ என சொல்லிக் கொண்டு ட்ரெயினில் போவேன்.

என் நம்பிக்கையைத் தகர்ப்பதே குறிக்கோள் என்பதுபோல ஏதானும் எனக்குத்தான் நடக்கும். ஒரு முறை சென்னையிலிருந்து வரும் இரவு ரயிலில் செகண்ட் க்ளாஸ் கோச்சில் என் பெர்த்தில் யாரோ ஒருவன் படுத்துக்கொண்டு அரக்கோணம் வரையில் இறங்கமாட்டேன் எனப் படுத்தல். அதிலிருந்து ஏ சி கோச்தான். இன்னொருமுறை சைட் பெர்த்தில் இருந்த என் வயதுப் பெண்மணியை ஒரு இளைஞன் தடவிப் பார்க்க, அந்தப் பெண்மணி சொன்னாள் அவன் குறி வைத்தது சிறு வயதான என் மருமகளைத்தான் இருக்கும். தவறுதலாய் அடுத்த பெர்த்தில் இருந்த அவளைத் தொட்டு விட்டான் என்று. தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போச்சு. ஆனாலும் அதற்குப் பிறகு விழித்துக் கொண்டே பயணம் செய்தோம்.

இந்தத்தரம்.

என் சம்மந்தி வீட்டில் அவர்களது முதல் பேத்திக்கு ஆயுஷ்யஹோமம் கோயமுத்தூரில். குழந்தையைப் பார்க்கும் ஆர்வத்தில் சந்தோஷமாய் கிளம்பிப் போனேன். இரண்டு நாளைக்குத் துணிமணிகள். பரிசுப்பொருட்கள். இவ்வளவுதானே. விமானத்தில் அனுமதிக்கும் கைப்பெட்டி அளவில் ஒரு ட்ராலி பேட்டியே போதுமாய் இருந்தது. எனக்குப் பாதையோடு இருக்கும் சைட் பெர்த்தில் மேல் பெர்த். கிழே காலி. யாரும் வரவில்லை என்றால் அங்கே போய் படுத்துவிடலாம் என யோசித்துக் கொண்டிருக்கையில் வேக வேகமாய் ஒரு பெண்மணியும் இளைஞனும் ஏறி வந்தனர். ஆர் ஏ சி என நினைக்கிறென். சீட்டுக்கு கீழே பெட்டியை என் பெட்டிக்குப் பக்கத்தில் வைத்துவிட்டு பிள்ளை கிழே இறங்கும் முன் ட்ரெயினே நகர ஆரம்பித்துவிட்டது. மணி பத்தரை. தூங்கும் முன் அவள் யாரிடமொ போனில் பேசியது கேட்டது:’காலையில் 4 மணிக்கே ஸ்டேஷன் வருமாம். 3 30கு அலாரம் வைத்து என்னை கொஞ்சம் கூப்பிடுகிராயா?’
3 15மணி இருக்கும் . நான் ஒரு முறை கிழே இறங்கிப் போன போது அந்தப் பெண்மணி பெர்த்தில்இருந்தாள். நான் செருப்புத் தேடும்போது கொஞ்சமாய் தலையைத்திருப்பி பார்த்தாள் - ரொம்ப ஜாக்கிரதை, சமர்த்து போலிருக்கிறது என எண்ணிக் கொண்டேன்.
மறுபடி எனக்கு விழிப்பு வந்த போது கிழே காலி - ஐந்து மணி.
ட்ரெயின் அப்புறம் ஆடி அசைந்துஅரை மணி தாமதமாய் கோயமுத்தூர் போயிற்று. அதற்குள் என் உறவினர் 3 முறை போன் போட்டு 'எங்கே இருக்கிறீர்கள்?' என்றெல்லாம் விசாரித்து 'டாக்சி வெளியே காத்திருக்கிறது' என்று சொல்லி இருந்தார். ஒரு வழியாய் ஸ்டேஷன் வந்ததும் இறங்கிப் பெட்டியை எடுத்த போது ‘அட அகிலாவுடைய அமெரிகன் டூரிஸ்டெரையா எடுத்துவந்தேன்’ என யோசித்துக் க்கொண்டெ வெளியே வந்து விட்டேன்.
(நான் எடுத்துப்போன பேட்டி நீல எகொலாக் ஆனால் எனக்கு இப்போதெல்லாம் காலையில் மூளை அவ்வளவு சுறுசுறுப்பாய் இருப்பதில்லை. ஆழ்வார்பேட்டை ஆண்டவர் சொன்ன மாதிரி இந்த எளவு எல்லாம் ஹார்மோன் செய்யும் கலக்கம்தானடா)
ட்ரெயின் தாமதமானதில் டேக்ஸி ட்ரைவெருக்குக் கொஞ்சம் கோபம் போலத்தெரிந்தது. கொஞ்சம் சிடு சிடு வென்றிருந்தார்.

ஏற்கனவே தாமதம்.விசேஷ நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. வேகமாய் போய் குளித்து தயாராக வேண்டுமே. விடு விடு வென்று டேக்ஸியில் ஏறி வீடு வந்தேன். குழந்தையைக் கொஞ்ச ஆசையாய் இருந்தது ஆனால் அது புதிய முகத்தை பார்த்ததும் சிணுங்கியது. 'சரி வாங்கி வந்த பொம்மையை வைத்து நைஸ் செய்யலாம்' என்று பெட்டியைத்திறந்தால் 6 டி ஷர்ட்டு, நைலான் புடவைஒரு ஆலிவ் ஆயில் புட்டி.அட்ரெஸ் எதுவும் இல்லை.
(இங்கே ஒரு BGM - சிவமணியின் ட்ரம்ஸ் அல்லது எம்பாரின் வயலின்உங்கள் விருப்பத்துக்கேற்ப போடுக்கொள்ளுங்கள் )

உடனே எனது சம்மந்தி ஸ்டேஷன் மாஸ்டருக்கு போனில் பேசி விபரம் சொல்ல அவர் ' யாரானும் உங்கள் பெட்டியுடன் வந்தால் கூப்பிடுகிறொம்’ என்று வைத்துவிட்டார். உடனே வா கம்ப்ளைன்ட் எழுதிக்கொடு என்று சொல்லவில்லை. எங்களுக்கும் என்ன செய்யவேண்டும் என்று தெரியவில்லை.

சரி அடுத்தது நடபப்தைப் பார்ப்போம் என்று குளித்து, அகிலாவுடைய ரவிக்கை, புடவை எதோ அங்கு இருந்ததைசுற்றிக்கொண்டு மண்டபத்துக்குப் போயாச்சு. . அதற்குள் விஷயம் பரவி எல்லோரும் ஒருவர் ஒருவராய்
அடடா எப்படி ஆச்சு.? do you think it was deliberate or was it a genuine mistake?'
‘’ஒங்க பொட்டி கெடச்சுதா?’’
அதுலெ வேல்யூயபில்ஸ் ஜ்வெல்ஸ் ஒன்னும் வெக்கலியே?
கெடைச்சுடும் கவலைப்படாதிங்கோ என்றெல்லாம்.
அக்ஷதை போட்டு ஆசிர்வாதம் செய்தாயிற்று. ஹோமம் ஆரம்பித்தது. நைசாய் நழுவிப்போய் ஸ்டேஷனில் ஒரு கம்ப்ளெயிண்ட் கொடுத்து அப்படியே அந்த பாசெஞ்செரின் விபரம் எதானும் தெரிந்தால் வாங்கி வரலாம் என்று கிளம்பப் பார்த்தேனா, வழியில் சம்மந்தி பிடித்து விட்டார். ’தனியாய் எங்கே போவேள். ஹோமம் முடிஞ்சுடட்டும். யாரையானும் ஒங்க கூட அனுப்பறென். இன்னம் 1 மணி நேரத்திலே ஆயிடும்.
அவர் சொல்வதும் நியாயமாய்ப் பட்டது. எனக்கும் ஊர் தெரியாது. சரி என்று உள்ளே வந்து உட்கார்ந்தேன். ஒரு மணி நேரம் ஆச்சு. வாத்யார்கள் நிதானமாய் ஹோமம் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.
சம்மந்தி மாமி என்னை பலருக்கும் அறிமுகம் செய்தி வைத்துக் கொண்டிருந்தாள்: ;
”அகிலா மாமியார். பாவம் காத்தாலெ ட்ரெயின்லெ இவா பொட்டி காணமெ போச்சு.’ உடனே அவர்கள் அவர்களுக்கு நடந்த ஒரு அனுபவத்தை சொல்லுவார்கள். மொத்தத்தில் நாலில் மூன்று பேருக்கு ரெயிலில் பெட்டி தொலைத்த அனுபவம் இருக்கிறது போலிருக்கிறது.
எனக்கோ நேரம் ஆக ஆக மனதுக்குள் குடைச்சல். மெதுவாய் சென்னைக்குப் போன் போட்டுத் தங்கையை போனில் கூப்பிட்டு IRCTC tkt booking சைட்டில் போய் எதானும் ஹெல்ப்லைன் இருக்கிறதா பார் எப்படியானும் அந்த பெர்த்தில் இருந்த ஆளின் விபரம் கிடைக்குமா பார் என்றேன்.
அரை மணியில் அவ்ள் கூப்பிட்டாள். தேடுவதற்கு அவர்களுக்கு pNR number அல்லது passenger name வேண்டுமாம். ஸ்டேஷனில் போய் வாங்கி வா என்றாள்.
சரி எப்படியும் ஹோமம் முடியும் முன் கிளம்ப முடியாது. நேரம் ஆனது ஆச்சு. ஒரு வழியாய் எல்லாம் முடிந்தபின்னரே போவதுதான் மரியாதை என்று பொறுமையாய் காத்திருந்தேன்.
காத்திருக்கும் நேரத்தில் மாமாவை பிடிப்போம் அவருக்கு ரெயில்வேஸில் யாரானும் தெரிந்தால் போனிலேயே இந்த விபரம் வாங்கித்தருவாரா பார்க்கலாம் என்று என் அம்மாவின் சகோதரரை போனில் கூப்பிட்டேன்.. அவர் கோயமுத்தூரில் ஒரு ரிடயர்மெண்ட் காலனியில் 15 வருடங்களாய் வசிக்கிறார். அவரது காலனியில் பலரும் அரசாங்கத்தில் உயர்பதவியில் இருந்து ரிடயர் ஆகி, பெண் பிள்ளை எல்லாம் வெளிநாட்டில் இருப்பதால் இது போன்ற காலனியில் வசிக்கிறர்கள். சமைக்க வேண்டாம். தினப்படி லாஜிஸ்டிக்ஸ் பற்றி கவலைப்பட வேண்டாம்.
மாமாவிடம் விபரம் சொன்னேன். அவர் ’இரு ஒரு ரெடயர்ட் ரெயில்வே சீஃப் எஞ்சினியர் எதிர் வீட்டில் இருக்கிறார் அவரிடம் பேசி திரும்பக் கூப்பிடுகிறென்’ என்று சொல்லி விபரம் எல்லா வாங்கிக் கொண்டார்.
மறுபடியும் ஒரு மணி நேரம் ‘கிடைத்ததா? கிடைத்ததா?’ என்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லிக்கொண்டு உட்கார்ந்திருந்தேன்.
இதற்கு நடுவே பலவிதமான அட்வைஸ்:
நீங்க ஒரு செயின் போட்டு பெட்டியை கட்டிடணும் ( இது சரிதான். இனிமேல் ரயிலில் போவதென்றால் முதலில் எடுத்து வைக்க வேண்டியது ஒரு செயின்தான்.)
ஒரு எஃப் ஆர் லாட்ஜ் பண்ணிடுங்கோ ( இதுவும் சரிதான். முதலிலேயே நான் இதை செய்திருக்க வேண்டும்)
"பெட்டியை ஸ்டேஷன் மாஸ்டரிடம் குடுத்துடாதீங்கோ அப்புறம் அவர்கள் மேல் உங்களுக்கு இருக்கும் ஹோல்ட் போயிடும்." ( இது தவறு என்று பிறகு புரிந்தது. நான் இந்த ஸ்டேஷன் கம்ப்ளெயின்ட் கொடுத்து பெட்டியை கொடுத்திருந்தால் எனக்குநன்மையாய் இருந்திருக்கும்.)
இதெல்லாம் பட்டால்தானே தெரிகிறது!
நல்ல் வேளை ஒரு மணி நேரத்தில் மாமாவிடமிருந்து போன் - அந்த அசட்டின் முழு ஜாதகமும் கையில். பெயர், வஃப் ஆஃப், அட்ரெஸ், மொபைல் நம்பர், வீட்டு போன் நம்பர்எல்லாம்.
அவர்களுக்கு போன் பேசி அவர்கள் திருப்பூர் ரெயில்வே போலீஸ்காரனுடன் உட்கார்ந்திருப்பது வரை கண்டுபிடித்துவிட்டார் ரிடயர்ட் சீஃப் எஞ்சினியர்.
ஆஹா பெட்டி கிடைத்தே விட்டது என்ற சந்தோஷத்தில் அவர் கொடுத்த நம்பருக்கு போன் செய்தேன்.
'என்ன இப்படி இன்னொருவர் பெட்டியை எடுத்துப் போய் விட்டீர்களே ?' என நிதானமாய்தான் ஆரம்பித்தேன்.
உடனே அந்த மனிதர் என் மேல் பாய்ந்தார் ' என்ன சொல்றீங்க மேடம், தாராபுரத்துலே வீட்டுக்கு போனதும் தவறு தெரிந்து இங்கே திருப்பூர் ரயில்வே போலிஸ் ஸ்டேஷனுக்குவந்துட்டோம். எங்க மேலே தப்பு சொல்றீங்க?'
இது என் பெட்டியை எடுத்துப்போன பெண்மணியின் கணவர்.
பின்பு போனை அந்த ரயில்வே போலிஸ்காரரிடம் கொடுத்தார்: அவர் என்னிடம் " சரி மேடம், உங்க பேட்டியில் என்ன சாமான் எல்லாம் இருந்தது சொல்லுங்க?' என்றார். நான் சேப்டி பின் வரையில் விபரம் சொன்னதும், 'ஆமாம் உங்க பெட்டிதான். நீங்க என்ன பண்றீங்க...இங்க திருப்பூர் ஸ்டேஷனுக்கு வந்து அவங்க பெட்டிய கொடுத்துட்டு உங்க பெட்டிய வாங்கிட்டு போய்டுங்க" என்றார்.
அப்போது மணி மதியம் 2. மறுநாள் காலை 8 மணிக்கு நான் ஏர்போர்டுக்கு கிளம்ப வேண்டும். திருப்பூருக்கு டேக்ஸியில் போக வேண்டும் என்றால் மொத்தம் 5 மணி நேர பயணம் 2000 ருபாய் டேக்ஸி செலவு.
இது வரைக்கும் மனிதர்கள் ஒரு 'ஸாரி' கூட சொல்லவில்லை. என்ன மாதிரி மனிதர்கள் பார்த்தீர்களா.
'என்ன இது தவறு உங்களிடம். என்னைப் போய் அங்கு வர சொல்கிறீர்களே. இது நியாயமா? என்றதற்கு 'என்ன சும்மா தவறு தவறு அப்ப்டிண்றீங்க. நிங்களும்தான் தவறு பண்ணிருக்கீங்க?' என்றார் அந்த பெண்ணின் கணவர்.
!!!
(ஒரு வேளை அவர் மனைவி இருந்த கோச்சில் பிரயாணம் செய்ததே தவறோ? பின்னர் புரிந்தது நான் அவர்கள் பெட்டியை எடுத்து வந்தது தவறு என்று. )

கொஞ்சம் வாக்குவாதத்திற்குப் பிறகு முதலில் 'சரி கோயமுத்தூர் ஸ்டேஷனில் கொண்டு வந்து கொடுக்கிறோம் ' என்றவர்கள் பத்து நிமிடத்துக்குப் பின் போன் செய்து 'அதெல்லாம் வர முடியாது. நங்கள் இங்கு ஸ்டேஷனில் ஒப்படைத்து விட்டோம். நீங்களும் அங்கே ஸ்டேஷனில் கொடுத்து விடுங்கள். எங்களால் அங்கெல்லாம் வர முடியாது' என்று விட்டார்கள்.
'சரி நானே வருகிறேன். டேக்ஸி செலவை ஷேர் செய்து கொள்ளுங்கள்' என்றதற்கு ' நீங்கள் ப்ளேனில் வருவீர்கள் அதற்கெல்லாம் நாங்கள் கொடுக்க முடியாது' என்று போனை வைத்து விட்டு பிறகு எனது காலை எல்லாம் கட் செய்து விட்டனர்.
கடைசியில் யாரையோ அனுப்பி பல கஷ்டங்களுடன் பெட்டிக் கையில் வந்த போது மணி நள்ளிரவு 12. பெட்டியை எடுத்துப் போன பெண்மணிக்கு வீட்டிலிருந்தபடியே சௌகர்யமாய் அவர்கள் பெட்டி கிடைத்தது. எல்லாத் திண்டாட்டமும் எனக்குத்தான்.
தெரியாத ஊரில் மாற்றுத் துணி கூட சரியாய் இல்லாமல், நாள் முழுவதும் பெட்டியைத் தேடி அலைந்து, பின்னால பணமும் செலவழித்து, மனதால் கஷ்டப்பட்டு திரும்ப வந்தால் போதும் என வந்து சேர்ந்தேன்.

இந்த அனுபவத்தில் கற்றதும் பெற்றதும்:
1. இறங்கும் முன் பெட்டியை சரி பார்த்து நம்முடையது இல்லை என்றால் உடனே கம்ப்ளயின்ட் செய்ய வேண்டும்.
2. நம் பெட்டிகளை செயின் போட்டுக் கட்டி விடுவது நல்லது.திருடிப்போனால்தான் என்றில்லை இப்படி மாற்றி எடுத்துபோனாலும் நமக்குத்தான் திண்டாட்டம். மனிதர்களில் நியாயமானவர்கள் மிகக் குறைந்து போய் விட்டார்கள்.
3.நியாயம் நம் பக்கம் இருந்து ஒரு பயனும் இல்லை. போலீசுக்கும் ரெயில்வேசுக்கும் நியாயத்தைப் பற்றிய கவலை இல்லை. ப்ரோசீஜர்தான் முக்கியம்.
4. இதில் சரியான ப்ரோசீஜர் என்ன என்பதை யாரும் நமக்குச் சொல்ல மாட்டார்கள். நாமே தெரிந்து வைத்துக் கொள்ளுவது நல்லது. ( அதற்குத்தான் இவ்வளவு விபரமும் உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.)

எல்லாவற்றுக்கும் மேல் கற்றுக்கொண்ட வாழ்க்கைப்பாடம்:
இன்னொருவருடைய இக்கட்டான நிலைமையை நமக்கு சாதகமாய் பயன்படுத்திக் கொள்ளுவது புத்திசாலித்தனம்.
In today's time it is not enough to be right and good, it is necessary to be smart.

9 comments:

  1. Too bad you had to go through all this. Hope the child liked the gifts you'd taken !

    ReplyDelete
  2. அட கஷ்டகாலமே!
    இப்படியும் சில மனிதர்களா?
    இனிமே செயின்-ஓட போக வேண்டியதுதான்!

    ReplyDelete
  3. @boc: still reeling under the stress of the experience.
    I went around carefully looking for lacware toys made exclusively by a company in bangalore. Company is going out of business. picked up some from their last stock. Hope the child liked it. I dropped it off on my way to the airport the next day. didnt even have time to wait till they opened them. you can see them here:
    http://www.indiamart.com/mayaorganicindia/products.html
    ma me pa, duby duba and cubby

    Yaadayaada: amaam petti illainalum chain mukkiyam!

    ReplyDelete
  4. என்ன கொடுமை இது? தப்பு பண்ணிட்டு ஒரு சாரி சொல்றதுக்கு மனுஷாளுக்கு ஈகோ!! எனக்கு இதே மாதிரி ஆச்சு, ஆனா because of stupid lufthansa's mistake. and i was standing in the airport for 4 hours at some godforsaken hour and not one soul apologized! thats what hurts very much, you know? that people dont care. நம்ப தான் லூசு மாதிரி மத்தவா தப்பு பண்ணினா கூட சாரி சாரி நான் தான் சாரி ன்னு வழியுவோம்! ச்சே!

    ReplyDelete
  5. @B.O.O.:அடாவடி, என் காரியத்தை சாதிச்சுக்க என்ன வேணா செய்யலாம், நியாயமாவது, அநியாயமாவது.. அப்படி நினைக்கிறவர்களிடம் சாரி எதிர் பார்க்கலாமா? என் பெட்டியை பத்திரமாய் அனுப்பி வைத்தார்களெ அதுவே பெரிசு!
    நீ சொல்வது சரிதான். நம்ம வளர்ப்புதான் சரி இல்லை. ஊருக்கு முன்னாடி போய் நூறு சாரி சொல்லி அசடு வழிந்து...

    ReplyDelete
  6. bayangara alattal, thimirodu nadanthu kolavathu, romba aggressive aaga irupadhu ellam dhan ippa "smart" endru solgiraargal. So, survive seiya vendum endral naamalum anda madri ellam dhaan irukanum. Aaana inda madri aatkalukku ellam vera yaaravadu "aapu" veppanga. Don't worry.

    ReplyDelete
  7. @kurumbukaari: Amam, appadi ellam irukka varamatengaradhe. valartha murai thappu - nyayam, aniyayam enrellam paguththup parkkak katrukkoduthadhu thappu.
    Avangalukku ennikanum Yaranum AApu vechalum adhai pathu rasikum bakiyam enakku iruukadhe.
    Innonru: murpagal pirarkinna seidhadhinaaldhan idhu vandadhu enru avargalukku puriyumo?

    ReplyDelete
  8. unga train padicha udanae ungala romba pidichu pochu.ungaloda ellathium padika arambichiten

    ReplyDelete
  9. enna aachu? romba naala aala kanume? all is well?

    ReplyDelete